logo

இருளின் ஒளி | Irulin oli | Episode 5

Mars

Administrator
மாடி ஏறியதும் கீழே உள்ளது போல் பல அறைகள் இருந்தது. அங்கு எல்லாம் திறந்து பார்க்கும் போது ஒரு சில அறை காலியாக இருந்தது. சிலதில் பழைய பொருட்கள் இருந்தது. அதனை பெருசாக யாரும் கிளறி பார்க்கவில்லை. சுவற்றில் அங்காங்கே பழைய புகை படம் இருந்தது. யாரும் முகமும் சரியா தெரியவில்லை. அங்கு ஒரு பியானோ இருக்க. நவ்யா அதுக்கு முன் இருக்கும் சேரில் அமர்ந்து போனோவில் கையை வைக்கும் முன் அதில் இருந்து சத்தம் வந்தது.



படார் என்று எழுந்துவிட்டாள்.


யுவன் - என்ன ஆச்சு மா?


நவ்யா - நான… நான் கையை வைக்க முன்னாடியே சத்தம்…. சத்தம் வந்தது என வார்த்தை தந்தியடிக்க பேசினாள்.


தீப்தி - அய்யயோ, வாங்க எல்லோரும் கீழே போகலாம். நவி சொல்றது பார்த்தா எனக்கு பயமா இருக்கு..


அபிஷேக் - அட ச்சீ சும்மா இரு. நவி, அது பழைய பியானோ டி, அதனால் சத்தம் வந்திருக்கும். இதுக்கு எல்லாமா பயப்படுவாங்க. சும்மா இங்க என்ன இருக்குனு பார்த்துட்டு போயிடலாம் என்றான் சமாதனமாக.


அப்போது அதே அறையில் ஸ்கிரீன் போட்டு இருந்தது. கொஞ்சம் வெளிச்சம் வந்தால் பயப்படாம இருப்பார்கள் என்று எண்ணி… அது ஜன்னல் என்று நினைத்து யுவன் அதனை விலக்க… அதுக்கு பின்னாடி இருந்ததோ ஒரு அறை. பழைய மரக் கதவு. சாற்றி வைக்க பட்டு இருந்தது.


ஷிவா கையில் டார்ச் இருக்க…. கதவு தொட்டவுடன் “ கீர்ச் ‘ என்ற சத்தத்துடன் திறந்தது; உள்ளே வெளிச்சம் பரவ… பொருட்கள் எல்லாம் அடிக்கி வைக்க பட்டு இருந்தது.


வெளியே சிதறி கிடந்த பொருட்கள் ஆர்வத்தை தூண்டவில்லை… உள்ளே அடிக்கி வைக்க பட்ட பொருள் என்ன என்று பார்க்க ஆர்வமாக இருந்தது.


நவ்யா - சேகரிச்சு வெச்ச பொருட்கள் மாதிரி தெரியுது


ஷிவா - எனக்கு அதே தான் தோணுது. என்ன சொல்றீங்க உள்ள போகலாமா? என்றான் அனைவரையும் பார்த்து.


எல்லோரும் ஒரோருவர் மூஞ்சியை பார்க்க… மெளனம் சம்மதமாக எண்ணி ஷிவா முதலில் உள்ளே சென்றான். அவனுக்கு பின் தீப்தி, அபிஷேக், நவ்யா கடைசியாக யுவன். யாரும் அந்த கதவின் வெளிப்புறத்தில் உள்ள கீறல்களை கவனிக்கவில்லை.


அந்த அறையில் துளியும் வெளிச்சம் இல்லை. மூன்று பக்கமும் அடிக்கி வைத்த பொருட்கள். இடையில் மரத்தால் செய்ய பட்ட மூன்று அடுக்கு ராக் (Rack). அது அந்த அறையை இரண்டாக பிரிந்தது. எனவே சேர்ந்து போக இடம் இல்லை.. ஒருவரின் பின் ஒருவராக சென்றனர்.


இடப்பக்கம் சென்று வலப்பக்கம் வருவது போல் அமைக்க பட்டு இருந்தது.


சின்னது முதல் பெரியது வரை எங்கேயும் பார்த்திராத.. பல நாட்டில் வாங்க பட்ட பொருள் போன்று தெரிந்தது.


நவ்யா கேமராவில் எல்லாம் பதிவு செய்தாள். தீப்தி பயத்தில் ஷிவாவை பின்னிருந்து தோள்பட்டையை பிடித்துக்கொண்டு வந்தாள். அவனும் பதிலுக்கு அவள் கையை பற்றிக் கொண்டான். இன்னொரு கையில் டார்ச் இருந்தது.


