logo

இருளின் ஒளி | Irulin oli | Episode 6

Mars

Administrator
யுவன் - என்ன ஆச்சு நவி? அதான் நம்ம வெளிய போகலாம்னு சொல்லிட்டேன்ல.. கதவு பக்கத்துல வந்துட்டோம் என்று வேகமாக அவளை இழுத்துக் கொண்டு ஓடி வெளியே வந்துவிட்டான்.



அபி, ஷிவா, தீப்தி வெளியே தான் நின்று கொண்டு இருந்தனர். அவர்களும் அப்போது தான் வந்து இருந்தனர்.



நவ்யா வெளியே வந்ததும் முதல் வேலையாக அந்த அறையை சாற்றினாள். அவள் செயல் விசித்திரமாக இருந்தது… வார்த்தை தந்தி அடிக்க



நவ்யா - எனக்கு… திரு… திரும்ப அந்த.. அந்த சத்தம் கேட்டுச்சு.. சொல்லும் போதே கண்கள் கலங்கி விட்டது…



தீப்தி - டி நவி என்ன இது சின்ன புள்ள மாதிரி… என்று வந்து சமாதானம் செய்தாள்.



யுவன் - நானும் உன் கூட தான இருந்தேன் எனக்கு கேக்கலையே… என்றான் யோசனையாக..



நவ்யா - என்னோட முதுகுக்கு பின்னாடி கேட்டுச்சு.. வாங்க கீழ போகலாம் எனக்கு இங்க ஏதோ சரி இல்லனு தோணுது…வாங்க



அந்த தளம் விட்டு நவ்யா முதலில் வெளியேற… மீண்டும் வந்து யுவன் கையை பிடித்து வெளியே கூட்டி வந்தாள். ஒருவர் பின் ஒருவராக கீழே வந்து விட்டனர்.



நவ்யா வேகமாக வந்து ஒரு பாட்டீல் நீரை எடுத்து வேகமாக குடித்தாள். இன்னும் படபடப்பு போக வில்லை. நண்பர்கள் நால்வரும் அவளையே விசித்திரமாக பார்த்தனர்.



தீப்தி - நிஜமாவே உனக்கு அந்த சத்தம் கேட்டுச்சா டி? என்றாள் பீதியுடன்.



நவ்யா - நான் சொல்றது யாரும் நம்ப மாட்டீங்களா? என்று பாவமாக வினாவினால். பார்வை ஒரு நொடி யுவனை தொட்டு மீண்டது.



அபிஷேக் - என்ன லூசு மாதிரி கேக்குற? நீ சொல்றது நம்புறோம். ஆனால் நீ நினைக்கிற மாதிரி பேய், பிசாசா இருக்காது. அந்த ரூம் பல வருஷமா பூட்டி இருந்திருக்கு. நம்ம திறந்த அப்போ தான் காற்றே உள்ள வந்துருக்கு… அதுவா கூட இருக்கலாம்.



ஷிவா - அபி தள்ளி விட்ட பொருள் ஓட எதிரொலியா இருக்கலாம் நவி. ஒன்னும் இல்ல. நம்ம இங்க வந்தது என்ஜாய் பண்ண. இனிமேல் அந்த பக்கம் யாரும் போக வேண்டாம் சரியா?!! என்று நண்பர்கள் எல்லோரும் சமாதானம் செய்தனர்.



நவ்யா ஒரளவுக்கு சமாதானம் அடைந்தாள். இரவு உணவு ரங்கன் வந்து கொடுத்தார். மதியம் உள்ள குழம்பு கொஞ்சம் இருக்க… அதையும் வைத்து இரவு உணவை உண்டனர். காலையில் அவர்கள் பார்த்த நாய் அவ்வபோது வெளியில் தென்பட… அதற்கு வைக்கலாம் என இரண்டொரு கறி துண்டு எடுத்து வைத்தனர்.



இருட்டிவிட்டது….



அந்த பங்களாவில்… வராண்டா இருக்க, அங்கு சாப்பிட்டதும் வந்து கதை பேச ஆரம்பித்து விட்டனர். குளிர்ச்சியான நிலவு, வாடை காற்றும் நண்பர்களுடன் பல கதைகள் என என்றும் நினைவில் இருக்கும் ஒரு தருணமாக இருந்தது.



காலேஜ் இல் நடந்த கதை, வேலை பற்றி பேச்சு, வீட்டில், பக்கத்து வீட்டில், ஃபோன் இல் பார்த்தது என பேச்சு எங்கோ தொடங்கி எங்கோ போய் கொண்டு இருந்தது.



அனைவருக்கும் உள்ளே ஏதோ உருட்டும் சத்தம் கேட்டது.



