ரங்கன் அங்கு இருந்து டேபிளில் உணவை வைத்துக்கொண்டு இருந்தார். அப்போது தான் அவர்களுக்கு போன உயிர் மீண்டும் வந்தது. அவர்களை தொடர்ந்து தீப்தி, நவ்யா வந்துவிட்டனர்.
ரங்கன் - என்ன ஆச்சு தம்பி? வீடு ஏன் இப்படி இருக்கு? எதுவும் பிரச்சனையா?
தீப்தி - அது வந்து.. இங்கு ஒரு மிரு…
யுவன் - அது ஒன்னும் இல்லை. விளையாடிட்டு இருந்தோம். தெரியாம பொருள் சிலது கை பட்டு கீழே விழுந்துடுச்சு அவ்ளோதான்.. என்று சொல்லி கண்களை செய்கை செய்தான் நண்பர்களை பார்த்து.
ரங்கா சிரித்து விட்டு வேறு எதுவும் வேண்டும் என்றால் சொல்ல சொல்லி நடையை கட்டினார்.
ஷிவா - ஒரு நிமிஷம், வந்து… சாப்பாடு மதியம் கொண்டு வர வேண்டாம். அவசர வேலையா நாங்க ஊருக்கு கிளம்ப போறோம். அதான்.. சாப்பாடு ரொம்ப நல்ல இருந்தது ரொம்ப நன்றி என்றான்.
இதற்கு மேல் அவரை உள்ளே விட்டு அவரின் உயிரை பணயம் வைக்க விருப்பம் இல்லை. மேலும் இப்போதே தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் அனைவரும் இருந்தனர்.
ரங்கன் - சரி தம்பி. பாத்து பக்குவமா போய்ட்டு வாங்க. அடுத்த முறை லீவ்வுக்கு நம்ம ஊருக்கு கண்டிப்பா வரனும். நன்றி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
என்னது இன்னொரு முறை வரணுமா என்று அனைவரும் திகைத்து நின்றனர்.
அப்போது தான் புரிந்தது அந்த மிருகம் இரவில் தான் வெளியே வரும் என்பது. மூன்றாவது மாடியில் அந்த மிருகம் இருக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் பயந்து மேலே பார்க்கும் போது நான்காவது மாடிக்கு அது ஓடும் சத்தம் கேட்டது.
இது தான் சரியான நேரம் என்பதால் அனைவரும் அவர்கள் உடமைகளை எடுக்க அவரவர் அறைக்கு சென்றனர். மாடியில் யுவன் , அபி அறை இருப்பதால் அபி துணைக்கு யுவன் கூடே சென்றான். கீழே பெண்கள் துணைக்கு ஷிவா இருந்தான். அவர்கள் கையில் எல்லாம் பெரிய மர கட்டை இருந்தது.
அபி பொருட்கள் எடுத்த பின் யுவன் அறைக்கு வந்து அவன் பொருட்கள் வேகமாக எடுத்துக்கொண்டு கீழே வந்தனர்.
யுவன் மனம் எல்லாம் அந்த மிருகத்தை அடைக்கமால் அப்படியே விட்டு செல்வதில் இருந்தது. மீண்டும் இங்க பங்களாவிற்கு வரும் நபர்களுக்கு ஆபத்து தான். இந்த மிருகம் ஊருக்குள் சென்றால் நினைத்து பார்க்கவே கொடூரமாக இருந்தது.
எல்லோரும் அவரவர் பொருட்களை எடுத்துக்கொண்டு ஹால் வந்துவிட்டனர். எல்லோரும் கிளம்புவதில் தான் முனைப்பாக இருந்தனர்.
ஷிவா - எல்லாரும் எடுத்த வரைக்கும் போதும்; வாங்க கிளம்பலாம் நேரம் ஆகுது, சீக்கிரம். டேய் யுவன் கார் சாவி எடுத்தியா?
யுவன் அமைதியாக இருந்தான். நண்பர்கள் கவனம் இப்போது அவன் பக்கம் சென்றது.
ஷிவா - என்ன டா அமைதியா இருக்க? கார் சாவி எடுக்கலையா? மாடில இருக்கா? நான் கூட வர்றேன் வா என்று அவன் கையை பிடித்து இழுக்க
சாவி எடுத்து ஷிவா கையில் வைத்தான். ஷிவா கேள்வியாக பார்க்க
யுவன் - இந்தா சாவி. நீங்க கிளம்புங்க நான் வரல.
இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகி விட்டனர். அபி கடுப்பாகி விட்டான்.
அபிஷேக் - என்ன டா சொல்ற? வராம இங்க என்ன செய்ய போற? ஏன் டா லூசு மாதிரி பேசுற
யுவன் - அந்த மிருகத்தை அப்படியே விட்டுடு போனா அடுத்து வர்றவங்களுக்கு ஆபத்து அதான் அதை அழிக்க ஏதாச்சும் வழி இருக்கானு பார்க்க போறேன்.
நவ்யா - நம்ம இருக்குற நிலமையில தப்பிக்கிறது தான் சரி. பிளீஸ் சொல்றத கேளு. வா போயிடலாம். பிளீஸ் என அழ ஆரம்பித்துவிட்டாள்.
ஷிவா - நவ்யா சரியா தான் சொல்றான் அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும். யார்ரா இருந்தாலும் இந்த நிலைமையில இப்படி தான் செய்வாங்க. நம்ம தப்பிச்சு போறது தான் இப்போ முக்கியம் வா டா. பிளீஸ்
தீப்தி - உனக்கு என்ன டா ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற. பயம் காட்டாத டா. வா போயிடலாம்.
யுவன் - நான் உங்களை யாரையும் இருக்க சொல்லல. நான் இருக்கேன்னு தான் சொன்னேன். இதை இப்படியே விட்டுட்டு போக எனக்கு மனசே இல்ல டா. இங்க வந்து அடுத்து யாருக்கும் உயிர் பலி ஆகிடுச்சுனா… வேண்டாம் டா.. எனக்கு என்னமோ அந்த கண்ணாடி பெட்டியை திரும்ப மூடிட்டா அது திரும்ப அடைபட்டுடும்னு தோணுது. நான் அதை பாத்துக்கிறேன். நீங்க எல்லாரும் கிளம்புங்க.
இவனை லூசா என்பது போல் பார்த்தனர். இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களை பற்றி சிந்திப்பவர்களை இந்த உலகம் லூசு என்று பெயர் கட்டும் போல்.
தீப்தி - டேய் யுவன். அந்த கண்ணாடி பெட்டி மாடியில இருக்கு டா. திரும்ப அங்க போக போறியா? என்றாள் அதிர்ச்சியாக.
நவ்யா நிலமை இன்னும் மோசமாக இருந்தது. நேற்று தான் காதலை சொன்னான். அவனோடு வாழ இன்னும் கனவு கோட்டை கூட கட்டவில்லை அதற்குள் மற்றவர்களுக்காக உயிரை பணயம் வைக்க போகிறேன் என்று சொல்கிறான் என்று கவலையாக இருந்தது.
இவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக அவனிடம் பேசினார்கள். கெஞ்சி, கொஞ்சி, அழுது, கோபப்பட்டு, அடித்து, மிரட்டி எல்லாம் செய்து பார்த்தனர். ஆனால் யுவன் அசையவே இல்லை. அதற்குள் மதியம் நேரம் நெருங்கி விட்டது.
ரங்கன் கொடுத்த உணவை சாப்பிட்டு இருந்தனர். மாடியில் சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. மாடியில் பார்க்கும் போது இருட்டில் இரத்த சிவப்பான கண்கள் தெரிந்தது. அதனை பார்க்கும் போது யாருக்கும் இந்த வீட்டில் இருக்க மனம் இல்லை.
அபி - நானும் யுவன் கூட இருக்க போறேன். என்னால தான பிரச்சனை ஆரம்பிச்சது. நானும் வரல என்றான் உறுதியாக.
யுவன் அபியை கிளம்ப சொல்லி எவ்வளவோ சொல்ல அவனும் கேட்கவில்லை. ஒரு முடிவாக ஷிவா, நவ்யா, தீப்தி காரில் வெயிட் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. யுவன், அபி வந்ததும் அவர்களை கூட்டி செல்வதாக பேசி வைத்தனர்.
சாவி வாங்கிக்கொண்டு ஷிவா, தீப்தி, நவ்யா காரில் ஏறி பத்திரமாக அமர்ந்துகொண்டனர். அந்நேரம் யுவன், அபி மாடிக்கு படி ஏறினர்.