அபிஷேக் அவன் மொபைல் டார்ச் வைத்து இருந்தான். யுவன் கையில் ஷிவா வைத்து இருந்தது போல ஒரு லைட் இருந்தது.


ஷிவா - டேய், யாரும் எதையும் தொடாதிங்க டா. பார்த்து வாங்க. வேடிக்கை மட்டும் பாருங்க. புதுசா எதையும் கிளப்பி விட்டுறாதிங்க என்று எச்சரித்தான்.


தீப்தி - அபி, அவன் உன்ன தான் டா சொல்றான்


அபிஷேக் சும்மா இருக்காமல் அவள் தலையை கொட்டினான். முன் சென்ற மூவர் அங்கேயும் கலாட்டா செய்ய…


நவ்யா ஆர்வமாக எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு வந்தாள். பின்னாடி வந்த யுவன்… நவ்யாவை ரசித்துக்கொண்டு வந்தான். அவளுக்கு ஏதோ ஒரு பொருள் ஆர்வத்தை தூண்ட அதனை பார்த்து நின்று விட்டாள்.


அது என்னவென்று ஆர்வமாக பார்க்க…அப்போது அவளை சீண்டிப்பார்க்க வேண்டும் என்றே மூச்சு காற்று மேல படும் வாரு நெருங்கி வந்தான்.


பக்கவாட்டில் அவன் முகம் தெரிய… அசையாமல் அப்படியே நின்று இருந்தாள். நெருங்கி நின்ற யுவன்.. நவ்யா காதில் மெதுவான குரலில்


யுவன் - அப்போ கொடுத்த முத்தத்துக்கு ஒன்னுமே பதில் வரல


நவ்யா அதற்கு சிரிப்பு மட்டுமே பதிலாக தந்தாள்.


யுவன் - அது என்னோட ரொம்ப நாள் ஆசை டி அதான் அவசரமா….நான் உன்ன ரொம்ப காதலிக்கிறேன் நவி. இப்போ இல்ல நாலு வருஷமா என்றான் ஏக்கமாக.


அதிர்ச்சி அடைந்த நவ்யா அவன் முகம் பார்த்து திரும்பினாள். நண்பர்கள் கவனம் இங்கே வர கூடாது என்பதற்காக கையில் உள்ள லைட் ஐ ஆஃப் செய்து விட்டான். இவர்கள் நின்ற இடம் இருட்டாக இருந்தது.


அவள் திரும்பியவுடன்… நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். இந்த நொடிக்காக அவன் ஏங்கிய தருணம் ஏராளம்.


மெதுவாக அவள் காதில் “ இன்னைக்கு நைட்டு என்னோட ரூம்க்கு வா. எல்லாமே சொல்றேன் “ என்றான். காலையில் அவசரமாக கொடுத்த முத்தம் இப்போது நிதானமாக கொடுத்தான்.


உணர்ச்சியில் நவ்யா அவனை நன்றாக அணைத்துக்கொண்டாள். இப்போது மற்றொரு கன்னத்திலும் முத்தம் வைத்தான். இருவரின் நெற்றியும் ஒட்டி.. இதழில் முத்தம் இடும் வரும் போது…


அபிஷேக் எதையோ ஒரு பொருளை கீழே தெரியாமல் தள்ளி விட்டான். அதன் சத்தம் ‘ டங்….ங்ங்ங் ‘ என அறை எங்கும் எதிரொலித்தது. அதன் சத்தம் அடங்கவே நொடிகள் எடுத்தது. இவ்வளவு நேரம் நிசப்தமாக இருந்த அறையில் அந்த பொருள் எழுப்பிய ஒலி பயங்கரமாக கேட்டது.


முன்னாடி தைரியமாக சென்று கொண்டு இருந்த ஷிவாவே ஒரு நிமிடம் நடுங்கி விட்டான். தீப்தி கேட்கவே வேண்டாம்… எப்போதோ ஷிவா அணைப்பில் இருந்தாள்.


இவ்வளவு நேரம் காதலாக அனைத்து இருந்த யுவனின் அணைப்பு இப்போது பாதுகாப்பாக மாறியது. இடுப்பில் இருந்த கை… தோள்பட்டைக்கு மாறியது. நவ்யா உடல் நடுங்க நின்று இருந்தாள்.


