logo

இருளின் ஒளி | Irulin oli | Episode 2

Mars

Administrator
அதே போல் இந்த மூன்று நாள் லீவுக்கு பிளான் செய்துவிட்டனர். இவர்களின் குடும்பம் எல்லாம் ஓரளவுக்கு நல்ல வசதி தான் நவ்யாவை தவிர. எனவே அவளிடம் இருக்கும் காசை வீட்டுக்கு அனுப்பி மீதம் இருக்கும் காசை வைத்து சிக்கனமாக வாழ்பவள் நவ்யா.





யுவன், நவ்யா, தீப்தி மூவரும் துங்கும் முன்பே மூன்று நாளுக்கு தேவையானவை எல்லாம் எடுத்து வைத்து விட்டனர். யுவன் அவன் கார் எடுத்து எல்லாம் சரியா வேலை செய்கிறதா என்று பார்த்து வைத்தான். ஷிவா, அபிஷேக் கிளம்பும் முன் பேக் செய்யலாம் என்று சோம்பேறியாக விட்டுவிட்டனர்.



நாளைக்கு முதலில் நவ்யாவை தான் பிக்கப் செய்ய வேண்டும். அவள் தங்கி இருக்கும் வீடு தான் இவன் வீட்டில் இருந்து அருகில்; பின் தீப்தி, ஷிவா, அபிஷேக்.



அவர்கள் பதிவு செய்து வைத்திருந்த பங்களாவில் உள்ளே ஒரு உறுமல் சத்தம் கேட்டது. அந்த சத்ததுக்கு பயந்து அங்கு இருந்த பறவை எல்லாம் பறந்து வேறு இடம் சென்றது.



நேரம் காலை நான்கு மணி இருக்கும். எல்லோரையும் அவரவர் வீட்டில் சென்று பிக்கப் செய்து கிளம்ப நேரம் சரியாக இருக்கும் எனில் யுவன் வேகமாகவே எழுந்துவிட்டான். அவனின் பையை எடுத்துக்கொண்டு வண்டியில் போட்டு நவ்யா அவள் நண்பர்களுடன் தங்கி இருக்கும் வீட்டுக்கு புறப்பட்டான். அவளிடம் பேச மாட்டான் ஆனால் தங்கி இருக்கும் வீடு இவனுக்கு எப்படி தெரியும் என்பது அவனிடம் தான் கேட்க வேண்டும்!!



இருவரும் ஃபோனில் பேசியது இல்லை. ‘இப்போது பேச நேரிடுமோ, அவளாக வெளியே வந்து நிற்பாள, இருக்காது விடிய கூட இல்லை இந்நேரம் வெளியே ஏன் நிற்க போகிறாள்.. நம்மலே ஃபோன் செய்வோம் ‘ என்ற சிந்தனையில் அவள் வீடு இருக்கும் தெரு வந்துவிட்டான்.




நேற்று விட்ட கோவம் மீண்டும் எழுந்தது அவள் வீட்டு வாசலில் தனியாக நிற்பதை கண்டு. அவள் முன்பு வண்டியை நிப்பாட்டி, அவளை கோவமாக முறைத்துப் பார்த்தான். நவ்யா கொஞ்சம் மிரண்டு விட்டாள் எங்கே நேற்று அப்படி செய்ததுக்கு தான் கோவமாக இருக்கான் போல் என நினைத்தாள்.



யுவன் - அறிவு இருக்கா டி உனக்கு? இப்படியா விடியாம இருட்டிட்டு இருக்குற நேரத்துல வீட்ல இருந்து வெளிய தனியா வந்து நிப்ப? யாராச்சும் ஏதாச்சும் பண்ணிருந்தா??!! என்று கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பேசினான்.



அவன் கூற்றில் இருக்கும் உண்மை புரிந்தது. ஆனாலும் அமைதியாகவே இருந்தாள்.



யுவன் - என் கூட பேச பிடிக்கலனா ஒரு மிஸ்டு கால் கொடுத்தா… நீ ரெடி ஆகிட்டனு நான் புரிஞ்சிக்க மாட்டேன் ஆ??!! என்றான் ஆற்றாமையாக.



நவ்யா - சாரி… இதுவே அவள் அவனிடம் பேசிய முதல் வார்த்தை. எப்போது பேசினாலும் மையமாக யாரையும் வைத்துக்கொண்டு பேசுவார்கள்.