இப்போது அவர்களுக்கு சத்தம் நான்காவது அறையில் தான் கேட்டது. மூன்றாவது மாடியில்(பியானோ அறை) அந்த அறிய பொருட்கள் இருக்கும் அறைக்கு சென்று… கண்ணாடி பெட்டி எடுப்பது என்று பிளான் செய்தனர்.
அதன் படி மெதுவாக நடந்தனர். ஒரு சிறு ஒலி கூட எழுப்ப கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். கையில் பெரிய மரக்கட்டை இருந்தது. இன்னொரு கையில் டார்ச் லைட் வைத்து இருந்தனர். மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு ஒரு ஒரு அடியை வைத்தனர்.
அந்த அறை திறந்து தான் இருந்தது. டும் இருட்டு. ஒரு பொட்டு வெளிச்சம் இல்லை. வலது பக்க வரிசையில் தான் அந்த பெட்டி இருப்பதாக கீழே இருக்கும் போது அபி யுவனின் சொல்லி இருந்தான். மாடியில் பொருட்கள் உருளும் சத்தம் கேட்டது. எனவே தைரியமாக உள்ளே சென்றனர். டார்ச் லைட் வெளிச்சத்தில் சரியான இடம் வந்து சேர்ந்தனர்.
அந்த அறையில் பெரிய மணிக்கூண்டு ஓரமாக இருந்தது. அதன் மேல் ஏதோ படுத்து இருக்கிறது போல நமக்கு தெரிகிறதே! என்னவா இருக்கும். கொஞ்சம் ஜூம் செய்து பார்த்தால் ஏதோ கருப்பாக தெரிந்தது. பழைய பொருட்கள் மேல் போட்டு இருக்கும் துணி போல் அல்லவா இருக்கிறது. இன்னும் ஜூம் வைத்து பார்த்த போது தான் அந்த கருப்பு துணி அசைவது போல் தெரிகிறது. அந்த இருட்டில் இருந்து இரண்டு சிவப்பு நிறம் கொண்ட கண்களை. அப்போது மாடியில் இருப்பது???
இதனை அறியாத யுவன், அபி அந்த கண்ணாடி பெட்டியை எடுக்கும் போது பின்னால் ஒரு உறுமல் சத்தம். அது யாரு என்று கிரக்கிக அவர்களுக்கு நேரம் அவகாசம் தேவை இல்லயே. இருவருக்கும் உடம் முழுக்க குப் என்று வேர்த்தது. தொண்டைக்குழி ஏற இறங்க மெதுவாக பின்னாடி திரும்பி பார்த்தனர்.
அவர்கள் உயரத்துக்கு பாதிக்கு மேல் இருந்தது அந்த நாய். கூர்மையான பற்கள் வாய்க்கு வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. கண்களில் அப்படி ஒரு வெறி. அது சரியாக வாசலில் நின்று இருக்க நன்றாக உள்ளே மாடிக்கொண்டனர்.
யுவன் அந்த கண்ணாடி பெட்டி எடுக்க மெதுவாக கையை நீட்ட “ உர்ர்ர் “ என்று ஒரு அடி முன்னால் வந்தது. அபி கேட்கவே வேண்டாம் கால்கள் நடுங்க அந்த நாயின் முன்பு நின்று கொண்டு இருந்தான்.
(அந்த அறையில் முதலில் நுழைந்தது யுவன். எனவே பின்னாடி இருந்து பார்க்கும் போது அபி முன்னிலையில் இருந்தான். அந்த நாய் கதவில் அருகே வந்த போது முதலில் நின்று இருந்தது அபி)
அது ஒரு ஒரு அடியாக முன்னாடி வர இவர்கள் பின்னாடி நடந்தனர். அவர்களை கடிக்கலாம் என்று வாயை திறந்து பாயும் முன் பின்னாடி இருந்து தீப்பந்தம் வைத்து ஒரு அடி அந்த நாய்க்கு விழுந்தது. தீப்பந்தம் நாயின் உடலில் பட்டதும் அது வலியில் கத்தியது. அதன் சத்தம் அந்த அறையில் உள்ள பொருட்களையே அதிற வைத்தது. ஒரு நிமிடம் அதன் கவனம் பின் பக்கம் செல்ல… யாரு என்று பார்த்தால் நவ்யா நின்று இருந்தாள்.
