முதியவர் தலையாடினார் “ சரி சரி, சொன்ன இந்த காலத்து பிள்ளைங்க கேக்கவா போறீங்க.. வலது பக்கத்துல போனா ஒரு குட்டை வரும். அந்த குட்டைக்கு பின்னாடி ஒரு வளைவு தெரியும். அந்த வளைவுல போனா அந்த பங்களா தெரியும் “
யுவன் நன்றி சொல்லிவிட்டு திரும்ப… மீண்டும் அவனை அழைத்தார்
முதியவர் - தம்பி, அந்த ஆள் சொன்ன இடத்தை விட்டுடு வேறு எந்த இடமும் அந்த பங்களா ல போகாதீங்க புரியுதா. நியாபகத்துல வெச்சிக்கோ. பொழுது சாஞ்ச அப்புற உங்க அறைய விட்டு வெளிய போறது அவ்வளவு நல்லது இல்லை. அந்த காலத்துல சொன்னது சில கதை மூடை நம்பிக்கையா இருக்கலாம் ஆனா பல விஷயம் அவங்க அனுபவ பட்டது தான் சூதானமா நம்மக்கு சொல்லியிருக்காங்க. பாத்து பக்குவமா போய்ட்டு வாங்க என்று எச்சரித்தார்.
அங்கு நண்பர்கள் எல்லாம் விழித்து விட்டனர். யுவன் அந்த முதியவருக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டு திரும்பி வந்து அவர் சொன்னதை சொன்னார். அவர்கள் எல்லோரும் கொஞ்சம் பயந்தாலும், உற்சாகமாகவே அந்த இடத்தை நோக்கி சென்றனர்.
குட்டையை கடந்து, வளைவில் இருந்து உள்ளே சென்ற போது, அந்த பங்களா தெரிந்தது. அந்த பெரிய வாசலில் ஒருவர் நின்று இருந்தார். அந்த பங்களா உரிமையாளரின் உதவியாளர். அவர் அருகில் கார் நிறுத்தி
யுவன் - யோவ், அட்டிரஸ் கரெக்ட் ஆ சொல்ல மாட்டியா? உன்னோட வேலை இதுதான. கெஸ்ட்-க்கு வழி சொல்லனும்னு கூடவா உனக்கு தோணல என்றான் கட்டமாக
அவர் பார்பதற்கு அவ்வளவு நல்ல ஆளாக தெரியவில்லை. வாயில் எதையோ போட்டு மென்று கொண்டு இருந்தார். இவன் திட்டுவதுக்கு சிரிக்க வேற செய்தார்.
யுவன் பேசும் போதே நண்பர்கள் கார் விட்டு இறங்கி வந்தனர். அந்த ஆளின் பார்வை நவ்யா , தீப்தி மீதே இருந்ததை பார்த்த யுவன், ஷிவா, அபிஷேக் மூவருக்கும் இரத்தம் கொதித்தது. பெண்கள் இருவரையும் மறைத்த மாதிரி மூவரும் முன்னால் வந்து நின்றனர்.
உதவியாளர் - சார், இந்தாங்க சாவி. திங்கள்கிழமை வர்ற அப்போ வாங்கிப்பேன். ஊருக்குள்ள சமையல் ஆள் சொல்லிட்டேன். வேலைக்கு சாப்பாடு வந்துரும். வேற ஏதாச்சும் கேட்கணுமா?? என்று அவனை திட்டியதை கவனிக்காமல் பேசினார்.
அவர் உள்ளே வந்தது ரூம் வசதி, சுற்றி பார்க்க இடம் எல்லாம் சொல்லுவார் என்று எதிர் பார்க்க அவர் பாட்டுக்கு கிளம்புவதில் இருந்தார். இவர்களுக்கு அந்த ஆளின் நடவடிக்கை எதுவும் பிடிக்கவில்லை எனவே அவரை முதலில் அனுப்பி வைக்கவே எண்ணினர்.
ஷிவா - வேற ஒன்னும் இல்லை. நீங்க கிளம்புங்க என்றான் மூஞ்சி அடித்த மாதிரி. அதற்கு அந்த உதவியாளர் ஃபீல் செய்த மாதிரி தெரியவில்லை. ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே சென்றுவிட்டார்.
