logo

இருளின் ஒளி | Irulin oli | Chapter 8

Mars

Administrator
தீப்தி - என்கிட்ட இருக்கு. நம்ம ஃபோன் பண்ணி ஹெல்ப் கேக்கலாமா???



நவ்யா - இந்த ஹவுஸ் ஓனர் ஃபோன் நம்பர் அந்த வெப்சைட்டைல இருக்குதே. அந்த நம்பருக்கு கூப்டு பாரு. நமக்கு சாவி குடுத்த ஆளு ஃபோன் எடுக்குறானா பார்க்கலாம்.



அதே போல் தீப்தி ஃபோன் செய்ய, அந்த பக்கம் யாரும் எடுத்த பாடு இல்லை. நிறைய முறை முயற்சி செய்து பார்க்க பலன் என்னவோ பூஜியம் தான்.



ஷிவா - நினைச்சேன். அந்த பீடா வாயன் கண்டிப்பா எடுக்க மாட்டான். எங்கயாச்சும் குடிச்சிட்டு மட்டாயாகி கிடப்பான்.




தீப்தி - வேற யாருக்கும் ஃபோன் பண்ணி ஹெல்ப் கேக்கவா? என்றாள் எதிர்பார்ப்பாக



யுவன் வேண்டாம் என்று தலையை ஆட்டினான். அவனுக்கு இதில் யாரையும் இழுத்து விட மனம் இல்லை. தெரிந்தே அவர்களை உதவிக்கு வீட்டுக்குள் வர வைப்பது குற்றவுணர்ச்சியாக இருந்தது. மேலும் வெளியே இருப்பது சாதாரணமாக மிருகம் போல் இல்லை, எனவே இவர்களே ஏதேனும் செய்து தப்பிக்க எண்ணினான்.



அதுவுமில்லாமல் அந்த மிருகம் உதவி செய்ய வருபவரை கொன்றுவிட்டால், பழி இவர்கள் மேல் அல்லவா விழும். யாரும் பேய் அந்த கொலை செய்தது என்பதை நம்ப மாட்டார்கள் என்பதால் வேண்டாம் என்றான்.

அதை மற்றவர்களிடம் சொல்ல அனைவரும் ஒப்புக்கொண்டனர்.




நவ்யா - இதை பத்தி நம்ம ஏன் கூகிள் ல தேடி பார்க்க கூடாது.



பொதுவாக எதுவும் தெரியாத போது அதை கூகிளில் பார்ப்பது தான் எல்லோரும் வழக்கம். இது நல்ல யோசனையாக இருக்க, தீப்தி கையில் உள்ள ஃபோன் ஷிவா வாங்கிக்கொண்டு இவர்களை பார்த்த அந்த மிருகம் பற்றியும், அபி சொன்னது வைத்து அது அடைபட்டு இருந்த கண்ணாடி டப்பா பற்றி தேடிப் பார்த்தான்.



எல்லோருக்கும் ஒரு புது நம்பிக்கை பிறந்தது. இங்கு இருந்து தப்பிக்க ஏதோ ஒரு வழி கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பினர்.



அதில் வந்தது எல்லாம் நாய் பொம்மை போலவும், இல்லை சாதாரண கண்ணாடி பெட்டி மட்டுமே வந்தது. தேடி தேடிப் பார்த்தது சலிப்பு அடைந்தது தான் மிச்சம். துளிர் விட்ட நம்பிக்கை வாடி போனது.



வெளியே அது கதவை உடைத்து விடும் போல். நள்ளிரவு ஆக ஆக அதன் பலம் கூடிக்கொண்டே சென்றது. இடையில் அதான் ஊளை சத்தம் தான் யாராலும் சகிக்க முடியவில்லை.



யுவன் - அந்த ஃபோன் என்கிட்ட கொடு என்றவன் வேகமாக சில பல வெப்சைட்டில் சென்று பார்த்தான்.



இது மாதிரி பழங்காலத்தில் வாழ்ந்த ஜந்துக்கள், அமானுஷ்ய பொருட்கள் பற்றிய குறிப்பு சிலர் ஆராய்ச்சி செய்து சேகரித்து வைத்தது கிடைத்தது. ஒரு சிலர் புத்தகமாக பதிவிட்டு இருந்தனர்.