அது அவள் மேல் பாயப்பார்க்க மீண்டும் அதன் முன்னாடி தீப்பந்தத்தை வைத்து ஒரு அடி. யுவன் அந்த நேரத்தை பயன் படுத்தி அந்த கண்ணாடி பெட்டியை எடுத்துவிட்டான். அதனை பூட்டலம் என்று பார்த்தால் அதன் கைப்பிடி இறுக்கமாக இருந்தது.
ஒரு பக்கம் நவ்யாவும் மறுபக்கம் அபி என்று அதனை சமாளித்து கொண்டு இருந்தனர். அது அறையில் உள்ளே அபியை அதிகமாக தாக்க ஆரம்பித்தது. எனவே இடப்பக்கம் வழியாக நகர ஆரம்பித்து விட்டனர். கதவுக்கு அருகில் நவ்யா இருக்க அவள் பக்கம் யுவன் முதலில் வந்து விட்டான். பின்னாடி அபி ஓடி வர அந்த மிருகம் அபியை துறத்த… தப்பித்து வெளியே வர பார்க்கையில் அவன் முதுகில் மூன்று நகங்கள் கொண்டு பரண்டி விட்டது.
சதையை கிழித்துக்கொண்டு நகம் உள்ளே இறங்கியது. அந்நேரம் நவ்யா கையில் உள்ள தீப்பந்தம் வைத்து அதன் கண்ணில் நன்றாக சொருக… அது அசந்த நேரம் அந்த அறையின் கதவை மூடி விட்டனர்.
சூரியன் மறைய தொடங்கி விட்டது. இனிமேல் வரும் நேரம் அந்த மிருகம் பலமாக இருக்கும் எனவே அந்த பியானோ அறையில் வைத்தே அந்த கண்ணாடி பெட்டியை மூட முயற்சி செய்தனர்.
அந்த நாய்.. கதவை போட்டு உலுக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக கதவு முறிவது தெரிந்தது. கதவு உடைந்து கொண்டிருக்க, யுவன் மற்றும் நவ்யா பதட்டத்தில் இருந்தனர். அபி காயமடைந்து இருந்ததால், நவயை அவனை ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டு, யுவனுடன் சேர்ந்து கண்ணாடி பெட்டியை மூட முயற்சி செய்தாள்.
அதன் கை பிடி திருகுவது போல் இருக்க… முன்புக்கு இப்போது கொஞ்சம் தள்ள முடிந்தது. மிருகம் கதவை பாதி நொறுக்கி விட்டது.
யுவன் - நவ்யா, இங்க இருந்து போ. பிளீஸ் நான் பாத்துக்கிறேன். அது எப்போனாலும் வெளிய வரும்.
நவ்யா - யுவா நான் உன் கூட தான் இருப்பேன். நான் என்ன சும்மா உள்ள லவ் பண்றேன்னு சொன்னேன்னு நினைச்சியா. சாகுற வரைக்கும் உன் கூடத்தான்.
அவள் இவ்வளவு தூரம் தன் மேல் காதல் வைப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இவள் காதலில் வாழ்ந்து பார்க்க ஆசை வந்தது. காதலனுக்காக சாவின் விளிம்பில் வரை வந்துவிட்டாள். இவளுடன் இருக்கும் வாழ்க்கை கண்டிப்பாக சொர்க்கமாகத்தான் இருக்கும் அல்லவா?! எனவே இருவரும் சேர்ந்து அந்த கைப்பிடி கொண்டு அந்த கண்ணாடி பெட்டி கதவை மூட…. அந்த மிருகம் நாலுகால் பாய்ச்சலில் இவர்கள் மேல் பாயவும் சரியாக இருந்தது.
யுவன் நவ்யாவை அணைத்துக்கொள்ள… இவர்கள் மேல் பாய வந்த மிருகம் மாயமாக மறைந்து காற்றோடு காற்றாக போனது. நவ்யா யுவனை அணைத்துக்கொண்டு சிரிப்பின் ஊடே அழுதாள். அவர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நண்பன் செய்த தவறை சரி செய்வதே நட்பின் வேலை. அதை இவர்கள் செய்தனர்.
பின் இருவரும் அபி பக்கம் சென்று அவனை கைத்தாங்கலாக நிற்க வைத்தனர். அபிக்கு நினைவு இருந்தது, முதுகில் நன்றாக காயம் பட்டு இருந்தது.