அபிஷேக் - எப்புடி டா இந்த ஆளை நம்பி இவ்வளவு பெரிய வீட்டை பாத்துக்க குடுத்தாங்களோ!! என வியந்த வாரே அந்த பெரிய இரும்பு கேட் திறந்து உள்ளே சென்றனர்.
வெளியே நல்லா சுத்தம் செய்து வைத்து இருந்தனர். பல நூறு வருஷம் முன்னாடி காட்டியது போல் காணப்பட்டது. இப்போ உள்ள கட்டிடகலை போல் இல்லை. யுவன் காரை பார்க் செய்தான். எல்லோரும் அவரவர் பையை எடுத்துக்கொண்டு சாவி கொண்டு திறந்து உள்ளே சென்றனர்.
நன்றாக புதுப்பிக்க பட்டு இருந்தாலும் பழங்காலத்து சாயல் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. காட்டுக்கு நடுவில் இருப்பதால்… காற்று அடிக்கும் சத்தம், பறவைகளில் சத்தம் மட்டுமே இருந்தது. இந்த வீட்டில் இவர்களின் பேச்சு குரல் எதிரொலி கேட்டது. ஒரு வித வித்தியாசமான உணர்வு அனைவருக்கும். இந்த வீட்டில் ஏதோ ரசகியம் இருப்பதாக உள்ளுணர்வு நவ்யாவுக்கு.
யுவன் - டேய், இடம் சூப்பர் ஆ இருக்கு டா. மூணு நாள் லேப்டாப், மீட்டிங், டிராபிக் சத்தம் எதுவுமே இல்லாம நிம்மதியாக சாப்பிட்டு, தூங்கி எழுந்து ஜாலியா இருக்கலாம்.
எல்லோரும் அவன் சொல்வதையே ஆமோதித்தனர்.
அபிஷேக் - யாஹூ என்று சத்தம் எழுப்ப அது அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.
நவ்யா அவள் கையில் கொண்டு வந்து குட்டி பேக் ஐ வெளியவே விட்டு வந்திருக்க
நவ்யா - நான் என்னோட பேக் வெளிய விட்டுட்டேன். போய்ட்டு எடுத்துட்டு வர்றேன் என்றவள் பதிலுக்கு காத்திருக்காமல் வெளியே சென்றாள்.
வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சி. அந்த உதவியாளர் அங்கு தான் நின்றுக்கொண்டு இருந்தார். இவளை பார்த்தது ஒரு மார்கமாக சிரித்து கையில் ஏதோ செய்கை காட்டினார்.
‘இது என்னடா வம்பு, பையை அப்புறம் எடுக்கலாம் ‘ என்று திரும்பும் போது யுவன் நெஞ்சில் மோதினாள். கார் சாவி இவனிடம் இருப்பதால் அவள் பின்னே வந்தான். அவள் ஏதோ பதற்றமாக இருப்பது தெரிய
யுவன் - என்ன பேக் எடுக்க வேண்டாமா? திரும்பி உள்ள வர்ற..
நவ்யா வெளியே பார்த்துக்கொண்டே “ அது வந்து… அது.. அங்க..” என்ற வெளிய கையை நீட்ட..
“அங்க என்ன???” என்று பார்வையை திருப்பிய போது தான் தெரிந்தது அந்த உதவியாளர் அங்கு இருந்து அப்போது தான் திரும்பி இவர்களை பார்த்துக்கொண்டே செல்வது.
யுவன் - சரி நீ உள்ள போ. நான் எடுத்துட்டு வர்றேன் என்றான். இவளிடம் இவன் மிருதுவாக பேசியது முதல் முறை. அவனை பார்த்துக்கொண்டே கடந்து உள்ளே நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டாள்.
