logo

இருளின் ஒளி | Irulin oli | Episode 4

Mars

Administrator
சாப்பிட்ட பின் யாருக்கு எந்த அறை என்று முடிவு செய்ய ஆரம்பித்தனர். கீழே மூன்று அறை, மாடியில் மூன்று அறை இருந்தது.


தீப்தி - எனக்கு தனியா இருக்க பயம். நானும் நவ்யா சேர்ந்து ஒரு ரூம் எடுத்துக்கிறோம். ஆமா தான நவ்யா??


நவ்யா - ஆமா, எனக்கும் தனியா இருக்க பயம். நம்ம கீழ உள்ள ரூம் எடுத்துக்கலாம்.


அபிஷேக் - டேய், சின்ன பசங்க தான் டா பயப்படுவாங்க. எனக்கு மாடில உள்ள ரூம் தான் வேணும். அதுவும் சிங்கம் சிங்கிளா தான் இருக்கும்.


தீப்தி - இல்லைனாலும் நீ சிங்கிள் தான் டா மொட்ட பையா என்றாள் நக்கலாக.


ஷிவா - சரி, நான் தீப்தி, நவ்யா கூட கீழ இருக்குற இன்னொரு ரூம் எடுத்துக்கிறேன்.


யுவன் - எனக்கு மாடில உள்ள ரூம் வேணும். டிஸ்டர்பன்ஸ் இல்லாம தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.



கீழ் உள்ள அறையில் நவ்யா, தீப்தி ஒரே அறையிலும், அதுக்கு பக்கத்து அறையில் ஷிவா. மேல் உள்ள தளத்தில் அபிஷேக் மற்றும் யுவன் தனி தனி அறை என்று முடிவானது.


யுவன் - ஷேக்கு, நைட் வந்து பயமா இருக்குனு வந்து கதவை தட்டுனா நான் உள்ள சேர்துக்க மாட்டேன் பார்த்துக்கோ என்றான் நக்கலாக.


அபிஷேக் - சில்லி பாய், நான் என்னோட டார்லிங் தீப்தி, நவ்யா கூட இருப்பேன் டா. என்ன டார்லிங் சொல்ற ? என தீப்தி பார்த்து வினவ… அவள் அவனை அடிக்க துரத்தினாள். அவன் ஓடிவிட துரத்திக்கொண்டு வெளியே ஓடிவிட்டனர்.


நவ்யா முகம் கொஞ்சம் வாட்டம் இருந்தது.


ஷிவா - நவி, தீப்தி சொன்ன மாதிரி வேற ஏதாவது சத்தமா இருக்கும். நீ எதுவும் பயப்படாத. நான் உன் பக்கத்து ரூம் ல தான் இருப்பேன். எதுவா இருந்தாலும் வந்து கூப்பிடு சரியா என்றான் ஆறுதலாக.



நவ்யா சரி என்பது போல் தலையை ஆட்டினாள். ஷிவா அவன் ரூம் சென்றுவிட்டான். யுவன், நவ்யா மட்டும் தனித்து விட பட்டனர்.



இப்போது தான் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல உறவு ஆரம்பம் ஆகியது. இப்போது எதுவுமே பேசாமல் சென்றால் எதுவும் நினைத்துக்கொள்வானோ என்பதனால் அங்கேயே நின்றாள்.



யுவன் - இங்க பயப்படுற மாதிரி எதுவும் இல்லனு இந்த ஊருக்காரரே சொல்றாரு அப்புறம் என்ன. இந்த வந்தது ஹேப்பியா இருக்க. அதை மட்டும் பண்ணுவோம். சரிதான?



நவ்யா பதில் சொல்லும் முன் வெளியே நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. யுவன், நவ்யா இருவரும் என்ன என்று எட்டி பார்க்க… தீப்தி, அபிஷேக் இருவரும் அங்கு ஒரு நாயுடன் விளையாடிக் கொண்டு இருந்தனர். இதே காட்சியை ஷிவா அவன் அறையில் இருந்து பார்த்தான்.



இதனை பார்த்த பின்பு தான் நவ்யா மனம் சமாதானம் ஆகியது. அவள் முகத்தில் சிரிப்பு அப்போது தான் வந்தது. அதே சிரித்த முகத்தோடு… யுவன் புறம் கையை நீட்டி “ப்ரெண்ட்ஸ்?” என்று கேட்ட அவனும் யோசிக்காமல் “மொர் தான் ப்ரெண்ட்ஸ் (More than friends) ” என்று அசால்ட் ஆக கையை குலுக்கி விட்டு சென்றுவிட்டான்.


