logo

இருளின் ஒளி | Irulin oli | Episode 7

Mars

Administrator
அந்நேரம் யுவன் அவளை அறையின் உள்ளே இழுத்து இருந்தான். அந்த உருவத்துக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றமாக இருந்தது. பெறுங்குரல் எடுத்து ‘ ஊஊஊஊஊஊ’ என்று கத்தியது.



இந்த‌ சத்தம் நவ்யா, யுவன் இருவருக்கும் நன்றாக கேட்டது. நவ்யா பயப்பட…. யுவன் கையை பிடித்துக்கொண்டான்.



யுவன் - இது காடு நவி… நரி, ஓநாய் எதுவும் கத்திருக்கும் பயப்படாத. வந்து உக்காரு வா



நவ்யா பயத்தை ஓரம் தள்ளிவைத்தாள். இப்போது எண்ணம் யுவன், அவனுடன் இருக்கும் தனிமை. மனது படப்படப்பக இருந்தது. இது எல்லாம் அவளுக்கு ஒரு புது வித உணர்வு.



அபிக்கு அந்த சத்தம் கேட்கவில்லை காதில் இயர் ஃபோன் (Ear phone) போட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தான்.



தீப்தி ஷிவாவுக்கு கேட்டது. அவன் உடனே என்று அவர்களின் அறையை தட்டினான். தீப்தி மட்டுமே இருக்க.. நவ்யா பற்றி சொன்னாள். சரி என்று அவளுக்கு துணைக்கு அந்த அறையில் கீழே பெட்ஷீட் விரித்து படுத்துக்கொண்டான்.



யுவன் - நவி, நான் சொன்னதுக்கு பதிலே சொல்லல என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.



நவ்யா - யுவா, எனக்கும் சில கடமை இருக்கு. எங்க வீட்ல என்னோட சம்பாத்தியம் ரொம்ப முக்கியம். அதான் இத்தனை நாள் அதை நோக்கியே ஓடிக்கிட்டு இருக்கேன். என்னால எப்பவும் அந்த விஷயத்த விட்டு கொடுக்க முடியாது. எப்பவும் என்றாள் அழுத்தமாக.. ஆனா இந்த காதல்… ஆசையா இருக்கு.. எங்க என்னோட கடமை இதுக்கு தடையா இருக்குமோன்னு பயமாவும் இருக்கு என்று மனதில் உள்ளதை எல்லாம் கொட்டினாள்.



யுவனுக்கு அவள் மேல் இருக்கும் மதிப்பு கூடியது. இஷ்டத்துக்கு செலவு செய்து, ஊர் சுற்றும் பெண்கள் மத்தில் இவள் வித்தியாசமாக தெரிந்தாள்.



அவள் அருகில் வந்து அமர்ந்து…



யுவன் - புரியுது மா. என்னோட காதல் எப்பவும் உன்னோட கடமைக்கு தடையா இருக்காது சரியா. அதே போல நீ சம்பாதிச்சு வீட்டுக்கு குடுக்குறதையும் நான் என்னைக்கும் தடுக்க மாட்டேன். ஐ பிராமிஸ் என்று அவள் கை மேல் சத்தியம் செய்தான்.



நவ்யா மனது அப்போது தான் தெளிவாது. அவளது கவலை… எங்கே காதல் அல்லது கல்யாணம் செய்தால் பெற்ற வீட்டுக்கு காசு கொடுக்க கூடாது என்று தடை போடுவார்களோ என்ற யோசனை எப்போது இருக்கும். இப்போ தெளிவான மனதுடன் அவனை மனதில் ஏற்றுக்கொண்டாள்.



நவ்யா - அப்போ என்ன நாலு வருஷம் லவ் பண்றதா சொன்னீங்க.. என்று கேட்டாள் தயக்கம் ஆர்வம் எல்லாம் கலந்து இருந்தது அந்த கேள்வியில்.



யுவன் - இப்பவும் கேக்குறேன். நான் சொன்னது நீ இன்னும் பதில் சொல்லவே இல்லயே என்று கேட்டான் அவள் கண்களைப் பார்த்து.



நவ்யா - அது.. எனக்கும் யுவானா இஷ்டம் தான் என்றாள் சிரிப்புடன்.



யுவன் - ஓ, யுவா? ம்ம் இது எப்போதுல இருந்து… என்று சிரிக்க



நவ்யா அவன் புஜத்தில் விளையாட்டாக அடித்தாள். அவனும் சிரிப்புடன் வாங்கிக்கொண்டு.. அவள் இடுப்பில் கைகொடுத்து தூக்கி அவன் மடியில் அமர்திக்கொண்டான்.



