நவ்யா - எங்களுக்கு ஒன்னும் இல்லை. அபிக்கு தான் என்று அவன் பக்கம் திரும்பினாள்.
ஷிவா - ஐய்யோ என்னடா ஆச்சு. சீக்கிரம் கார்ல ஏறுங்க. போற வழியில ஹாஸ்பிடல் இருக்கும். தீப்தி அவளை விடு கார்ல ஏறுங்க முதல்ல என்று விரட்டினான்.
யுவன் அந்த பங்களாவை பூட்டி விட்டு அதன் அருகில் சாவியை வைத்து விட்டான். அந்த பீடா வாயன் சாவியை எடுத்துக்கொள்வான்.
நேரம் நள்ளிரவு இரண்டு இருக்கும்….
ஷிவா கார் ஓட்ட… அருகில் யுவன். பின்ருக்கையில் மற்ற மூவர். அபி வேதனையில் துடித்தான். அனைவரும் சமாதானம் செய்த படியே வந்தனர்.
யாருக்கும் யுவனி அந்த பெட்டியை எங்க வைத்த என்று கேட்க தோன்றவில்லை. அனைவரின் கவனம் அபி மேல் தான் இருந்தது. நவ்யா, யுவன் இருவருக்கும் சிறு சிறு காயம் ஏற்ப்பட்டது. அதற்கு இவர்களே மருந்து போட்டுக்கொண்டுடனர்.
மெயின் ரோட்டில் ஒரு சிறிய கிளினிக் இருக்க அங்க ஷிவா காரை நிறுத்தினான். அனைவரையும் பார்த்து…
ஷிவா - அங்க யாரும் இந்த காயம் எப்படி ஆச்சுன்னு கேட்டா… ஓநாய் தாகுச்சுனு சொல்லனும் புரியுதா. ஏன்னா அந்த காயம் ஒரு நாய் பண்ணதுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அவ்வளவு ஆழமா இருக்கு என்றான் முன்னெச்சரிக்கையாக.
கிளினிக் உள்ளே அபியை கூட்டிகிட்டு தீப்தி, ஷிவா மட்டுமே சென்றனர்.
காரில் யுவன், நவ்யா தனித்து விடப்பட்டனர். கார் கதவு திறந்து பின்னிருக்கைக்கு வந்தான் யுவன். வந்தவன் வேகமாக அவளை அணைத்துக்கொண்டான். அவனின் அணைப்பு அவ்வளவு இறுக்கமாக இருந்தது. யாரும் அவளை தன்னிடம் இருந்து பறித்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது.
நவ்யா - யுவா எனக்கு ஒன்னும் இல்லை. சின்ன அடி தான். நீ தான் ரொம்ப ரிஸ்க் எடுத்த. உன்ன மாதிரி மனசு யாருக்கும் வராது.
யுவன் - நீ மட்டும் என்னவாம். எனக்காக ஆபத்துனு தெரிஞ்சும் அங்க வந்த என்றான். கண்கள் கலங்கி இருந்தது. அவன் கன்னத்தை இரு பக்கமும் பற்றி நெற்றியில் முத்தமிட்டாள். அவன் அதனை ஆழ்ந்து அனுபவித்தது அவன் கண்கள் மூடி ரசித்ததில் தெரிந்தது.
நவ்யா - நான் உனக்காக வந்தேன். ஆனா நீ யாருக்கும் எதுவும் ஆகிட கூடாதுனு எல்லாம் பண்ண. அது தான் பெருசு யுவா.
யுவன் அவளை மீண்டும் அணைத்துக்கொண்டான்.
யுவன் - உன்னோட காதல்ல வாழ்ந்து பாக்க ஆசையா இருக்கு என்றான் அவள் காதில். அதற்கு பதில் ஒரு சிரிப்பு மட்டுமே அவளிடம்.
அபி கட்டு போட்டு வந்து உடன் மீண்டும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.