அபி - ஷ்ஷ்ஷ்.. ஆ ஆ ஆ வலிக்குது டா என்றான் வேதனையான குரலில்.
யுவன் - ஒன்னும் இல்ல டா. இப்போவே ஹாஸ்பிட்டல் போகலாம். சீக்கிரம் போயிடலாம். நவ்யா அபியை ஒரு கை பிடி என்றவன் வேகமாக சென்று அந்த அறிய வகை பொருட்கள் அறையின் கதவுக்கு இருக்கும் ஸ்கிரீன் திரும்ப போட்டு விட்டு பியானோ, இன்னும் சில கனமான பொருட்களை நகர்த்தி முன்னே வைத்தான். அவனால் முடிந்த அளவு தடுப்பு வைத்தான்.
மூவருக்கும் காயம் ஏற்ப்பட்டது. இதில் அபிக்கு தான் அந்த மிருகத்தால் ஏற்பட்ட காயம் பெரிது.
அபி, நவ்யா நடக்க ஆரம்பித்துவிட்டனர். நான்காவது மாடியும் மீண்டும் ஏதோ உருளும் சத்தம் கேட்ட… மிரண்டு விட்டனர்.
ரங்கன் - என்ன ஆச்சு தம்பி? வீடு ஏன் இப்படி இருக்கு? எதுவும் பிரச்சனையா?
தீப்தி - அது வந்து.. இங்கு ஒரு மிரு…
யுவன் - அது ஒன்னும் இல்லை. விளையாடிட்டு இருந்தோம். தெரியாம பொருள் சிலது கை பட்டு கீழே விழுந்துடுச்சு அவ்ளோதான்.. என்று சொல்லி கண்களை செய்கை செய்தான் நண்பர்களை பார்த்து.
ரங்கா சிரித்து விட்டு வேறு எதுவும் வேண்டும் என்றால் சொல்ல சொல்லி நடையை கட்டினார்.
ஷிவா - ஒரு நிமிஷம், வந்து… சாப்பாடு மதியம் கொண்டு வர வேண்டாம். அவசர வேலையா நாங்க ஊருக்கு கிளம்ப போறோம். அதான்.. சாப்பாடு ரொம்ப நல்ல இருந்தது ரொம்ப நன்றி என்றான்.
இதற்கு மேல் அவரை உள்ளே விட்டு அவரின் உயிரை பணயம் வைக்க விருப்பம் இல்லை. மேலும் இப்போதே தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் அனைவரும் இருந்தனர்.
ரங்கன் - சரி தம்பி. பாத்து பக்குவமா போய்ட்டு வாங்க. அடுத்த முறை லீவ்வுக்கு நம்ம ஊருக்கு கண்டிப்பா வரனும். நன்றி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
என்னது இன்னொரு முறை வரணுமா என்று அனைவரும் திகைத்து நின்றனர்.
அப்போது தான் புரிந்தது அந்த மிருகம் இரவில் தான் வெளியே வரும் என்பது. மூன்றாவது மாடியில் அந்த மிருகம் இருக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் பயந்து மேலே பார்க்கும் போது நான்காவது மாடிக்கு அது ஓடும் சத்தம் கேட்டது.
இது தான் சரியான நேரம் என்பதால் அனைவரும் அவர்கள் உடமைகளை எடுக்க அவரவர் அறைக்கு சென்றனர். மாடியில் யுவன் , அபி அறை இருப்பதால் அபி துணைக்கு யுவன் கூடே சென்றான். கீழே பெண்கள் துணைக்கு ஷிவா இருந்தான். அவர்கள் கையில் எல்லாம் பெரிய மர கட்டை இருந்தது.
அபி பொருட்கள் எடுத்த பின் யுவன் அறைக்கு வந்து அவன் பொருட்கள் வேகமாக எடுத்துக்கொண்டு கீழே வந்தனர்.
யுவன் மனம் எல்லாம் அந்த மிருகத்தை அடைக்கமால் அப்படியே விட்டு செல்வதில் இருந்தது. மீண்டும் இங்க பங்களாவிற்கு வரும் நபர்களுக்கு ஆபத்து தான். இந்த மிருகம் ஊருக்குள் சென்றால் நினைத்து பார்க்கவே கொடூரமாக இருந்தது.