அபிஷேக் - சாரி டா. தெரியாம கை தவறி விழுந்துடுச்சு. இருங்க நானே எடுத்து வெச்சிடுறேன் என்று குனியும் முன்


யுவன் - வேண்டாம் டா. எதையும் தொட வேண்டாம். சீக்கிரம் பாருங்க இல்லைனா கிளம்பலாம்.


நவ்யா… யுவன் அணைப்பில் இருக்க..


யுவன் - ஒன்னும் இல்ல டா. அதான் சீக்கிரம் போகலாம்னு சொல்லியாச்சுல. பயப்படாம போ. நான் உன் பின்னாடி தான் வர்றேன்.


நவ்யா - மாட்டேன் போக மாட்டேன் வா வெளிய போயிடலாம் என்று அணைப்பில் இருந்து விலக மாட்டேன் என்று அடம்செய்தாள்.


காலையில் கேட்ட சத்தம், பியானோ அதுவாக எழுப்பிய ஒளி, இப்போது நடந்த நிகழ்வு… இருட்டு அறை என எல்லாம் பயம் காட்டியது.


காதலி அணைத்துக்கொண்டு ஆசையில் பிரிய மாட்டேன் என்று சொல்வது வேறு பயத்தில் சொல்வது வேறு என்பதால் யுவன் அவளை சமாதானம் செய்தான்.


யுவன் - ரெண்டு பேரு சேர்ந்து நடக்க முடியாது மா. நீ முன்னாடி போ…. நம்ம கைய பிடிசிக்கலாம் சரியா. நீ நடந்தாதான் வெளிய போக முடியும் இல்லைனா இன்னும் லேட் ஆகும் மா என்றான் பொறுமையாக.


அது அவளிடம் வேலை செய்தது. நவ்யா முன்னே செல்ல யுவன் அவள் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு லைட் ஆன் செய்து பின்னே வந்தான்.


அபிக்கு பொருட்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்ததால் பார்க்க ஆர்வத்தை தூண்டியது. பொருட்களுக்கு இடையில் ஒரு கண்ணாடி பெட்டி…. நாளாபுறமும் கண்ணாடி தான்… 30 அடி ஸ்கேல் உயரம் இருந்து இருக்கும்… சாவி போடும் துளை எதுவும் இல்லாமல்… கைப்பிடி கொண்டு திறக்கும் வகையாக இருந்தது.


உள்ளே எதுவும் இல்லாமல் வெறும் கண்ணாடி பெட்டியாக இருந்தது. அங்காங்கே நகக்கீரல் தென்பட்டது.


மற்ற பொருட்களில் எல்லாம் ஏதோ ஒரு கலை வேலைப்பாடு இருந்தது. இது மட்டும் சாதாரணமாகவே இருந்தது. அது அபிஷேக் கண்ணில் மாட்ட… கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் அந்த கைப்பிடியை திருக்க… ‘ பட் ‘ என்று அந்த கண்ணாடி பெட்டி திறந்தது.


அதில் எதுவும் இல்லை என்றதும் அடுத்து கடந்து போய்விட்டான். தீப்தி, ஷிவா அந்த அறையை விட்டு பியானோ இருக்கும் அறை வந்து விட்டனர். அபிஷேக் வெளியே செல்ல கதவு அருகில் வந்து விட்டான். பின்னாடி இருப்பது யுவன், நவ்யா மட்டுமே…



யுவன் யோசனையுடன் வந்தான். காதலி இவனிடம் முதலில் கேட்டது இந்த அறையை விட்டு போனும் என்பதே. அதை மதிக்கமால் மேலும் நடக்க விட்டது கஷ்டமாக இருந்தது. நவ்யா கை வேர்த்து போய், சில் என்று இருந்தது பயத்தில்.


யுவன் - வா நவ்யா நம்ம போயிடலாம். கஷ்டப்பட்டு அங்க பார்க்க ஒன்னும் இல்ல. உனக்கு பயமா இருக்கு தான.. என்றான்.



அவளும் உடனே சரி என்று விட்டாள். இப்போது யுவன் வந்த வழியில் முன்னே செல்ல நவ்யா பின்னாடி வந்தாள். காலையில் கேட்டது போல லேசாக உறுமல் சத்தம் கேட்டது…. அதுவும் முதுகுக்கு பின்னால். முதுகு தண்டு சில்லிட வைத்தது. பின்னாடி திரும்பி பார்க்க பயமாக இருந்தது.
 
Top