ஷிவா - நம்மளுக்கு இன்னைக்கு லீவ் தான. எல்லாரும் என்னோட வீட்டுக்கு வாங்க. மதியம் மேல கிளம்புங்க. எல்லாரும் டயர்ட் ஆ இருக்கோம் நடந்த விஷயம் அப்படி. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும். எல்லாருக்கும் ஓகே தான?
அனைவரும் சரி என்றனர். ஷிவா அருகில் அபி அமர்ந்து துங்கிக்கொண்டு இருந்தான். பின்னாடி நவ்யா நடுவில் அமர்ந்து இருந்தாள். தீப்தி நவ்யா மடியில் படுத்து தூங்க… நவ்யா யுவனின் தோளில் படுத்து துங்கிக்கொண்டு இருந்தாள். போகும் போது இருந்த சந்தோசம் இப்போது இல்லை யாரிடமும்.
விடியல் காலை ஷிவா வீட்டில் அனைவரும் வந்து இறங்கினர். அபியை உள்ளே அழைத்து வந்து படுக்க வைத்தனர். யுவன், ஷிவா அனைவரின் உடமைகளை எடுத்து வந்தனர். யுவன் அவனின் தோல் பையை மட்டும் காரில் வைத்துவிட்டான்.
ஆளுக்கு ஒரு இடத்தில் படுத்ததும் உறங்கி விட்டனர். இரண்டு நாள் தூங்கவே இல்லை யாரும். கண்கள் அதுவாக மூடிக்கொண்டது.
நவ்யா கனவில் அந்த மிருகம் வந்து பயம் காட்ட.. அடித்து பிடித்து எழுந்தாள். தூக்கத்தில் கத்தி இருப்பாள் போல் நண்பர்கள் எல்லாம் அவளை சுற்றி உட்கார்ந்து எழுப்பிக்கொண்டு இருந்தனர்.
ஷிவா - ஒன்னும் இல்ல நவி. நம்ம அங்க இருந்து வந்தாச்சு. பயப்படாத சரியா. வா சாப்பாடு வாங்கி வச்சிருக்கோம். வந்து சாப்பிடு.
தீப்தி அவள் கூடவே இருந்தாள். யுவன் நடப்பதை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். என்ன செய்ய முடியும். நினைவில் இருந்து அதை அழிக்கத் தான் முடியுமா??
அனைவரும் அமைதியாகவே உண்டனர். இவர்களை உயிர்ப்புடன் வைத்து இருக்கும் அபி படுத்து விட்டதால் எல்லோருக்கும் சோகமாக நேரம் சென்றது. அந்த அமைதியை முதலில் உடைத்தது அபி
அபி - எனக்கு ஐடியா தோணுது மக்களே.. எல்லோரின் கவனம் அவன் பக்கம் சென்றது. அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஆர்வமாக பாக்க
அபி - நான் ஒரு நாயை வாங்கி வளர்க்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன நினைக்கிறீங்க என்று நக்கலாக கேட்டான். அவன் அவர்களை சந்தோச படுத்ததே இவ்வாறு பேசுகிறான் என்று புரிந்து கொண்டு நண்பர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். விட்டு போன சிரிப்பு சத்தம் மீண்டும் கேட்டது.
தீப்தி - அய்யயோ, இனிமேல் அழகான பப்பி நாய் பார்த்தா கூட நான் கொஞ்ச மாட்டேன் ப்பா என்றாள் பீதியுடன்.
பேசியும், சிரித்து நேரம் கடந்தது. மதியம் நேரம் தாண்டிய பிறகு எல்லோரும் ஷிவா வீட்டில் இருந்து கிளம்பினர். கூட்டி வந்தது போலவே யுவன் அனைவரையும் அவரவர் வீட்டில் விட்டான். முதலில் அபி, பின் தீப்தி அடுத்து நவ்யா.
தீப்தி இறக்கி விட்டபின் இருவர் மட்டுமே தனியா காரில் இருந்தனர். மெதுவாக நவ்யா கையை பிடித்து, அவன் கையில் பதுக்கி வைத்துக்கொண்டான். பின் உதட்டில் அருகே சென்று சின்ன சின்ன முத்தம் வைத்து அவளை வெட்கப்பட வைத்தான்.