அவன் விளையாட்டாக ஏதாவது சொல்லி இருப்பான் என்று விட்டுவிட்டாள். ஆனால் இருவருக்கும் இதுவே முதல் தொடுகை. அந்த தொடுதலின் தாக்கத்தில் இருந்தனர். யுவன் கையில் இருந்த அழுத்தம், அவளினுள் ஒரு குறுகுறுப்பு ஏற்படுத்தியது. இந்த தொடுதல் இருவரின் இடையே ஒரு புதிய உறவின் விதையை விதைத்திருந்தது என்பதை அவர்கள் இருவரும் அப்போது உணரவில்லை.


கொஞ்சம் நேரம் கழித்து ஐவரும் அந்த நீர்வீழ்ச்சிக்கு போகலாம் என்று கிளம்பினர். இங்கு இருந்து பதினைந்து நிமிட நடை பயணம் செய்தால் அங்கு செல்லலாம் என்பதால் நடந்தே சென்றனர். தேவையான பொருள் மட்டுமே எடுத்துக்கொண்டு நடந்தனர்.


செல்லும் வழி எங்கும் ஓங்கி உயர்ந்த மரங்கள். இந்த காட்டில் வன விலங்குகள் இல்லை என்பதால் தைரியமாகவே இருந்தனர். இங்கு ஒன்று இரண்டு ஆள் மட்டுமே தென்பட்டனர். நடக்கும் போது இலை சருகள் சத்தம் மட்டுமே கேட்டது.



நவ்யா எப்பவும் போல் எல்லாமே படம் பிடித்துக்கொண்டு வந்தாள். மற்றவர்கள் எல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தனர். சருகுகள் சத்தம் மத்தியில் நீர்வீழ்ச்சி சத்தம் கொஞ்சம் கேட்டது. துள்ளலுடன் வேகமாகவே சென்றனர். அங்கு போல் பார்த்தால் இயற்கையாகவே மறைவான ஒரு நீர்வீழ்ச்சி. சின்னதாகவும், ஆள் யாரும் இல்லாமல், நன்றாக தண்ணீர் கொட்ட இவர்களுக்காகவே கொடுக்க பட்ட இடம் போல் இருந்தது.



நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் தண்ணீரை… சாக்கு பையில் மணல், கற்கள் எல்லாம் போட்டு மூட்டை கட்டி அதையே கொண்டு ஒரு அனை மாதிரி கட்டி இருந்தனர். பத்து மூட்டை பக்கம் இருந்து இருக்கும். அது இயற்கையாக ஒரு நீச்சல் குளம் அமைப்பை கொடுத்தது.



நகரத்தில் ஒரு பக்கெட் தண்ணீர் மட்டுமே தினமும் குளித்து சிக்கனமாக இருந்தவர்களுக்கு இதனை பார்த்தது ஆர்வத்தை தூண்ட ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் குதித்து விட்டனர். குளிர்ச்சியான நீரில் குளித்து மகிழ்ந்தனர்.



நவ்யா நன்றாகவே நீந்தினாள். அபிஷேக் குளத்தில் கிடக்கும் ஆமை போல் ஒரே இடத்தில் நீந்திக்கொண்டு இருந்தான். மற்றவர்கள் அதனை பார்த்து சிரிக்க என்று நேரம் நன்றாக சென்றது.



அந்த அழகிய நீர்வீழ்ச்சி அவர்களை மிகவும் கவர்ந்தது என்றே கூறலாம். சிறிது நேரம் கழித்து நவ்யா பாறை மேல் அமர்ந்து இருந்தாள். அவளை தொடர்ந்து யுவன் வெளியே வந்துவிட்டான்.



அபிஷேக், தீப்தி மற்றும் ஷிவாவுக்கு நீச்சல் சொல்லி தர்றேன் என்ற பேர்வழி லூட்டி அடித்துக்கொண்டு இருந்தான்.



இவர்கள் இருவரும் அமைதியாக ஒரு பக்கம் அமர்ந்து இருந்தனர்.



நவ்யா தன் ஈரமான் கூந்தலை பிழிந்து கொண்டு “ எவ்வளவு அழகாக இருக்கு இந்த இடம்! நம்மளுக்காகவே இது இருக்குற மாதிரி” என்றாள்.




யுவன் - ஆமா, இங்கு எப்படி யாருமே வராமா இருக்காங்கன்னு தெரியல என்றான் யோசனையுடன்.



நவ்யா - யாருக்கும் தெரிஞ்சு இருக்காது ரொம்ப. அதுவும் இல்லாம ஊருக்கு உள்ள வந்தாலே இந்த இடத்தை பத்தி பயம் காட்டுறாங்க. அப்போ யாரு இங்கு வருவா? என்று சிரித்தாள்.