இந்த பங்களா 4 தளம் கொண்டது. முதல் இரண்டு மட்டுமே புதுமை படுத்தி தங்கும் வசதியுடன் தயார் செய்து வைத்து இருந்தனர். மூன்றாவது, நான்காவது மாடி இது வரைக்கும் யாரும் சென்றது போலவே தெரியவில்லை. ஒட்டடை படிந்து, அங்கு அங்கு சுவர் இடிந்து காணப்பட்டது. வருபவர்களுக்கு முதல் இரண்டு மாடி மட்டுமே அனுமதி உண்டு. அவர்கள் புக் செய்யும் போதே இதனை படித்து பார்த்து தான் வர முடிவு செய்தனர்.
இப்போது எல்லோரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது யுவன் கையில் பையுடன் வந்தான். நேற்று போல் நவ்யா பக்கம் தான் இடம் இருந்தது. சாதாரணமாக அவள் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டான். பையை அவள் புறம் நகர்த்தி விட்டான்.
நவ்யா - தேங்க்ஸ்
யுவன் தலையை மட்டும் ஆட்டி சரி என்றான்.
இவர்கள் பேசிக்கொள்வது நண்பர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. அதே போல் குதூகலமாகவும் இருந்தது.
அபிஷேக் - என்ன மச்சி? என்ன நடக்குது? ஹம்ம்…..
ஷிவா தொண்டையை செருமி பாசாங்கு செய்ய
தீப்தி - தேங்க்ஸ் என்று நவ்யா சொன்னது போலவே செய்து காட்டினாள். குபீர் என்று எல்லோரும் சிரித்துவிட்டனர்.
இவர்கள் சத்தத்தின் ஊடே ஒரு உறுமல் சத்தம் கேட்டது. அது நாயா, நரியா என்று பிரித்து பார்க்க தெரியாத அளவுக்கு ஒரு உறுமல் சத்தம். இவர்கள் சத்தம் அடங்கியதும் அதுவும் இல்லாமால் போய் விட்டது. இதனை கவனித்தது நவ்யா.
நவ்யா - ஒரு நிமிஷம் எல்லாரும் அமைதியா இருங்க. ஏதோ சத்தம் கேக்குது என்றதும் சிரித்து கொண்டு இருந்தவர்கள் அப்படியே அமைதியாகி விட்டனர். வீடு மீண்டும் நிசப்தமாக மாறியது.
எல்லோரும் உன்னிப்பாக கேட்க… அவர்களுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. இதனை வேறு யாரும் சொல்லி இருந்தாலும் நம்பி இருக்க மாட்டார்கள் ஆனால் சொல்லுவது நவ்யா, அவள் விளையாட்டுக்கு எல்லாம் சொல்ல மாட்டாள் என்பது தெரியும்.
நவ்யா - இல்லை, இப்போ கேக்கல. நம்ம சிரிக்கும் போது நடுல கேட்டுச்சு
தீப்தி - அது ஒன்னும் இல்ல நவி. இந்த அபிஷேக் பையன் சிரிக்கிற சத்தம் தான் உனக்கு அப்படி கேட்டு இருக்கும் என்று பொய் உறுமல் சத்தம் செய்து காட்ட… நவ்யாவை தவிர மீதம் இருந்த நால்வரும் சிரித்தனர்.
இப்போது மீண்டும் உறுமல் சத்தம். நவ்யா கவனித்தாள். அவள் கூட கவனித்தது யுவன், ஷிவா. இருவருக்கும் இப்போது அந்த சத்தம் கேட்டது. மூவரும் பார்வை பரிமாறினார்களே தவிர ஒன்று பேசவில்லை. நவ்யா முகத்தில் பயம் தெரிந்தது. ஷிவா கண்களை மூடி திறந்து சமாதானம் செய்தான்.
அப்போது வெளியே நடுத்தர வயதை ஒத்த ஆள் வந்தார் கையில் கூடையுடன். அவர் அந்த பங்களாக்கு நிர்ணயக்கப்பட்ட இந்த ஊரு சமையல்காரர். அவர் உள்ளே வந்து “ சார், சாப்பாடு ரெடி ஆகிடுச்சு “ என்று கூறினார்.
அந்த சமையல்காரர் வந்ததால் அவர்களின் கவனம் அவர் பக்கம் சென்றது.
யுவன் - வாங்க, ரொம்ப நன்றி என்று கூடையை வாங்கிக்கொண்டான்.