அவள் மனதில் அவன் இருக்கிறான் என்று அவன் முத்தத்தை தடுக்காத அப்போவே புரிந்து கொண்டான். ஆனால் அவன் எதிர் பார்த்தது எல்லாம் அவள் வாய் வார்த்தை தான்.



பல நாள் ஓடிக்கொண்டு இருந்தவளுக்கு இளைப்பாற ஒரு இடம் கிடைத்தது போல் இருந்தது. அவன் கழுத்தை சுற்றி கை போட்டு மேலே சாய்ந்துக்கொண்டாள்.



யுவன் - காலேஜ் ல நீ ரொம்ப யாரும் கூடவும் ரொம்ப ஒட்டாம இருப்ப அப்போ என்னடா இந்த பொண்ணுன்னு இப்படி இருக்கேன்னு தோணும். ஆனா போக போக அதுவே உன் மேல ஒரு ஆர்வத்தை கொடுத்துச்சு. ஏதோ ஒரு குறிக்கோள் உன் மனசுல இருக்குதுன்னு புரிஞ்சு. அது உன்னோட குடும்ப சூழ்நிலைனு தெரியாது. வேலைக்கு வந்த அப்புறம் தான் உன்ன பத்தி நிறையா தெரிஞ்சுகிட்டேன். எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் டி “ என்று கன்னத்தில் முத்தம் வைத்தான்.



நவ்யா - அப்புறம் ஏன் எப்போ பார்த்தாலும் என்கிட்ட சிடு சிடுனு இருந்த யுவா?



யுவன் - அப்போ உன்னோட இயலாமை நினைச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதை எப்படி வெளிப்படுத்துரதுனு தெரியல அதான் அப்படி. சாரி டி.



நவ்யா - சாரி எல்லாம் ஏதுக்கு. நானும் உன்ன கஷ்ட படுத்திட்டேன். நேத்து நீ கூப்ட்டு உன்கூட வண்டியில வராம ஆட்டோல கிளம்பிட்டேன் என்றாள் சோகமாக



யுவன் - பரவாயில்லை. உன்கிட்ட ஒருத்தர் சிடு சிடுனு பேசுனா அவங்க கூப்ட உடனே யாரும் போகமாட்டாங்க, அதே தான் நீயும் பண்ண. விடு டி



இவர்கள் இந்து கதைத்து கொண்டு இருக்க… யுவன் அறைக்கு மேல் உள்ளே மூன்றாம் தளத்தில் உள்ள அறையில் இருந்த உருவம்… பியானோ ரூம் ஐ அலங்கோல படுத்தியது.



இவர்கள் இருந்த அறைக்கு நேர் மேல் என்பதால் அந்த அதிர்வு இவர்களுக்கு கேட்டது. சந்தோசமாக இருந்த தருணம் தலைகீழாக மாறியது. இருவருக்கு பயம் ஆட்கொள்ள…





நவ்யா - யுவா யுவா என்ன சத்தம் அது? யாரோ இருக்குற மாதிரி தோணுது.. எனக்கு பயமா இருக்கு



யுவன் - பயப்படாத. ஒன்னும் இல்ல. வா நம்ம கீழ போயிடலாம் என்றவன் அவள் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு மெதுவாக கதவை திறந்தான். சத்தம் எழுப்பாமல் கீழே தீப்தி , ஷிவா இருக்கும் அறை பக்கம் வந்துவிட்டனர்.



நேரம் ஆக ஆக சத்தம் அதிகமாக கேட்க… வேர்க்க ஆரம்பித்துவிட்டது. பயம் ஆட்கொள்ள.. கீழே வந்ததும் மூன்றாம் மாடியை பார்க்க யாரும் இப்பதாக கண்ணுக்கு தெரியவில்லை ஆனால் சத்தத்தை வைத்து பார்க்கும் போது அந்த அறையில் பொருளை போட்டு உடைப்பு புரிந்தது. மேலும் உறுமல் சத்தம் நன்றாக கேட்டது.



அந்த உருவம் ஹாலில் நடந்த போது வாயில் இருந்து வடிந்த உமிழ்நீர் தரையில் இருந்தது.



தீப்தி, ஷிவா வெளியே வந்துவிட்டனர். தீப்தி சொல்லவே வேண்டாம் பயத்தில் தான் இருந்தாள். அப்போது அந்த உமிழ்நீரை ஷிவா பார்த்து அனைவரையும் பார்க்கும் வாரு ஜாடை செய்தான்.