எல்லோரும் அவரவர் பொருட்களை எடுத்துக்கொண்டு ஹால் வந்துவிட்டனர். எல்லோரும் கிளம்புவதில் தான் முனைப்பாக இருந்தனர்.
ஷிவா - எல்லாரும் எடுத்த வரைக்கும் போதும்; வாங்க கிளம்பலாம் நேரம் ஆகுது, சீக்கிரம். டேய் யுவன் கார் சாவி எடுத்தியா?
யுவன் அமைதியாக இருந்தான். நண்பர்கள் கவனம் இப்போது அவன் பக்கம் சென்றது.
ஷிவா - என்ன டா அமைதியா இருக்க? கார் சாவி எடுக்கலையா? மாடில இருக்கா? நான் கூட வர்றேன் வா என்று அவன் கையை பிடித்து இழுக்க
சாவி எடுத்து ஷிவா கையில் வைத்தான். ஷிவா கேள்வியாக பார்க்க
யுவன் - இந்தா சாவி. நீங்க கிளம்புங்க நான் வரல.
இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகி விட்டனர். அபி கடுப்பாகி விட்டான்.
அபிஷேக் - என்ன டா சொல்ற? வராம இங்க என்ன செய்ய போற? ஏன் டா லூசு மாதிரி பேசுற
யுவன் - அந்த மிருகத்தை அப்படியே விட்டுடு போனா அடுத்து வர்றவங்களுக்கு ஆபத்து அதான் அதை அழிக்க ஏதாச்சும் வழி இருக்கானு பார்க்க போறேன்.
நவ்யா - நம்ம இருக்குற நிலமையில தப்பிக்கிறது தான் சரி. பிளீஸ் சொல்றத கேளு. வா போயிடலாம். பிளீஸ் என அழ ஆரம்பித்துவிட்டாள்.
ஷிவா - நவ்யா சரியா தான் சொல்றான் அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும். யார்ரா இருந்தாலும் இந்த நிலைமையில இப்படி தான் செய்வாங்க. நம்ம தப்பிச்சு போறது தான் இப்போ முக்கியம் வா டா. பிளீஸ்
தீப்தி - உனக்கு என்ன டா ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற. பயம் காட்டாத டா. வா போயிடலாம்.
யுவன் - நான் உங்களை யாரையும் இருக்க சொல்லல. நான் இருக்கேன்னு தான் சொன்னேன். இதை இப்படியே விட்டுட்டு போக எனக்கு மனசே இல்ல டா. இங்க வந்து அடுத்து யாருக்கும் உயிர் பலி ஆகிடுச்சுனா… வேண்டாம் டா.. எனக்கு என்னமோ அந்த கண்ணாடி பெட்டியை திரும்ப மூடிட்டா அது திரும்ப அடைபட்டுடும்னு தோணுது. நான் அதை பாத்துக்கிறேன். நீங்க எல்லாரும் கிளம்புங்க.
இவனை லூசா என்பது போல் பார்த்தனர். இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களை பற்றி சிந்திப்பவர்களை இந்த உலகம் லூசு என்று பெயர் கட்டும் போல்.
தீப்தி - டேய் யுவன். அந்த கண்ணாடி பெட்டி மாடியில இருக்கு டா. திரும்ப அங்க போக போறியா? என்றாள் அதிர்ச்சியாக.
நவ்யா நிலமை இன்னும் மோசமாக இருந்தது. நேற்று தான் காதலை சொன்னான். அவனோடு வாழ இன்னும் கனவு கோட்டை கூட கட்டவில்லை அதற்குள் மற்றவர்களுக்காக உயிரை பணயம் வைக்க போகிறேன் என்று சொல்கிறான் என்று கவலையாக இருந்தது.
இவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக அவனிடம் பேசினார்கள். கெஞ்சி, கொஞ்சி, அழுது, கோபப்பட்டு, அடித்து, மிரட்டி எல்லாம் செய்து பார்த்தனர். ஆனால் யுவன் அசையவே இல்லை. அதற்குள் மதியம் நேரம் நெருங்கி விட்டது.
ரங்கன் கொடுத்த உணவை சாப்பிட்டு இருந்தனர். மாடியில் சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. மாடியில் பார்க்கும் போது இருட்டில் இரத்த சிவப்பான கண்கள் தெரிந்தது. அதனை பார்க்கும் போது யாருக்கும் இந்த வீட்டில் இருக்க மனம் இல்லை.