“என்னோட பேரு ரங்கன், உங்களுக்கு ஏதாவது விருப்பமானது சாப்பிடணும் என்றாலும் என்கிட்ட சொல்லுங்க அடுத்த வேளைக்கு செஞ்சி எடுத்துட்டு வர்றேன் தம்பி “ என்றார் பவ்வியமாக.
அபிஷேக், தீப்தி இருவரும் “பிரியாணி” என்றனர் ஒரே நேரத்தில்.
ரங்கன் - சரிங்க,. பண்ணிடலாம். வேற ஏதாவது??..!!
ஷிவா - ஐய்யா, உங்களுக்கு இந்த பங்களா பற்றி எதுவும் தெரியுமா?? என்று கேட்டான் தயக்கத்துடன்.
ரங்கன் சிரிப்புடன் “ இந்த பங்களா பற்றி நிறைய கதைகள் உண்டு தம்பி. ஆனால், நேர்ல எதையும் யாரும் பார்த்தது இல்லை. பயப்பட வேண்டாம் “ என்று அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் பதில் சொன்னார்.
அவர் கிளம்ப எத்தனிக்கும் நேரம், நவ்யா குரல் அவரை தடுத்து நிறுத்தியது.
நவ்யா - இங்க பக்கத்துல, அதாவது வீட்டை சுற்றி எதுவும் நாய் இருக்கா? இல்ல இந்த காட்டுக்கு உள்ள நரி அந்த மாதிரி எதுவும்…??? என தயக்கமாக கேட்க.
தீப்தி - என்னடி நவி லூசு மாதிரி கேக்குற. அங்க இங்கனு நாய் இருக்கிறது சகஜம் தான. காடுனா நரி, ஓநாய் இருக்கிறது வழக்கம். ஆள் நடமாட்டம் இருக்கிற போது ஒன்னும் பயம் இல்லை என்று சமாதானம் கூறினாள்.
ரங்கன் எல்லோரிடமும் மதியம் வருவதாக சொல்லி கிளம்பிவிட்டார். அப்போது தீப்தி அவரிடம் அவரின் ஃபோன் நம்பர் வாங்கி வைத்துக்கொண்டாள் வேற எதும் சாப்பாடு செய்து தர சொல்லி சொல்லலாம் என்பதற்காக.
ஷிவா, யுவனுக்கு… நவ்யா பயந்து இருப்பது புரிந்தது. அவள் வெளிப்படையாக அபிஷேக், தீப்தியிடம் சொல்லாமல் இருப்பதும் கவனித்தனர். தீப்திக்கு தெரிந்தாள் கண்டிப்பாக பயப்படுவாள்.
மேலும் தீப்தி சொல்லுவது போல் அருகில் சுற்றி திரியும் நாயக கூட இருக்கலாம் என்பதால் கொஞ்சம் சமாதானம் ஆகினர்.
அபிஷேக் - டேய் மச்சான், இங்க பக்கத்துல ஒரு சின்ன அருவி இருக்கிறதா கேள்வி பட்டேன். சாப்பிட்டு போய்ட்டு வருவோமா? எவ்வளவு நேரம் தான் வீட்டுக்கு உள்ளேயே இருக்க
ஷிவா - டேய் இப்போ தான டா வீட்டுக்கே வந்தோம். அதுக்குள்ள சலிச்சிக்கிற. சாப்பிட்டு ரூம் எல்லாம் பாத்துட்டு போகலாம். ரொம்ப பசிக்கிது வாங்க டா. வா நவி… நீ என்ன வேடிக்கை பாக்குற தீப்தி வா…
எல்லோரும் நன்றாகவே சாப்பிட்டனர். ஆளுக்கு ஒரு பார்சல் எடுத்து பகிர்ந்து உண்டனர். நவ்யா நேற்று போலவே அவள் உணவை கொஞ்சம் யுவன் பக்கம் நகர்த்த, அவனும் வாங்கிக்கொண்டான். மற்றவர்களுக்கு தெரியாமல் சிறிது பார்வை பார்த்துக்கொண்டனர். அவன் பார்வை பெண்ணை கொஞ்சம் தடுமாற வைத்தது. இருந்தும் சாதாரணமாக காட்டிக்கொண்டாள். யுவனுக்கு லேசாக எட்டிப் பார்த்த சிரிப்பை உணவைக் கொண்டு மறைத்துவிட்டான்.