நால்வரும் பயத்தில் மூன்றாம் மாடியை பார்த்த வாரு நின்று இருந்தனர். அபிஷேக் இன்னும் வந்த பாடு இல்லை.



தீப்தி - என்ன சத்தம் அது?



நவ்யா - அபி இன்னும் வரல. அவன் தூங்கிட்டானா



ஷிவா - டேய் ஃபோன் பண்ணி பார்ப்போமா?



யுவன் - சத்தம் கேட்டு அது வந்துருச்சுனா??




தீப்தி - “அது” என்னவா இருக்கும்??



சுற்றிலும் இருட்டு, இருட்டில் பழகிய பின் தான் சுற்றி இருப்பது புலப்பட்டது. மேலே அமானுஷ்யமான சத்தம். நண்பன் இல்லாமல் வெளியே போகவும் மனம் இல்லை.



அப்போது சரியாக அபிஷேக் கதவை திறந்து வெளியே வந்தான். வந்தவன் சும்மா இருக்காமல்



அபி - யாருடா அவன்? தூங்க விடாமல் சத்தம் போடுறது. டேய் ஷிவா நாயே நீ தானா?? என்று எட்டி பார்க்க நண்பர்கள் கீழே நின்றுகொண்டு இருந்தனர்.



அமைதியாக இருக்கும் படி செய்கை செய்ய… அவன் அதனை புரிந்துகொள்ளாமல்



அபி - என்னடா எல்லாரும் ஒன்னா கீழே என்ன செய்றீங்க? ஆமா ஏன் எல்லோரும் மாடிய பாக்குறீங்க ? நான் இங்க இருக்கேன் என்று கையை வேறு அசைத்து காட்ட..



நண்பர்கள் இன்னும் அவனை கவனிக்காமல் மேலே பார்க்க… அவர்கள் கண் போன திசையில் அவனும் திரும்பி பார்க்க.. அந்த இருட்டில் இரண்டு சிவப்பு நிற கண்கள். கூர்மையான பற்கள், வாயில் வடிந்த உமிழ்நீர் அந்த காட்சி அவனை உறைய வைத்தது.



அவன் பயத்தில் கதற, அந்த உருவம் அபி மேல் பாய அவன் அங்கு இருந்து நகர சரியாக இருந்தது. அது நாலு கால் பாய்ச்சில் வந்தது. இப்போது அது ஒரு நாய் என்று தெள்ளந்தெளிவாக தெரிந்தது.



அபி “ஓடுங்கடா” என கதறிய படி வேகம் எடுத்தான். மற்றவர்களும் தெறித்து ஓடினர். நவ்யா கையை யுவன் விடவே இல்லை. அந்த பங்களா உள்ளே அவர்கள் ஓடினார்கள். ஒவ்வொரு மூலையிலும் அந்த நாய் அவர்களை துரத்தியது.



கீழ் தளத்தில் உபயோகம் பண்ணாத ஒரு அறை இருக்க… யுவன், நவ்யாவை இழுத்துக்கொண்டு அதை நோக்கி ஓடினான்.



எல்லோருக்கும் மூச்சு தாறுமாறாக வாங்கியது. ஷிவா ,அபி கையில் கிடைக்கும் பொருள் எல்லாம் அந்த நாய் மீது வீசினர். ஆனால் அது அதே வேகத்தில் தான் துரத்தியது.



யுவன், நவ்யா ஒரு வழியாக அந்த அறைக்கு வந்துவிட்டனர், அடுத்தடுத்த நொடியில் மற்ற மூவரும் உள்ளே வர.. எல்லோரும் சேர்ந்து கதை மூடவும்.. அந்த நாய் வெளிக் கதவில் மோதவும் சரியாக இருந்தது.



எல்லோரும் அது உள்ளே வரமால் கதவை நன்றாக பிடித்துக்கொண்டனர். ஆனால் அதன் பலம் அபாரமாக இருந்தது. ஐவரால் அதனை சமாளிக்க முடியவில்லை. அது விட்டால் கதவை உடைந்துவிடும்.



ஓரமாக ஒரு மர பீரோ இருக்க… அபி, ஷிவா விரைவாக சென்று அதனை நகர்த்தி கதவின் முன்னே வைத்தனர். அந்த நாய் வெளியே ஊளையிட உள்ளே இருப்பவர்கள் நடுங்கி போய் இருந்தனர்.