அவள் சிரிப்பில் யுவனும் சேர்ந்துக்கொண்டான். யுவன் அவன் பார்வையை நவ்யா முகத்தில் நிலை நிறுத்தினான். அவன் கண்கள் மின்னின. அவளது ஈரமான கூந்தலில் இருந்த நீர் கீழே இறங்க அவன் பார்வை கீழே செல்லும் முன் திரும்பிக்கொண்டான். அவன் மூச்சு காற்று சூடாக வர அதை நவ்யாவும் உணர்ந்தாள். முகம் எல்லாம் சிவப்பேறி இருந்தது.



யுவன் மெதுவாக நவ்யாவை நெருங்கி கண்களை நேராக பார்த்துக்கொண்டு “ ரொம்ப அழகா இருக்க” என்றான் மிருதுவான குரலில்.



அவன் இதே வார்த்தை தீப்தியிடம் சொல்லி கேட்டது உண்டு. அதே மாதிரி சொல்கிறானா, இல்லை வேறு மாதிரி சொல்கிறானா என்பது புரியாமல் முழிக்க



முகத்துக்கு அருகில் நெருங்கி வந்து, தண்ணீரில் ஒட்டி இருந்த முடி காற்றை காதுக்கு பின்னாடி விட்டு “ அழகாக இருக்க டி “ என்றான் மீண்டும் அவள் கண்ணோடு கலக்க விட்டு. இவனிடம் இருந்த நெருக்கம், உரிமை பேச்சு எல்லாம் புதிது.



அவன் வேறு பெண்களிடம் பழகியது போல் தெரியவில்லை. இவனுக்கு தோழிகள் என்றாள் தீப்தி, நவ்யா மட்டுமே என்று எல்லோருக்கும் தெரியும். அவன் பொது வாழ்க்கையைக் அவன் ராமன் தான். தன்னிடம் மட்டும் ஏதோ காரணத்துக்காக கடு கடு என இருக்கிறான் என்று இவளும் ஒதுங்கியே இருப்பாள்.



இப்போது நெருக்கம், உரிமை பேச்சு, ஓரப்பார்வை எல்லாம் இவனிடம் புதிது. அவளுக்கும் அவனை பிடித்து தான் இருந்தது இல்லை என்றாள் இவ்வளவு தூரம் அருகில் விட்டு இருக்க மாட்டாள்.




அவன் சூடான மூச்சு காற்று அவள் காது அருகில் உணர முடிந்தது. கன்னத்துக்கும் அவன் உதடுக்கும் அருகில் இன்ச் இடைவெளி இருக்க… இன்னும் நெருங்கும் நேரம் நண்பர்கள் வரும் சத்தம் கேட்க… அவன் விலகிவிட்டான்.



படபடக்கும் இதயம் இன்னும் அடங்கவில்லை. இதயம் ஓரத்தில் அவன் முத்தத்துக்கு மனம் ஏங்கியதோ ? என்று அவளை அவளே கேட்டுக்கொண்டாள். ஆமாம் என்று பதில் வர வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டாள்.



அவள் எதிர்பார்க்காத நேரம் மீண்டும் வந்த யுவன்… ஒரு கன்னத்தை பற்றி, இன்னொரு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு சென்றுவிட்டான். சுற்றம் மறந்து சிலை போல் அமர்ந்து இருந்தால். இப்போது என்ன நடந்தது என்று கிரகிக்க முடியவில்லை. கன்னத்தில் இல்ல ஈரம் அவன் முத்தத்துக்கு சாட்சியாக இருந்தது.





தீப்தி - நவி, வா டி போகலாம். அந்த பாறைக்கு பின்னாடி இடம் இருக்கும் டிரஸ் மாதிக்கலாம்.



அப்போது அசையாமல் இருக்க…



தீப்தி - என்ன டி ஆச்சு, ஒரு மாதிரி இருக்க. முகம் எல்லாம் சிவப்பா இருக்கு என்று அவள் முகத்தை ஆராய்ச்சி செய்தாள்.



உடனே ஷிவா, அபிஷேக் எல்லாம் வந்துவிட்டனர். அருகில் இருந்த யுவனுக்கு வெட்கமாக இருந்தது.



“ நவி என்ன ஆச்சு?” என்று மூவரும் கேட்டனர். நவ்யா பதில் சொல்ல முடியாமல் வாய் அடைத்து அமர்ந்து இருந்தாள்.



யுவன் - டேய், சீக்கிரம் கிளம்புங்க டா. நேரம் ஆச்சு. சில்லுனு உள்ள தண்ணில குளிச்சது நால சிவந்து இருக்கும். இதுலாம் ஒரு கேள்வினு கேட்டுட்டு… என்று விரட்டினான்.