நவ்யா வீடு வந்த உடன்… அவள் இறங்கும் முன் ஒரு முறை அனைத்து விடுவித்தான்.
யுவன் - நவி நீ இன்னும் சரியாகலனு எனக்கு தெரியும். எல்லோருக்காகவும் சிரிச்சனு எனக்கு புரியுது. உனக்கு பயமா இருந்தா எனக்கு ஃபோன் பண்ணு சரியா. அடுத்த நிமிஷம் உன்ன தேடி நான் வருவேன். புரியுதா? என்று சத்தியம் வேறு வாங்கிக்கொண்டான்.
அவளை பிரியவே மனம் இல்லாமல் கிளம்பி சென்றான். அவன் வீடு வந்தது ‘ அந்த ‘ ஒரு பையை மட்டும் விட்டுவிட்டு மற்ற பொருட்களை எடுத்து கொண்டு அறைக்கு சென்றான்.
எல்லோருக்கும் மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்தது. என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் நடந்த நிகழ்வே நியாபகம் வந்தது. அவர்கள் கூட இருக்கும் ரூம் மேட் உடன் நேரம் செலவு செய்து மறக்க முயற்சி செய்தனர்.
நவ்யா அன்று இரவும் தூக்கத்தில் கனவு வந்து முழித்து விட்டாள். உடை எல்லாம் வேர்த்து, இதயம் வேகமாக துடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் நடு இரவில் அழுதாள். என்ன செய்தாலும் அதில் இருந்து விடுபடவே முடியவில்லை. அப்போது யுவன் நியாபம் வர உடனே அவனுக்கு ஃபோன் செய்தாள்.
அவனோ ஃபோன் எடுக்க நேரம் ஆக… அந்நேரம் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணும்போது யுவன் ஃபோன் எடுத்துவிட்டான்.
நவ்யா விசும்பல் சத்தம் மட்டுமே கேட்டது.
யுவன் - மா, நான் தான் வெளிய இருக்கேன். வந்து கதவை திற என்று முடிக்கும் முன் கதவை திறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதுகொண்டு இருந்தாள்.
யுவன் - ஷ்ஷ்ஷ்ஷ், எதுக்கு இந்த அழுகை, அதான் நான் வந்துட்டேன்ல. பயமா இருந்தா தூங்குறதுக்கு முன்னாடியே ஃபோன் பண்ணிருக்கலாம்ல. என்கிட்ட சொல்றதுக்கு என்ன ம்ம்? என்று மெதுவாக வினாவினான்.
அணைப்பில் இருந்த படியே அவன் முகத்தை பார்த்தாள் ஒழிய எதுவும் பேச வில்லை.
யுவன் - என் கூட நம்ம வீட்டுக்கு வர்றியா? ரெண்டு மூணு நாள் இரு இந்த வீக் எண்ட் திரும்ப உன்னோட வீட்டுக்கு வந்து விட்டுறேன். என்கூட வர உனக்கு ஓகே வா??
முடி எல்லாம் களைந்து, கண்கள் தூக்கம் இல்லாமல் சிவப்பாக பார்ப்பதற்கே பாவமாக இருந்தாள்.
நவ்யா சரி என்றாள். யுவனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. மற்றவர்கள் போல் நவ்யா இல்லை, நெருங்கிய நண்பர்களிடமே ஒருசில விஷயம் தான் சொல்லுவாள்… மற்றவர்களிடம் அதுவும் பழக மாட்டாள் எனவே நடந்த விஷயம் மறக்க அவளுக்கு திசை திருப்ப எதுவும் இல்லை. எனவே யுவன் அவளை அவனுடன் வைத்துக்கொள்ள முடிவு செய்தான்.