யுவன் நன்றி சொல்லிவிட்டு திரும்ப… மீண்டும் அவனை அழைத்தார்
முதியவர் - தம்பி, அந்த ஆள் சொன்ன இடத்தை விட்டுடு வேறு எந்த இடமும் அந்த பங்களா ல போகாதீங்க புரியுதா. நியாபகத்துல வெச்சிக்கோ. பொழுது சாஞ்ச அப்புற உங்க அறைய விட்டு வெளிய போறது அவ்வளவு நல்லது இல்லை. அந்த காலத்துல சொன்னது சில கதை மூடை நம்பிக்கையா இருக்கலாம் ஆனா பல விஷயம் அவங்க அனுபவ பட்டது தான் சூதானமா நம்மக்கு சொல்லியிருக்காங்க. பாத்து பக்குவமா போய்ட்டு வாங்க என்று எச்சரித்தார்.
அங்கு நண்பர்கள் எல்லாம் விழித்து விட்டனர். யுவன் அந்த முதியவருக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டு திரும்பி வந்து அவர் சொன்னதை சொன்னார். அவர்கள் எல்லோரும் கொஞ்சம் பயந்தாலும், உற்சாகமாகவே அந்த இடத்தை நோக்கி சென்றனர்.
குட்டையை கடந்து, வளைவில் இருந்து உள்ளே சென்ற போது, அந்த பங்களா தெரிந்தது. அந்த பெரிய வாசலில் ஒருவர் நின்று இருந்தார். அந்த பங்களா உரிமையாளரின் உதவியாளர். அவர் அருகில் கார் நிறுத்தி
யுவன் - யோவ், அட்டிரஸ் கரெக்ட் ஆ சொல்ல மாட்டியா? உன்னோட வேலை இதுதான. கெஸ்ட்-க்கு வழி சொல்லனும்னு கூடவா உனக்கு தோணல என்றான் கட்டமாக
அவர் பார்பதற்கு அவ்வளவு நல்ல ஆளாக தெரியவில்லை. வாயில் எதையோ போட்டு மென்று கொண்டு இருந்தார். இவன் திட்டுவதுக்கு சிரிக்க வேற செய்தார்.
யுவன் பேசும் போதே நண்பர்கள் கார் விட்டு இறங்கி வந்தனர். அந்த ஆளின் பார்வை நவ்யா , தீப்தி மீதே இருந்ததை பார்த்த யுவன், ஷிவா, அபிஷேக் மூவருக்கும் இரத்தம் கொதித்தது. பெண்கள் இருவரையும் மறைத்த மாதிரி மூவரும் முன்னால் வந்து நின்றனர்.
உதவியாளர் - சார், இந்தாங்க சாவி. திங்கள்கிழமை வர்ற அப்போ வாங்கிப்பேன். ஊருக்குள்ள சமையல் ஆள் சொல்லிட்டேன். வேலைக்கு சாப்பாடு வந்துரும். வேற ஏதாச்சும் கேட்கணுமா?? என்று அவனை திட்டியதை கவனிக்காமல் பேசினார்.
அவர் உள்ளே வந்தது ரூம் வசதி, சுற்றி பார்க்க இடம் எல்லாம் சொல்லுவார் என்று எதிர் பார்க்க அவர் பாட்டுக்கு கிளம்புவதில் இருந்தார். இவர்களுக்கு அந்த ஆளின் நடவடிக்கை எதுவும் பிடிக்கவில்லை எனவே அவரை முதலில் அனுப்பி வைக்கவே எண்ணினர்.
ஷிவா - வேற ஒன்னும் இல்லை. நீங்க கிளம்புங்க என்றான் மூஞ்சி அடித்த மாதிரி. அதற்கு அந்த உதவியாளர் ஃபீல் செய்த மாதிரி தெரியவில்லை. ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே சென்றுவிட்டார்.