அபிஷேக் - ஏன்டா ஷிவா, சில்லுனு தண்ணில குளிச்சா முகம் சிவக்குமா. எனக்கும் அப்படி ஆகிருக்கானு பார்த்து சொல்லு என்று முகத்தை அருகில் வந்து காட்ட… ஷிவா ஓடியே விட்டான்.



ஒரு வழியாக எல்லாம் மீண்டும் பங்களா வர மதியம் ஆகிவிட்டது. நவ்யா எப்போதும் வீட்டின் சுமை மனதில் வைத்துக்கொண்டு சோகமாக காணப்படுவாள் ஆனால் இன்று ஏனோ முகத்தில் ஒரு பொலிவு, மனதில் ஒரு சந்தோசம், நடையில் ஒரு துள்ளல். பல நாள் கழித்து உண்மையான சிரிப்பு என்று சந்தோசமாக வலம் வந்தாள்.



மதியம் ரங்கன் வந்து அவர்களை கேட்டதை சமைத்து வந்து கொடுத்தார். நன்றி சொல்லி வாங்கிக்கொண்டனர். அவர் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தான் யுவன். சந்தோஷமாகவே வாங்கிக்கொண்டார்.



இவர்களின் பேச்சு குரல் மட்டுமே வீட்டை நிறைத்து இருந்தது. மதியம் சாப்பிடும் போது நவ்யா அருகில் இடம் இல்லை. ஒரு பக்கம் தீப்தி மற்றொரு பக்கம் அபிஷேக் அமர்ந்து இருந்தர். வேணும் என்றே ஒரு சேர் எடுத்து அபி மற்றும் நவ்யா இடையில் இடித்துக்கொண்டு போட்டு ரகளை செய்தான் யுவன்.



அதில் எல்லோருக்கும் சிரிப்பு.

சிரிப்பு சத்தம் ஊடே மீண்டும் உறுமல் சத்தம். இப்போது அதனை யாரும் கவனிக்கவில்லை. சாப்பிட வந்தது எல்லாம் அசைவ உணவாக இருக்க மாடியில் உள்ளே ஒரு அறையில்… அசைவ உணவு வாசனை கட்டுபடுத்த முடியாமல் நகங்களை கொண்டு சுவற்றில் கீறியது.



நண்பனின் மனம் அங்கு உள்ளே எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது. அவர்களாக சொல்லும் வரையில் எதையும் கேட்காமல் நாகரீகமாக நடந்துகொண்டனர்.



நன்றாக குளித்ததுக்கும், சாபிட்டதுக்கும் அவரவர் அறைக்கு சென்று தூங்கிவிட்டனர்.



மீண்டும் எழுந்து வரவே சாயங்காலம் ஆகிவிட்டது. தூங்கி எழுந்து எல்லோரும் ஃப்ரெஷ் ஆக இருந்தனர். என்ன செய்வது என்று யோசனையாக இருந்தது. அருகில் இருந்து ஒரு நீழ்வீழ்சிக்கும் போய்ட்டு வந்தாச்சு. அருகில் வேறு எந்த இடமும் சுற்றி பார்க்கும் அளவுக்கு இல்லை.



இந்த பங்களா வை சுற்றி பார்த்தால் தான் என்ற எண்ணம் தோன்ற… கலந்து பேசிய பின் நண்பர்கள் எல்லோரும் மூன்றாவது மாடிக்கு சென்றனர். அந்த படிக்கட்டு முழுக்க தூசி படிந்து இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தற்கான எல்லா அறிகுறியும் இருந்தது.



மேலே கெட்ட நாற்ற வேறு வீசியது. கைவிட பட்ட இடம் போல் தெரிந்தது. சாமான்கள் அங்கு அங்கு சிதறியும், உடைந்தும் கிடந்தது.



ஷிவா - மக்களே, கண்டிப்பா உள்ள போய் தான் ஆகணுமா??!! லைட் இருக்குற மாதிரியும் தெரியல. எல்லாமே இருட்டாக இருக்கு



அபிஷேக் - டேய், போடா.. என்ன தான் இருக்குனு பார்க்காலாம். சீக்கிரமா போடா. இல்லைனா நான் முன்னாடி போகவா??!! என்றான் முந்திக்கொண்டு.



ஷிவா - அடங்கு மச்சி, நானே போறேன் அந்த டார்ச் லைட் என் கையில குடு. இதுக்கு மேல லைட் வெச்சு தான் போகனும். ரொம்ப இருட்டா இருக்கு. கீழே பார்த்து நடங்க டா என்று கூறியது டார்ச் பிடித்துக்கொண்டு முன்னால் நடந்தான்.
 
Top