அவளை அவள் நண்பர்களுடன் இருக்கும் வீட்டில் விட்டதில் இருந்தே அவனுக்கு மனசு கேட்கவில்லை. எனவே நள்ளிரவு என்று பாராமல் பைக் எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். வந்து சிறிது நேரம் தான் ஆகி இருக்கும் நவ்யா ஃபோன் செய்து விட்டாள்.
அவன் வீட்டுக்கு அவளை கூட்டி வந்த பின் தான் அவனுக்கு நிம்மதியான தூக்கம் வந்தது. காதலி அருகில் இருக்க, உறக்கம் தானாக வந்தது.
நவ்யா பயத்துடன் தான் அவள் அறையில் இருந்தாள்… ஆனால் இப்போது காதலன் அருகாமை இருக்க, படுத்ததும் கண்களை தானாக மூடிக்கொண்டது.
இவ்வாறே இந்த வாரம் கடந்தது. யுவன் நவ்யா ஒரே வீட்டில் இருந்தாலும் அணைப்பு, முத்தம் இதுவே போதுமானதாக இருந்தது இருவருக்கும். அவனுடன் இருக்கும் ஒரு ஒரு நிமிடமும் கனவில் வாழ்வது போல் தோன்றியது. இது வரைக்கும் இவள் தான் அவள் குடும்பத்துக்கு பார்த்து பார்த்து செய்வாள். ஆனால் இவள் அருகில் இருந்து இவள் ஆசையை பூர்த்தி செய்ய யாரும் இல்லை. ஆனால் இந்த ஒரு வாரம் யுவன் அவளை தாக்கினான். அவள் ஆசைப்பட்டது எல்லாம் சமைத்தும், பேசியும், கொஞ்சியும் கொஞ்சம் இயல்புக்கு கொண்டு வந்தான்.
மற்ற மூவரில் வாழ்க்கையும் பழைய நிலைக்கு திரும்பியது. அபி காயம் நன்றாகவே ஆறி இருந்தது.
சனிக்கிழமை எல்லோருக்கும் ஃபோன் செய்து அவன் வீட்டுக்கு கூப்பிட்டான் யுவன். மற்றவர்களும் வரும் வாரு தெரிவித்தனர்.
ஷிவா - ஐய்யோ என்னடா ஆச்சு. சீக்கிரம் கார்ல ஏறுங்க. போற வழியில ஹாஸ்பிடல் இருக்கும். தீப்தி அவளை விடு கார்ல ஏறுங்க முதல்ல என்று விரட்டினான்.
யுவன் அந்த பங்களாவை பூட்டி விட்டு அதன் அருகில் சாவியை வைத்து விட்டான். அந்த பீடா வாயன் சாவியை எடுத்துக்கொள்வான்.
நேரம் நள்ளிரவு இரண்டு இருக்கும்….
ஷிவா கார் ஓட்ட… அருகில் யுவன். பின்ருக்கையில் மற்ற மூவர். அபி வேதனையில் துடித்தான். அனைவரும் சமாதானம் செய்த படியே வந்தனர்.
யாருக்கும் யுவனி அந்த பெட்டியை எங்க வைத்த என்று கேட்க தோன்றவில்லை. அனைவரின் கவனம் அபி மேல் தான் இருந்தது. நவ்யா, யுவன் இருவருக்கும் சிறு சிறு காயம் ஏற்ப்பட்டது. அதற்கு இவர்களே மருந்து போட்டுக்கொண்டுடனர்.
மெயின் ரோட்டில் ஒரு சிறிய கிளினிக் இருக்க அங்க ஷிவா காரை நிறுத்தினான். அனைவரையும் பார்த்து…
ஷிவா - அங்க யாரும் இந்த காயம் எப்படி ஆச்சுன்னு கேட்டா… ஓநாய் தாகுச்சுனு சொல்லனும் புரியுதா. ஏன்னா அந்த காயம் ஒரு நாய் பண்ணதுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அவ்வளவு ஆழமா இருக்கு என்றான் முன்னெச்சரிக்கையாக.
கிளினிக் உள்ளே அபியை கூட்டிகிட்டு தீப்தி, ஷிவா மட்டுமே சென்றனர்.