அபி - டேய், என்னது டா அது? இவ்வளவு பெருசா இருக்கு. இப்படி ஒரு நாயை நான் இது வரைக்கும் பார்த்ததே இல்லை



ஷிவா - அது கண்ணை யாராச்சும் பார்த்தீங்களா? எவ்வளவு சிவப்பா இருக்குது. யாப்பா என்று அதிர்ந்தான்.




நவ்யா - நான் தான் காலைல இருந்து சொன்னேன் ஏதோ சத்தம் கேக்குதுனு, யாருமே நம்பல, ஏதோ ஒரு காரணம் சொல்லி சமளிச்சீங்க.



தீப்தி அழுதுகொண்டு “ கண்டிப்பா நம்ம சாகப் போறோம். அது நம்மளை கொன்றும் என்னும் போதே வெளியே கதவை அது மோதுவது ‘ டம் ‘ ‘ டம் ‘ என்று கேட்டது.



ஷிவா - எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. இங்க இருந்து தப்பிக்கிற வழியா பார்ப்போம்.



யுவன் - எனக்கு எண்ணமோ அந்த ரூம்க்கு உள்ள போனதுனால வந்த பிரச்சனைனு தோணுது. உள்ள நானும் நவ்யா மட்டும் இருந்த அப்போ பின்னாடி சத்தம் கேக்குதுனு சொன்னா… சோ அங்க தான் ஏதோ நடந்திருக்கு.



ஷிவா - டேய் பிரச்சனை எங்க ஆரம்பிச்சதுனு யோசிக்காம, எப்படி தப்பிக்கலாம்னு யோசிக்கலாம் டா, இன்னும் எவ்வளவு நேரம் இது தாக்குப்பிடிக்கும்னு தெரியல என்றான் அந்த மர பீரோவை காட்டி.



யுவன் - எல்லாம் சரி தான் டா. ஆனா இது வந்த இடத்துக்கே அனுபுனாதான தப்பிக்க முடியும், அதுக்கு இது எங்க இருந்து வந்ததுனு தெரியனுமே



தீப்தி - இதை பார்க்க பேய் நாய் மாதிரி இருக்கு… அது கண்ணு பார்த்தியா எவ்வளவு சிவப்பா இருக்கு. இரத்தம் கூட இவ்வளவு டார்க் ஆ (Dark) இருக்காது .




அது சாதாரண நாயை விட பெரியதாக இருந்தது. கையில் உள்ள நகம் எல்லாம் நீண்டு வளர்ந்து இருந்தது. சொரி பிடித்த நாயை போல் இருக்க, யாருக்கும் என்றாலும் அதனை பார்த்து பயம் வரத்தான் செய்யும். அந்த மிருகம் வெளியே இருந்து கதவை மோதிக்கொண்டே இருந்தது.



நவ்யா அழ, யுவன் அவளை தோளில் கையை போட்டு தன்னோடு அணைத்துக்கொண்டான். அபி, தீப்தியை அழ வேண்டாம் என்று சமாதானம் செய்தான். ஷிவா அங்கு இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தான்.




யுவன் - டேய், யாரும் இங்க வந்து வித்தியாசமா எதுவும் பார்த்தீங்களா, இல்ல தொட்டீங்களா?



எல்லோரும் விழிக்க, அப்போது ஷிவா..



ஷிவா - நம்ம அந்த அறைக்கு போன அப்புறம் தான் இந்த மிருகம் வெளிய வந்துருக்கு. அங்க யாரும்.. எதுவும்?? என்று கேள்வியோடு பார்க்க..



இல்லை என்பது போல் தலையை ஆட்டினர் அபியை தவிர.



ஷிவா - டேய் அபி, என்ன டா நீ எதுவும் தொட்டியா?? என்றான் அதிர்ச்சியாக.



அபி - ஆமா டா. முதல்ல ஒரு பொருள் அதுவா தான் டா கீழ விழுந்தது. அடுத்து ஒரு கண்ணாடி டப்பா இருந்தது. அதை சும்மா தொறந்தேன். அவ்ளோதான் டா. ஆனா அதுக்கு உள்ள ஒன்னுமே இல்லடா என்றான் தயக்கத்துடன்.



ஷிவா - ஏன் டா டேய், அதான் அங்க யாரையும் எதையும் தொட வேண்டாம்னு சொன்னோம்ல அப்புறம் ஏன் டா அதை திறந்த அறிவுகெட்டவனே என்று முதுகில் இரண்டு அடி வைத்தான்.



யுவன் - அமைதியா இருங்க டா. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். அபி, நீ கொஞ்சம் கவனமா இருக்கனும் இனிமேல். யாரும் ஃபோன் எடுத்து வந்தீங்களா??
 
Top