தீப்தி - டேய், நவ்யாக்கு கேட்ட மாதிரி எனக்கும் இப்போ சத்தம் கேக்க ஆரம்பிச்சிடுச்சு டா என்றாள் பயத்துடன்.



ஷிவா - உனக்கு மட்டும் இல்ல, எங்க எல்லாருக்கும் தான் கேட்குது. ஏதாவது எலியா இருக்கும். விடுங்க



அப்போது காலையில் பார்த்த அதே நாய் வாலை ஆடிக்கொண்டு வந்தது.



அபிஷேக் - நண்பா, வந்துட்டியா. உனக்கு தான் வெயிட் பண்ணேன். இரு உனக்கு சிக்கன் எடுத்து வெச்சிருக்கேன். கொண்டு வர்றேன் என்று எழுந்து உள்ளே சென்றான்.



மற்றவர்கள் விட்ட கதையை தொடர்ந்தனர்.



உள்ளே அபி செல்லும் போது கறி எல்லாம் கீழே சிதறி கிடந்தது. எலி தட்டி விட்டிருக்கும் என்று எண்ணி, கீழே கிடந்ததை எடுத்து திரும்ப எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். உள்ளே ஒரு ஜீவன் அவனை கோவமாக முறைத்ததை அவன் கவனிக்கவில்லை.



அபிஷேக் - டேய் அந்த மேனேஜர் கிட்ட கம்பிளைன் ( complaint) பண்ணனும் டா. எலி தொல்லை தாங்க முடியல. அவங்க இடத்துக்கு காசு கொடுத்து வந்திருக்கோம் அவங்க தான எல்லாம் சரியா பார்த்துக்கணும்.



ஷிவா - அபி, அந்த ஆளளே ஒரு மாதிரி இருக்கான். அவன் கிட்ட என்ன பேச சொல்ற ?



அபிஷேக் - அப்போ கண்டிப்பா அவங்க வெப்சைட்டை ல, கம்மியான ரேட்டிங் தான் குடுக்க போறேன்



தீப்தி - டேய் விடு டா. கோவப்படாத. ஒரு எலிக்கு போய் ஏன் டா இவ்வளவு டென்ஷன் ஆகுற…



வெளியே இருந்த நாய், வீட்டுக்கு உள்ளே பார்த்து குறைத்தது. அதனின் குறைப்பு ஜாஸ்தி ஆக, ஒரு கட்டத்தில் அடித்து பிடித்து வெளியே ஓடி விட்டது.



தீப்தி - என்ன அபி, உன்னோட நண்பன் ஒரு எலிய பார்த்து பயந்து ஓடுறான் என்று கிண்டல் செய்ய அபி அவளை அடிக்க வந்தான். தீப்தி அங்கு இருந்து ஓட, இவன் துறத்த என அவர்களது சேட்டையை செய்தனர்.



இப்போது நவ்யா, யுவன், ஷிவா மட்டுமே அமர்ந்து இருந்தனர்.



யுவன் - டேய் ஷிவா…



ஷிவா - சொல்லு மச்சான்..



யுவன் - எப்போ டா சொல்ல போற..



ஷிவா - என்ன மச்சி கேக்குற, எனக்கு புரியல



யுவன் - தீப்தி கிட்ட எப்போ உன்னோட மனச சொல்ல போற



ஷிவா அமைதியாக இருந்தான். நவ்யாவுக்கு இந்த சந்தேகம் முன்பே உண்டு. அவன் தீப்தியை பார்க்கிற பார்வை எப்போதும் ரசனையாக இருக்கும். ஆனால் வெளியே எதுவும் சொன்னது இல்ல. இப்போது யுவனின் கேள்வியில் அனைத்து புரிந்துவிட்டது.



ஷிவா - சொல்லனும் டா. ஆனா எப்படி சொல்லனு தெரியல. நான் சொல்ல போறத அவா விளையாட்டா எடுத்துகிட்டா என்ன செய்றது?



யுவன் யோசித்தான். அமைதியா இருந்த நவ்யா, வாயை திறந்தாள்



நவ்யா - ஷிவா, தீப்திக்கு எதுவும் நிஜம், எது விளையாட்டுனு நல்லா தெரியும். அவா ஒன்னும் பேபி இல்லை. நீ தைரியமா சொல்லு



ஷிவா - எல்லாம் சரி தான். ஆனால் காதலை சொல்லி இருக்குற நட்பையும் கெடுத்துக்க கூடாதுல. அவா மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லைனா என்ன செய்ய? அதான் யோசிக்கேன் என்றான் வருத்தமாக.