காரில் யுவன், நவ்யா தனித்து விடப்பட்டனர். கார் கதவு திறந்து பின்னிருக்கைக்கு வந்தான் யுவன். வந்தவன் வேகமாக அவளை அணைத்துக்கொண்டான். அவனின் அணைப்பு அவ்வளவு இறுக்கமாக இருந்தது. யாரும் அவளை தன்னிடம் இருந்து பறித்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது.
நவ்யா - யுவா எனக்கு ஒன்னும் இல்லை. சின்ன அடி தான். நீ தான் ரொம்ப ரிஸ்க் எடுத்த. உன்ன மாதிரி மனசு யாருக்கும் வராது.
யுவன் - நீ மட்டும் என்னவாம். எனக்காக ஆபத்துனு தெரிஞ்சும் அங்க வந்த என்றான். கண்கள் கலங்கி இருந்தது. அவன் கன்னத்தை இரு பக்கமும் பற்றி நெற்றியில் முத்தமிட்டாள். அவன் அதனை ஆழ்ந்து அனுபவித்தது அவன் கண்கள் மூடி ரசித்ததில் தெரிந்தது.
நவ்யா - நான் உனக்காக வந்தேன். ஆனா நீ யாருக்கும் எதுவும் ஆகிட கூடாதுனு எல்லாம் பண்ண. அது தான் பெருசு யுவா.
யுவன் அவளை மீண்டும் அணைத்துக்கொண்டான்.
யுவன் - உன்னோட காதல்ல வாழ்ந்து பாக்க ஆசையா இருக்கு என்றான் அவள் காதில். அதற்கு பதில் ஒரு சிரிப்பு மட்டுமே அவளிடம்.
அபி கட்டு போட்டு வந்து உடன் மீண்டும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.
ஷிவா - நம்மளுக்கு இன்னைக்கு லீவ் தான. எல்லாரும் என்னோட வீட்டுக்கு வாங்க. மதியம் மேல கிளம்புங்க. எல்லாரும் டயர்ட் ஆ இருக்கோம் நடந்த விஷயம் அப்படி. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும். எல்லாருக்கும் ஓகே தான?
அனைவரும் சரி என்றனர். ஷிவா அருகில் அபி அமர்ந்து துங்கிக்கொண்டு இருந்தான். பின்னாடி நவ்யா நடுவில் அமர்ந்து இருந்தாள். தீப்தி நவ்யா மடியில் படுத்து தூங்க… நவ்யா யுவனின் தோளில் படுத்து துங்கிக்கொண்டு இருந்தாள். போகும் போது இருந்த சந்தோசம் இப்போது இல்லை யாரிடமும்.
விடியல் காலை ஷிவா வீட்டில் அனைவரும் வந்து இறங்கினர். அபியை உள்ளே அழைத்து வந்து படுக்க வைத்தனர். யுவன், ஷிவா அனைவரின் உடமைகளை எடுத்து வந்தனர். யுவன் அவனின் தோல் பையை மட்டும் காரில் வைத்துவிட்டான்.
ஆளுக்கு ஒரு இடத்தில் படுத்ததும் உறங்கி விட்டனர். இரண்டு நாள் தூங்கவே இல்லை யாரும். கண்கள் அதுவாக மூடிக்கொண்டது.
நவ்யா கனவில் அந்த மிருகம் வந்து பயம் காட்ட.. அடித்து பிடித்து எழுந்தாள். தூக்கத்தில் கத்தி இருப்பாள் போல் நண்பர்கள் எல்லாம் அவளை சுற்றி உட்கார்ந்து எழுப்பிக்கொண்டு இருந்தனர்.
ஷிவா - ஒன்னும் இல்ல நவி. நம்ம அங்க இருந்து வந்தாச்சு. பயப்படாத சரியா. வா சாப்பாடு வாங்கி வச்சிருக்கோம். வந்து சாப்பிடு.