அவள் தன்னிடம் முதல் முறையாக பேசியது அப்போது தான் கருத்தில் பட்டது. உடனே சுவிட்ச் போட்டது போல் அமைதியாகி விட்டான். எல்லாம் ஒரு நிமிடம் தான்… அவளை நெருங்கி இரு தோள்களையும் இருக்கமாக பற்றி



யுவன் - இன்னொரு முறை இப்படி பண்ண… நான் மனுஷனா இருக்க மாட்டேன் புரியுதா??!! என்றான் கொஞ்சம் அழுத்தமாகவே.



புரியுது என்பதை போல் தலைய ஆட்டினாள். அவன் அழுத்தியது வலித்தது போல் முகத்தை சுறுக்கினாள், பின் பிடியை விட்டுவிட்டான். அவளிடம் பையை கூட வாங்காமல் முன்னே சென்றுவிட்டான். அவளும் அதை எதிர்பார்க்க வில்லை போல் கார் பின்னாடி பையை வைத்து விட்டு, குட்டி பேக் கையோடு வைத்துக்கொண்டாள்.



பின் இருவருமாக தீப்தி வீட்டுக்கு சென்றனர். தீப்திக்கு ஃபோன் செய்து வர சொன்னான். அவள் வீட்டை சாற்றி விட்டு வரும் போது இவன் வேகமாக சென்று அவள் பையை இவன் வாங்கிக்கொண்டு கார் பின்னாடி வைத்தான். இதனை நவ்யா கவனித்தாலும் ஒன்று சொல்லவில்லை. பின் சீட்டில் நவ்யா அருகில் அமர்ந்துகொண்டாள்.



யுவன் - தீப்தி, அவனுங்க ரெண்டு பேருக்கும் ஃபோன் பண்ணு. கண்டிப்பா இன்னும் எழுந்து இருக்க மாட்டானுங்க. கிளம்பி ரெடி ஆ இருக்க சொல்லு.



அவன் சொன்னது போலவே இருவரும் தூக்க கலக்கத்தில் தான் பேசினார். நல்ல வார்த்தை போட்டு திட்டி கிளம்பி இருக்கச் சொன்னாள். ஷிவா கிளம்பி இருக்க, அபிஷேக் அப்போது தான் பேக் செய்து கொண்டு இருந்தான். அவனை நாலு அடிபோட்டு காரில் ஏற்றிக்கொண்டு கிளம்ப ஐந்து மணியை கடந்து விட்டது.



யுவன் ட்ரைவ் செய்ய அவன் அருகில் அபிஷேக். நவ்யா… டிரைவர் சீட்டில் பின்னாடி இருக்கும் ஜன்னல் புறம், இடையில் தீப்தி, அவள் அருகில் ஷிவா என்று அமர்ந்து இருந்தனர்.



அப்போது தான் பொழுதே விடிந்தது, வானம் ஆரஞ் வண்ணத்தில் தெரிந்தது. நவ்யா நன்றாக வேடிக்கை பார்த்தாள். பல நாள் கழித்து எல்லோரும் இப்படி செல்லுவதால் அதிகம் சந்தோசம் அனைவரிடமும். காரில் விஜய் ஆண்டனி, ரஹ்மான் பாட்டு என கச்சேரி கலை கட்டியது.



நவ்யா அனைவரையும் வீடியோ எடுத்தாள் அவ்வப்போது அவர்கள் கலாட்டாவில் சேர்ந்தும் கொண்டாள். யுவன் பாடிக்கொண்டு வண்டி ஓட்டினாலும் ரோட்டில் கவனமாக இருந்தான். ஒரு ஒரு பாட்டு மாற மாற இவர்களின் துள்ளலும் அதிகமாகியது.



தீப்தி, ஷிவா ஒரு படி மேலே போய் வாட்டர் பாக்கெட் பாட்டு இந்த வரி வரும் போது



(ஹையோ கஹான் வாலே

கிதர் வாலே

தாகம் எடுத்த பாணி பீலே

கமக்கமா படுத்துக்கோ மைமா மேலே)



இருவரும் கண்ணாடி போட்டுக்கொண்டு அந்த பாடிலில் வருவது போல் செய்து தூள் கிளப்பினார்.



பின் டீ கடையில் வண்டியை நிப்பாட்டி ஐவரும் வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொண்டு காரில் ஏறினர். காலை உணவு அங்கு போய் தான் பார்த்துக்கணும். மணி 6 கூட ஆகவில்லை இந்நேரம் டீ, வடை தவிர வேறு இருக்காது.