அவர்கள் பார்த்த வரையில் அவ்வளவு அமானுஷ்யம் நடந்து உள்ளது என்பது அப்போது தான் தெரியவந்தது. ஏகப்பட்ட குறிப்புகள், படங்கள், உண்மை சம்பவம் என தொடங்கி அமானுஷ்ய ஆத்மாக்களை அடைக்கும் மந்திரம் வரை குறிப்பிட்டு இருந்தனர்.



ஆனால் இவர்கள் தேடிய இந்த நாய் பற்றிய தகவல் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. நேரம் ஆக ஆக நம்பிக்கை தோய்ந்து கொண்டே சென்றது. வெளியே இருக்கும் மிருகம் கதவை பாதி உடைந்துவிட்டது. அந்த மர பீரோல் தான் இப்போது தடுப்பாக இருந்தது.




பல நிமிடம் தேடலுக்கு பின் யுவன் கண்டெடுத்த தகவல அவர்களை உலுக்கியது. அந்த மிருகம் ஒரு சாதாரண நாய் அல்ல; பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு அமானுஷ்ய உயிரினம் என்று தெரியவந்தது. பலபேர் காவு வாங்கி இருக்கிறது எனவே அதனை மந்திர கட்டு போட்டு அதனை அடைத்துவைத்து உள்ளனர். அதனை தான் இப்போது அபி திறந்து இருக்கிறான்.



அந்த குறிப்பில் அந்த நாயின் வரைப்படம் இருந்தது. அதனை அடைபட வைத்த கண்ணாடி பெட்டி படமும் இருந்தது. அதனை கட்டுபடுத்தியவர் ஓவியம் கொஞ்சம் அழிந்து போய் காணப்பட்டது.



அபிஷேக் - டேய் இந்த பெட்டி தான் டா அது. இதை தான் நான் திறந்தேன்.



அபிஷேக் அதனை திறந்ததின் மூலம் அந்த மந்திரம் உடைந்துவிட்டது. அதனை அந்த நாய், கட்டுப்பாடு இழந்து வெளியே வந்துவிட்டது. மீண்டும் அதன் வேட்டையை தொடர ஆரம்பித்துவிட்டது.



தீப்தி ஒரு பக்கம் அழுக, நவ்யா கண்ணில் நீர் கோர்த்து இருந்தது. அபிஷேக் தலையில் கையை வைத்து அமர்ந்துவிட்டான்.



ஷிவா - மச்சி, அதை எப்படி திரும்ப கட்டுபடுத்தனும் எதுவும் போட்டு இருக்கா பாரு?



தீப்தி - கண்டிப்பா அதுக்கு வீக்னஸ் எதுவும் இருக்கும். அது பத்தி எதுவும் போட்டு இருக்குதானு நல்லா தேடி பாருங்க டா



யுவன் இல்லை என்று சோகமாக தலையை ஆட்டினான்.



ஷிவா, யுவன் கையில் இருந்த ஃபோன் வாங்கி பார்க்க; அவன் சொன்னது போல அந்த மிருகம் திரும்ப அடைப்பட எதுவும் குறிப்பு இல்லை.



நவ்யா - அய்யயோ, இப்போ எப்படி இங்க இருந்து தப்பிக்க போறோம். நல்லா மாட்டிகிட்டோம்.



அபிஷேக் - எல்லருகிட்டயும் நான் மன்னிப்பு கேக்குறேன். என்ன மன்னிசிடுங்க. என்னால தான் இவ்வளவும். நான் தான அந்த பெட்டிய திறந்தேன். இப்போ உங்க எல்லாரும் உயிரும் என்னால ஆபத்துல இருக்கு

இப்படி ஆகும்னு சத்தியமா நான் எதிர்பார்க்ககல என்று கண் கலங்கி விட்டான்.



நண்பர்கள் அவனை எப்போதும் சிரித்தே பார்த்து பழகியவர்கள். இப்போது கண்கலங்கி நிற்கும் போது ஒரு மாதிரி ஆகி விட்டது.



யுவன் - அபி, என்ன டா பேசுற?! நம்ம எல்லாரும் இதை சேர்ந்தே சமாளிக்கலாம். அழாத டா.



நவ்யா - ஆமா அபி, தப்பிச்சு போக ஏதாச்சும் ஒரு வழி கண்டிப்பா இருக்கும்.



தீப்தி, ஷிவாவும் அவன் கண்ணீரை துடைத்து விட்டனர்.