தீப்தி அவள் கூடவே இருந்தாள். யுவன் நடப்பதை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். என்ன செய்ய முடியும். நினைவில் இருந்து அதை அழிக்கத் தான் முடியுமா??
அனைவரும் அமைதியாகவே உண்டனர். இவர்களை உயிர்ப்புடன் வைத்து இருக்கும் அபி படுத்து விட்டதால் எல்லோருக்கும் சோகமாக நேரம் சென்றது. அந்த அமைதியை முதலில் உடைத்தது அபி
அபி - எனக்கு ஐடியா தோணுது மக்களே.. எல்லோரின் கவனம் அவன் பக்கம் சென்றது. அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஆர்வமாக பாக்க
அபி - நான் ஒரு நாயை வாங்கி வளர்க்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன நினைக்கிறீங்க என்று நக்கலாக கேட்டான். அவன் அவர்களை சந்தோச படுத்ததே இவ்வாறு பேசுகிறான் என்று புரிந்து கொண்டு நண்பர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். விட்டு போன சிரிப்பு சத்தம் மீண்டும் கேட்டது.
தீப்தி - அய்யயோ, இனிமேல் அழகான பப்பி நாய் பார்த்தா கூட நான் கொஞ்ச மாட்டேன் ப்பா என்றாள் பீதியுடன்.
பேசியும், சிரித்து நேரம் கடந்தது. மதியம் நேரம் தாண்டிய பிறகு எல்லோரும் ஷிவா வீட்டில் இருந்து கிளம்பினர். கூட்டி வந்தது போலவே யுவன் அனைவரையும் அவரவர் வீட்டில் விட்டான். முதலில் அபி, பின் தீப்தி அடுத்து நவ்யா.
தீப்தி இறக்கி விட்டபின் இருவர் மட்டுமே தனியா காரில் இருந்தனர். மெதுவாக நவ்யா கையை பிடித்து, அவன் கையில் பதுக்கி வைத்துக்கொண்டான். பின் உதட்டில் அருகே சென்று சின்ன சின்ன முத்தம் வைத்து அவளை வெட்கப்பட வைத்தான்.
நவ்யா வீடு வந்த உடன்… அவள் இறங்கும் முன் ஒரு முறை அனைத்து விடுவித்தான்.
யுவன் - நவி நீ இன்னும் சரியாகலனு எனக்கு தெரியும். எல்லோருக்காகவும் சிரிச்சனு எனக்கு புரியுது. உனக்கு பயமா இருந்தா எனக்கு ஃபோன் பண்ணு சரியா. அடுத்த நிமிஷம் உன்ன தேடி நான் வருவேன். புரியுதா? என்று சத்தியம் வேறு வாங்கிக்கொண்டான்.
அவளை பிரியவே மனம் இல்லாமல் கிளம்பி சென்றான். அவன் வீடு வந்தது ‘ அந்த ‘ ஒரு பையை மட்டும் விட்டுவிட்டு மற்ற பொருட்களை எடுத்து கொண்டு அறைக்கு சென்றான்.
எல்லோருக்கும் மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்தது. என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் நடந்த நிகழ்வே நியாபகம் வந்தது. அவர்கள் கூட இருக்கும் ரூம் மேட் உடன் நேரம் செலவு செய்து மறக்க முயற்சி செய்தனர்.
நவ்யா அன்று இரவும் தூக்கத்தில் கனவு வந்து முழித்து விட்டாள். உடை எல்லாம் வேர்த்து, இதயம் வேகமாக துடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் நடு இரவில் அழுதாள். என்ன செய்தாலும் அதில் இருந்து விடுபடவே முடியவில்லை. அப்போது யுவன் நியாபம் வர உடனே அவனுக்கு ஃபோன் செய்தாள்.
அவனோ ஃபோன் எடுக்க நேரம் ஆக… அந்நேரம் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணும்போது யுவன் ஃபோன் எடுத்துவிட்டான்.
நவ்யா விசும்பல் சத்தம் மட்டுமே கேட்டது.