மீண்டும் காரில் கச்சேரி நடந்தது. எல்லாம் பத்தி நிமிடம் தான் தீப்தி, ஷிவா ஒரு பக்கம் டயர்ட் ஆகி துங்கிவிட, முன்னால் அமர்ந்து இருந்த அபிஷேக் பாதி தூக்கத்தில் இருந்தான். நவ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.



கார் ஓட்டுபவர் அருகில் அமர்ந்து தூங்க வேண்டாம் என்பதற்காக



அபிஷேக் - நவ்யா, நான் பின்னாடி வர்றேன். எனக்கு தூக்கமா வருது நீ வேடிக்கை தான பாக்குற. டேய் யுவன் கார் நிப்பாட்டு டா என்றான்.



நவ்யா ஒரு நொடி தான் யோசித்தாள் மறு நிமிடம் அவன் கேட்கிறான் என்பதற்காக இறங்கி முன்னாடி எறிக்கொண்டாள். யுவன் இதை எதிர்பார்க்கவில்லை. தான் திட்டிய பிறகு முகத்தை கூட பார்க்க மாட்டாள் என்றே நினைத்தான்.



நவ்யா மனதில் நேற்று இருந்த யுவனுக்கு இன்று இருக்கும் யுவனுக்கும் வித்தியாசம் காணப்பட்டது. எப்போதும் கடு கடு என இருப்பான். இன்று அவன் நடந்துகொண்ட விதம் முரடாக இருந்தாலும் தன் பாதுகாப்பையே நினைத்து அப்படி நடந்துக்கொண்டான் என்று புரிந்தது. எனவே அவனிடமும் மற்றவர்கள் போல் சாதாரணமாக இருக்க முயற்சி எடுத்தாள்.



முன்னாடி இருந்த இருக்கையில் அமர்ந்ததும் யுவனுக்கு கொஞ்சம் நெருக்கமாக இருப்பதை உணர்ந்தாள். அவனுக்கு அப்படி தோன்றியதோ அவளின் வாசனை, அவளின் உடல் வெப்பம் அவனுக்கு உணரப்பட்டது.



யுவன் அவள் பக்கம் அவ்வபோது திரும்பி பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டினான். ஒரு முறை இருவரின் பார்வையும் நேர் கோட்டில் சிக்கிக்கொண்டது. எதை அவள் கண்ணில் கண்டானோ… அவளிடம் இது வரை பண்ணிடாத ஒரு விஷயம் செய்தான் அது தான் புன்னகை. அதற்கு பதில் புன்னகையும் கிடைத்தது.



இருவரும் என்ன நினைத்தார்களோ மீண்டும் ஆளுக்கு ஒரு புறம் திரும்பிக்கொண்டனர்.




நகரம் தாண்டி கிராம புறம் வந்தனர். இரு பக்கமும் வயல் வெளி பார்க்கவே அழகா இருந்தது. இரண்டு மூன்று கிராமம் கடந்து அந்த பங்களா அருகில் இருக்கும் கிராமத்துக்கு ஒரு வழியா வந்து சேர்ந்தனர். அங்கு இருந்து அந்த பங்களா போக மேப்ல் வழி இல்லை எனவே அங்கு இருக்கும் மக்கள் யாரிடமாவது கேட்கலாம் என்று வண்டியை ஓரம் கட்டினான்.



அருகில் இருந்த ஒரு வீட்டை நோக்கி நடந்தான் வீட்டின் வாசலில் ஒரு முதியவர் உட்காந்து இருந்தார். அவரிடம் பணிவாக

யுவன் - தாத்தா, இங்க பழைய பங்களா இருக்குனு சொன்னாங்க இரண்டு நாள் தங்கிட்டு போக வந்திருக்கோம். அது எங்க இருக்குனு சொல்ல முடியுமா? என்று கேட்டான்.



முதியவர் அவனை பார்த்து அதிர்ச்சியாகி “ என்னப்பா சொல்ற? அங்கயா?? அது ரொம்ப பழைய பங்களா. அதுல பேய் இருக்குனு யாரும் வாங்கலை ஆன அந்த ஓனர் வேணும்னே இப்படி வாடகைக்கு விட்டுருக்கான். படிச்ச பிள்ளை மாதிரி தெரியுற… விசாரிச்சு வர மாட்டீங்களா??!! “ என்றார் கறாராக.
 
Top