அவன் சொல்லுவது புரிந்தது. தீப்தி அனைவரிடமும் பழகும் விதத்தில் தான் ஷிவாவிடமும் பழகுவாள். அதில் வேறுபாடு தெரியாது. எனவே ஷிவா மனதை அவளிடம் திறக்க தயங்கினான். ஒரு தலை காதல் வலியை நன்றாக உணர்ந்தான்.



யுவன், நவ்யா மேலே எதுவும் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு. இனிமேல் அவனின் விருப்பம் தான். அவன் காதலுக்கு எதுவும் உதவி கேட்டால் தயங்காமல் செய்வார்கள்.




ஷிவா - அப்புறம், உங்க ரெண்டு பேருக்கும் என்னமோ நடக்குது போலயே?? என்றான் சிரிப்போடு



நவ்யா லேசாக வெட்கப்பட…



யுவன் - டேய் சொல்றேன் டா. உங்க கிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல போறேன் என்றான்.



நவ்யாவிடம் காதலை சொன்னான், ஆனால் வாய் வார்த்தையாக அவள் இன்னும் சொல்லவில்லை. இருவரும் பேச வேண்டி இருந்தது. எனவே சம்மந்தப்பட்டவர்கள் தெளிவாக பேசிய பின் நண்பர்களிடம் சொல்லலாம் என்று எண்ணினர். நேரம் ஆவதை உணர்ந்து உள்ளே செல்லலாம் என்று பேசும் போது தீப்தி, அபிஷேக் வந்துவிட்டனர்.




போகும் போது யுவன், நவ்யாவிடம் கண் ஜாடை காட்டிவிட்டு சென்றான். அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.



இவ்வளவு நேரம் வீட்டில் பதுங்கி இருந்த உருவம் அப்போது தான் நடமாட தொடங்கியது. மீண்டும் வந்து கறி இருக்கிறதா என்று பார்க்க… அந்த இடத்தில் வாடை மட்டுமே இருக்க, வெறியாகிவிட்டது.



தக்க நேரத்துக்கு காத்திருக்க மீண்டும் மூன்றாம் தளம் சென்றுவிட்டது. அது நடந்த இடங்கள் சிலதில் கீறல் தென்பட்டது.



தீப்தி, நவ்யா அறையில் தூங்க தயாராகினர். நவ்யாவுக்கு இரவில் தன் தோழியை தனியாக விட்டு செல்ல மனம் இல்லை. எனவே அவளிடம் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தாள்.



தீப்தி - என்ன நவி, பயங்கர யோசனையில இருக்க போல?



நவ்யா - உன்கிட்ட ஒன்னு சொல்லனும் டி. அதான்…



தீப்தி - என்ன டி, லவ் மேட்டர் ஆ? என்றாள் ஆர்வமாக.



நவ்யா ஆமா என்று தலைய மேலும் கீழும் ஆட்ட



தீப்தி - யுவனா??



அதற்கும் தலையை அசைத்தாள்.



தீப்தி - தெரியும் டி, ரெண்டும் கூட்டு களவாணி தான். எப்படி எப்படி சண்டை போடுவாங்களாம், பிடிக்காத மாதிரி நடிப்பாங்களாம் இப்போ லவ் பண்ணுவாங்களாம் என்று கிண்டல் செய்தாள்.



நவ்யா - அய்யோ! தீப்தி, நான் இன்னும் லவ் சொல்லவேயில்லை. இனிமேல் தான் பேசணும். நைட் தனியா பேசலாம்னு சொல்லிருக்கான். அதான்…



தீப்தி அவள் அருகில் வந்து அணைத்துக்கொண்டாள். எவ்வளவு நாள் தன் தோழி மற்றவர்களை போல் வயதுக்கு உரியது எதையும் அனுபவிக்காமல், வீட்டுக்காகவே உழைதுக்கொண்டு மட்டுமே இருக்கிறாள் என்று வருத்தப்பட்டு இருக்கிறாள்.



இனிமேலாவது அவள் சந்தோசமாக இருக்கனும் என்று வேண்டிக்கொண்டாள்.



தீப்தி - சரி போய்ட்டு வா. நான் ஷிவா ரூம்க்கு போறேன். இல்லனை ஹால்-க்கு அவனை வர சொல்லுறேன்.



நவ்யா வெளியே வர…மூன்றாவது மாடியில் இருந்து சிவப்பு நிறக் கண்கள் கொண்ட ஒரு உருவம் நவ்யாவை பார்த்துக்கொண்டே இருந்தது. வாயில் எல்லாம் எச்சில் ஊறியது.




முதலில் யுவன் அறை அடுத்து அறையில் அபி இருந்தான்.



அந்த உருவம் நவ்யா மேல் பாய நேரம் பார்த்து காத்திருக்க…
 
Top