அபிஷேக் - எப்புடி டா இந்த ஆளை நம்பி இவ்வளவு பெரிய வீட்டை பாத்துக்க குடுத்தாங்களோ!! என வியந்த வாரே அந்த பெரிய இரும்பு கேட் திறந்து உள்ளே சென்றனர்.
வெளியே நல்லா சுத்தம் செய்து வைத்து இருந்தனர். பல நூறு வருஷம் முன்னாடி காட்டியது போல் காணப்பட்டது. இப்போ உள்ள கட்டிடகலை போல் இல்லை. யுவன் காரை பார்க் செய்தான். எல்லோரும் அவரவர் பையை எடுத்துக்கொண்டு சாவி கொண்டு திறந்து உள்ளே சென்றனர்.
நன்றாக புதுப்பிக்க பட்டு இருந்தாலும் பழங்காலத்து சாயல் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. காட்டுக்கு நடுவில் இருப்பதால்… காற்று அடிக்கும் சத்தம், பறவைகளில் சத்தம் மட்டுமே இருந்தது. இந்த வீட்டில் இவர்களின் பேச்சு குரல் எதிரொலி கேட்டது. ஒரு வித வித்தியாசமான உணர்வு அனைவருக்கும். இந்த வீட்டில் ஏதோ ரசகியம் இருப்பதாக உள்ளுணர்வு நவ்யாவுக்கு.
யுவன் - டேய், இடம் சூப்பர் ஆ இருக்கு டா. மூணு நாள் லேப்டாப், மீட்டிங், டிராபிக் சத்தம் எதுவுமே இல்லாம நிம்மதியாக சாப்பிட்டு, தூங்கி எழுந்து ஜாலியா இருக்கலாம்.
எல்லோரும் அவன் சொல்வதையே ஆமோதித்தனர்.
அபிஷேக் - யாஹூ என்று சத்தம் எழுப்ப அது அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.
நவ்யா அவள் கையில் கொண்டு வந்து குட்டி பேக் ஐ வெளியவே விட்டு வந்திருக்க
நவ்யா - நான் என்னோட பேக் வெளிய விட்டுட்டேன். போய்ட்டு எடுத்துட்டு வர்றேன் என்றவள் பதிலுக்கு காத்திருக்காமல் வெளியே சென்றாள்.
வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சி. அந்த உதவியாளர் அங்கு தான் நின்றுக்கொண்டு இருந்தார். இவளை பார்த்தது ஒரு மார்கமாக சிரித்து கையில் ஏதோ செய்கை காட்டினார்.
‘இது என்னடா வம்பு, பையை அப்புறம் எடுக்கலாம் ‘ என்று திரும்பும் போது யுவன் நெஞ்சில் மோதினாள். கார் சாவி இவனிடம் இருப்பதால் அவள் பின்னே வந்தான். அவள் ஏதோ பதற்றமாக இருப்பது தெரிய
யுவன் - என்ன பேக் எடுக்க வேண்டாமா? திரும்பி உள்ள வர்ற..
நவ்யா வெளியே பார்த்துக்கொண்டே “ அது வந்து… அது.. அங்க..” என்ற வெளிய கையை நீட்ட..
“அங்க என்ன???” என்று பார்வையை திருப்பிய போது தான் தெரிந்தது அந்த உதவியாளர் அங்கு இருந்து அப்போது தான் திரும்பி இவர்களை பார்த்துக்கொண்டே செல்வது.
யுவன் - சரி நீ உள்ள போ. நான் எடுத்துட்டு வர்றேன் என்றான். இவளிடம் இவன் மிருதுவாக பேசியது முதல் முறை. அவனை பார்த்துக்கொண்டே கடந்து உள்ளே நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டாள்.
இந்த பங்களா 4 தளம் கொண்டது. முதல் இரண்டு மட்டுமே புதுமை படுத்தி தங்கும் வசதியுடன் தயார் செய்து வைத்து இருந்தனர். மூன்றாவது, நான்காவது மாடி இது வரைக்கும் யாரும் சென்றது போலவே தெரியவில்லை. ஒட்டடை படிந்து, அங்கு அங்கு சுவர் இடிந்து காணப்பட்டது. வருபவர்களுக்கு முதல் இரண்டு மாடி மட்டுமே அனுமதி உண்டு. அவர்கள் புக் செய்யும் போதே இதனை படித்து பார்த்து தான் வர முடிவு செய்தனர்.