யுவன் - மா, நான் தான் வெளிய இருக்கேன். வந்து கதவை திற என்று முடிக்கும் முன் கதவை திறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதுகொண்டு இருந்தாள்.
யுவன் - ஷ்ஷ்ஷ்ஷ், எதுக்கு இந்த அழுகை, அதான் நான் வந்துட்டேன்ல. பயமா இருந்தா தூங்குறதுக்கு முன்னாடியே ஃபோன் பண்ணிருக்கலாம்ல. என்கிட்ட சொல்றதுக்கு என்ன ம்ம்? என்று மெதுவாக வினாவினான்.
அணைப்பில் இருந்த படியே அவன் முகத்தை பார்த்தாள் ஒழிய எதுவும் பேச வில்லை.
யுவன் - என் கூட நம்ம வீட்டுக்கு வர்றியா? ரெண்டு மூணு நாள் இரு இந்த வீக் எண்ட் திரும்ப உன்னோட வீட்டுக்கு வந்து விட்டுறேன். என்கூட வர உனக்கு ஓகே வா??
முடி எல்லாம் களைந்து, கண்கள் தூக்கம் இல்லாமல் சிவப்பாக பார்ப்பதற்கே பாவமாக இருந்தாள்.
நவ்யா சரி என்றாள். யுவனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. மற்றவர்கள் போல் நவ்யா இல்லை, நெருங்கிய நண்பர்களிடமே ஒருசில விஷயம் தான் சொல்லுவாள்… மற்றவர்களிடம் அதுவும் பழக மாட்டாள் எனவே நடந்த விஷயம் மறக்க அவளுக்கு திசை திருப்ப எதுவும் இல்லை. எனவே யுவன் அவளை அவனுடன் வைத்துக்கொள்ள முடிவு செய்தான்.
அவளை அவள் நண்பர்களுடன் இருக்கும் வீட்டில் விட்டதில் இருந்தே அவனுக்கு மனசு கேட்கவில்லை. எனவே நள்ளிரவு என்று பாராமல் பைக் எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். வந்து சிறிது நேரம் தான் ஆகி இருக்கும் நவ்யா ஃபோன் செய்து விட்டாள்.
அவன் வீட்டுக்கு அவளை கூட்டி வந்த பின் தான் அவனுக்கு நிம்மதியான தூக்கம் வந்தது. காதலி அருகில் இருக்க, உறக்கம் தானாக வந்தது.
நவ்யா பயத்துடன் தான் அவள் அறையில் இருந்தாள்… ஆனால் இப்போது காதலன் அருகாமை இருக்க, படுத்ததும் கண்களை தானாக மூடிக்கொண்டது.
இவ்வாறே இந்த வாரம் கடந்தது. யுவன் நவ்யா ஒரே வீட்டில் இருந்தாலும் அணைப்பு, முத்தம் இதுவே போதுமானதாக இருந்தது இருவருக்கும். அவனுடன் இருக்கும் ஒரு ஒரு நிமிடமும் கனவில் வாழ்வது போல் தோன்றியது. இது வரைக்கும் இவள் தான் அவள் குடும்பத்துக்கு பார்த்து பார்த்து செய்வாள். ஆனால் இவள் அருகில் இருந்து இவள் ஆசையை பூர்த்தி செய்ய யாரும் இல்லை. ஆனால் இந்த ஒரு வாரம் யுவன் அவளை தாக்கினான். அவள் ஆசைப்பட்டது எல்லாம் சமைத்தும், பேசியும், கொஞ்சியும் கொஞ்சம் இயல்புக்கு கொண்டு வந்தான்.
மற்ற மூவரில் வாழ்க்கையும் பழைய நிலைக்கு திரும்பியது. அபி காயம் நன்றாகவே ஆறி இருந்தது.
சனிக்கிழமை எல்லோருக்கும் ஃபோன் செய்து அவன் வீட்டுக்கு கூப்பிட்டான் யுவன். மற்றவர்களும் வரும் வாரு தெரிவித்தனர்.