இவர்களின் அன்பு அவனை மேலும் சங்கட படுத்தியது. கோவபட்டு அடித்து இருந்தாலும் மனம் கொஞ்சம் சமாதானம் ஆகி இருக்குமோ என்னவோ!



அபி - பரவாயில்லை டா. இதை நான் தான ஆரம்பிச்சேன் நானே முடிச்சு வைக்கிறேன். நான் இந்த கதவை திறந்துட்டு வெளிய போறேன். அந்த மிருகம் என்ன துறத்துற அப்போ நீங்க எல்லாம் தப்பிச்சு வெளிய போயிடுங்க. சரியா? வாங்க என கதவு அருகில் சென்று விட்டான்.



ஷிவா - டேய், லூசு மாதிரி பண்ணாத டா. நீ எங்களுக்கு முக்கியம். உன்ன அப்படி எல்லாம் வெளிய அனுப்பிட மாட்டோம். எது வந்தாலும் சேர்ந்து தான் பண்ணுவோம் என்றான் உறுதியாக.



கண்களில் வழியிம் கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் கதறி அழுது விட்டான். நின்ற இடத்தில் முட்டி போட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதான். பார்த்த யாருக்கும் பொறுக்க வில்லை… நால்வரும் சேர்ந்து அவன் அருகில் அமர்ந்து அவனை நாலாபக்கமும் அணைத்துக்கொண்டனர்.



ஒருவழியாக சமாதானம் செய்து, இங்கு இருந்து எப்படியாவது தப்பிப்பது என்று முடிவு செய்தனர். இப்போது பாதுகாப்பான இடம் என்றால் அது இவர்கள் இருக்கும் அறை தான். இன்னும் அந்த மிருகம் வெளியே தான் இருக்கிறது, எனவே காலை வரை இங்கேயே இருக்க முடிவு செய்தனர்.



யுவன் இன்னும் ஃபோனில் ஏதேனும் தகவல கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டு இருந்தான். ஷிவா மடியில் தீப்தி தலை வைத்து படுத்து இருந்தாள். அபிஷேக் அருகில் நவ்யா அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.



தீப்தி - டேய், விடிய போகுது டா. ரங்கன் அண்ணா எல்லாருக்கும் காலையில சாப்பாடு கொண்டு வருவாரு. அவரு இந்த மிருகம் கிட்ட மாட்டிக்க போராரு என்றாள் கவலையாக.



அப்போது தான் அவர்களுக்கு இந்த விடயம் நியாபக்த்துக்கு வந்தது. எல்லோரும் பரப்பரபாகினர்.



அபி - அவர் நம்பர் இருக்கு தான. தீப்தி நீ தான அவரு கிட்ட நம்பர் வாங்குன? யுவன், அவருக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னு சொல்லு டா என்றான் அவசரமாக.



உள்ளே இவர்கள் பேசிக்கொண்டு இருக்க… வெளியே அந்த மிருகம் கதவை உடைக்க வெகுவாக முயற்சி செய்து கொண்டே இருந்தது. இரவில் இருந்து பலம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.



அவர்கள் தப்பித்ததை எண்ணி கோவம் கொண்டு ஹாலில் இருந்த பொருட்களை சேதம் செய்தது. வெளியில் பொருள் உடையும் சத்தம் உள்ளே வரை கேட்டது.



லேசாக சூரியன் எட்டிப் பார்க்க..



நண்பர்கள், ரங்கனுக்கு ஃபோன் செய்து கொண்டு இருந்தனர். அவர் எடுத்த பாடு இல்லை.



நவ்யா - அவரு வந்துட்டு இருப்பாரோ, பாவம் அவரு. திரும்ப ஃபோன் செஞ்சி பாருங்க என்றாள் பதற்றமாக.



வெளியே ரங்கன் குரல் கேட்டது.



ரங்கன் - தம்பி, எங்க இருக்கீங்க? தம்பி, சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன்.



உள்ளே இருந்தே அனைவருக்கும் பயம் அதிகரித்தது. அந்த மிருகம் அவரை விழுங்க போவது உறுதி என்றே தோன்றியது. ஓரிரு நிமிடம் பின் அவரின் குரல் அப்படியே நின்றுவிட்டது. இதற்கு மேல் பொறுக்காமல் யுவன், அபி , ஷிவா அந்த மர பீரோலை நகர்த்தி வெளியே வந்து பார்த்தனர்.
 
Top