இப்போது எல்லோரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது யுவன் கையில் பையுடன் வந்தான். நேற்று போல் நவ்யா பக்கம் தான் இடம் இருந்தது. சாதாரணமாக அவள் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டான். பையை அவள் புறம் நகர்த்தி விட்டான்.
நவ்யா - தேங்க்ஸ்
யுவன் தலையை மட்டும் ஆட்டி சரி என்றான்.
இவர்கள் பேசிக்கொள்வது நண்பர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. அதே போல் குதூகலமாகவும் இருந்தது.
அபிஷேக் - என்ன மச்சி? என்ன நடக்குது? ஹம்ம்…..
ஷிவா தொண்டையை செருமி பாசாங்கு செய்ய
தீப்தி - தேங்க்ஸ் என்று நவ்யா சொன்னது போலவே செய்து காட்டினாள். குபீர் என்று எல்லோரும் சிரித்துவிட்டனர்.
இவர்கள் சத்தத்தின் ஊடே ஒரு உறுமல் சத்தம் கேட்டது. அது நாயா, நரியா என்று பிரித்து பார்க்க தெரியாத அளவுக்கு ஒரு உறுமல் சத்தம். இவர்கள் சத்தம் அடங்கியதும் அதுவும் இல்லாமால் போய் விட்டது. இதனை கவனித்தது நவ்யா.
நவ்யா - ஒரு நிமிஷம் எல்லாரும் அமைதியா இருங்க. ஏதோ சத்தம் கேக்குது என்றதும் சிரித்து கொண்டு இருந்தவர்கள் அப்படியே அமைதியாகி விட்டனர். வீடு மீண்டும் நிசப்தமாக மாறியது.
எல்லோரும் உன்னிப்பாக கேட்க… அவர்களுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. இதனை வேறு யாரும் சொல்லி இருந்தாலும் நம்பி இருக்க மாட்டார்கள் ஆனால் சொல்லுவது நவ்யா, அவள் விளையாட்டுக்கு எல்லாம் சொல்ல மாட்டாள் என்பது தெரியும்.
நவ்யா - இல்லை, இப்போ கேக்கல. நம்ம சிரிக்கும் போது நடுல கேட்டுச்சு
தீப்தி - அது ஒன்னும் இல்ல நவி. இந்த அபிஷேக் பையன் சிரிக்கிற சத்தம் தான் உனக்கு அப்படி கேட்டு இருக்கும் என்று பொய் உறுமல் சத்தம் செய்து காட்ட… நவ்யாவை தவிர மீதம் இருந்த நால்வரும் சிரித்தனர்.
இப்போது மீண்டும் உறுமல் சத்தம். நவ்யா கவனித்தாள். அவள் கூட கவனித்தது யுவன், ஷிவா. இருவருக்கும் இப்போது அந்த சத்தம் கேட்டது. மூவரும் பார்வை பரிமாறினார்களே தவிர ஒன்று பேசவில்லை. நவ்யா முகத்தில் பயம் தெரிந்தது. ஷிவா கண்களை மூடி திறந்து சமாதானம் செய்தான்.
அப்போது வெளியே நடுத்தர வயதை ஒத்த ஆள் வந்தார் கையில் கூடையுடன். அவர் அந்த பங்களாக்கு நிர்ணயக்கப்பட்ட இந்த ஊரு சமையல்காரர். அவர் உள்ளே வந்து “ சார், சாப்பாடு ரெடி ஆகிடுச்சு “ என்று கூறினார்.
அந்த சமையல்காரர் வந்ததால் அவர்களின் கவனம் அவர் பக்கம் சென்றது.
யுவன் - வாங்க, ரொம்ப நன்றி என்று கூடையை வாங்கிக்கொண்டான்.
“என்னோட பேரு ரங்கன், உங்களுக்கு ஏதாவது விருப்பமானது சாப்பிடணும் என்றாலும் என்கிட்ட சொல்லுங்க அடுத்த வேளைக்கு செஞ்சி எடுத்துட்டு வர்றேன் தம்பி “ என்றார் பவ்வியமாக.
அபிஷேக், தீப்தி இருவரும் “பிரியாணி” என்றனர் ஒரே நேரத்தில்.
ரங்கன் - சரிங்க,. பண்ணிடலாம். வேற ஏதாவது??..!!
ஷிவா - ஐய்யா, உங்களுக்கு இந்த பங்களா பற்றி எதுவும் தெரியுமா?? என்று கேட்டான் தயக்கத்துடன்.
ரங்கன் சிரிப்புடன் “ இந்த பங்களா பற்றி நிறைய கதைகள் உண்டு தம்பி. ஆனால், நேர்ல எதையும் யாரும் பார்த்தது இல்லை. பயப்பட வேண்டாம் “ என்று அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் பதில் சொன்னார்.
அவர் கிளம்ப எத்தனிக்கும் நேரம், நவ்யா குரல் அவரை தடுத்து நிறுத்தியது.
நவ்யா - இங்க பக்கத்துல, அதாவது வீட்டை சுற்றி எதுவும் நாய் இருக்கா? இல்ல இந்த காட்டுக்கு உள்ள நரி அந்த மாதிரி எதுவும்…??? என தயக்கமாக கேட்க.
தீப்தி - என்னடி நவி லூசு மாதிரி கேக்குற. அங்க இங்கனு நாய் இருக்கிறது சகஜம் தான. காடுனா நரி, ஓநாய் இருக்கிறது வழக்கம். ஆள் நடமாட்டம் இருக்கிற போது ஒன்னும் பயம் இல்லை என்று சமாதானம் கூறினாள்.
ரங்கன் எல்லோரிடமும் மதியம் வருவதாக சொல்லி கிளம்பிவிட்டார். அப்போது தீப்தி அவரிடம் அவரின் ஃபோன் நம்பர் வாங்கி வைத்துக்கொண்டாள் வேற எதும் சாப்பாடு செய்து தர சொல்லி சொல்லலாம் என்பதற்காக.
ஷிவா, யுவனுக்கு… நவ்யா பயந்து இருப்பது புரிந்தது. அவள் வெளிப்படையாக அபிஷேக், தீப்தியிடம் சொல்லாமல் இருப்பதும் கவனித்தனர். தீப்திக்கு தெரிந்தாள் கண்டிப்பாக பயப்படுவாள்.
மேலும் தீப்தி சொல்லுவது போல் அருகில் சுற்றி திரியும் நாயக கூட இருக்கலாம் என்பதால் கொஞ்சம் சமாதானம் ஆகினர்.
அபிஷேக் - டேய் மச்சான், இங்க பக்கத்துல ஒரு சின்ன அருவி இருக்கிறதா கேள்வி பட்டேன். சாப்பிட்டு போய்ட்டு வருவோமா? எவ்வளவு நேரம் தான் வீட்டுக்கு உள்ளேயே இருக்க
ஷிவா - டேய் இப்போ தான டா வீட்டுக்கே வந்தோம். அதுக்குள்ள சலிச்சிக்கிற. சாப்பிட்டு ரூம் எல்லாம் பாத்துட்டு போகலாம். ரொம்ப பசிக்கிது வாங்க டா. வா நவி… நீ என்ன வேடிக்கை பாக்குற தீப்தி வா…
எல்லோரும் நன்றாகவே சாப்பிட்டனர். ஆளுக்கு ஒரு பார்சல் எடுத்து பகிர்ந்து உண்டனர். நவ்யா நேற்று போலவே அவள் உணவை கொஞ்சம் யுவன் பக்கம் நகர்த்த, அவனும் வாங்கிக்கொண்டான். மற்றவர்களுக்கு தெரியாமல் சிறிது பார்வை பார்த்துக்கொண்டனர். அவன் பார்வை பெண்ணை கொஞ்சம் தடுமாற வைத்தது. இருந்தும் சாதாரணமாக காட்டிக்கொண்டாள். யுவனுக்கு லேசாக எட்டிப் பார்த்த சிரிப்பை உணவைக் கொண்டு மறைத்துவிட்டான்.