அபி - நானும் யுவன் கூட இருக்க போறேன். என்னால தான பிரச்சனை ஆரம்பிச்சது. நானும் வரல என்றான் உறுதியாக.
யுவன் அபியை கிளம்ப சொல்லி எவ்வளவோ சொல்ல அவனும் கேட்கவில்லை. ஒரு முடிவாக ஷிவா, நவ்யா, தீப்தி காரில் வெயிட் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. யுவன், அபி வந்ததும் அவர்களை கூட்டி செல்வதாக பேசி வைத்தனர்.
சாவி வாங்கிக்கொண்டு ஷிவா, தீப்தி, நவ்யா காரில் ஏறி பத்திரமாக அமர்ந்துகொண்டனர். அந்நேரம் யுவன், அபி மாடிக்கு படி ஏறினர்.
இப்போது அவர்களுக்கு சத்தம் நான்காவது அறையில் தான் கேட்டது. மூன்றாவது மாடியில்(பியானோ அறை) அந்த அறிய பொருட்கள் இருக்கும் அறைக்கு சென்று… கண்ணாடி பெட்டி எடுப்பது என்று பிளான் செய்தனர்.
அதன் படி மெதுவாக நடந்தனர். ஒரு சிறு ஒலி கூட எழுப்ப கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். கையில் பெரிய மரக்கட்டை இருந்தது. இன்னொரு கையில் டார்ச் லைட் வைத்து இருந்தனர். மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு ஒரு ஒரு அடியை வைத்தனர்.
அந்த அறை திறந்து தான் இருந்தது. டும் இருட்டு. ஒரு பொட்டு வெளிச்சம் இல்லை. வலது பக்க வரிசையில் தான் அந்த பெட்டி இருப்பதாக கீழே இருக்கும் போது அபி யுவனின் சொல்லி இருந்தான். மாடியில் பொருட்கள் உருளும் சத்தம் கேட்டது. எனவே தைரியமாக உள்ளே சென்றனர். டார்ச் லைட் வெளிச்சத்தில் சரியான இடம் வந்து சேர்ந்தனர்.
அந்த அறையில் பெரிய மணிக்கூண்டு ஓரமாக இருந்தது. அதன் மேல் ஏதோ படுத்து இருக்கிறது போல நமக்கு தெரிகிறதே! என்னவா இருக்கும். கொஞ்சம் ஜூம் செய்து பார்த்தால் ஏதோ கருப்பாக தெரிந்தது. பழைய பொருட்கள் மேல் போட்டு இருக்கும் துணி போல் அல்லவா இருக்கிறது. இன்னும் ஜூம் வைத்து பார்த்த போது தான் அந்த கருப்பு துணி அசைவது போல் தெரிகிறது. அந்த இருட்டில் இருந்து இரண்டு சிவப்பு நிறம் கொண்ட கண்களை. அப்போது மாடியில் இருப்பது???
இதனை அறியாத யுவன், அபி அந்த கண்ணாடி பெட்டியை எடுக்கும் போது பின்னால் ஒரு உறுமல் சத்தம். அது யாரு என்று கிரக்கிக அவர்களுக்கு நேரம் அவகாசம் தேவை இல்லயே. இருவருக்கும் உடம் முழுக்க குப் என்று வேர்த்தது. தொண்டைக்குழி ஏற இறங்க மெதுவாக பின்னாடி திரும்பி பார்த்தனர்.
அவர்கள் உயரத்துக்கு பாதிக்கு மேல் இருந்தது அந்த நாய். கூர்மையான பற்கள் வாய்க்கு வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. கண்களில் அப்படி ஒரு வெறி. அது சரியாக வாசலில் நின்று இருக்க நன்றாக உள்ளே மாடிக்கொண்டனர்.
யுவன் அந்த கண்ணாடி பெட்டி எடுக்க மெதுவாக கையை நீட்ட “ உர்ர்ர் “ என்று ஒரு அடி முன்னால் வந்தது. அபி கேட்கவே வேண்டாம் கால்கள் நடுங்க அந்த நாயின் முன்பு நின்று கொண்டு இருந்தான்.
(அந்த அறையில் முதலில் நுழைந்தது யுவன். எனவே பின்னாடி இருந்து பார்க்கும் போது அபி முன்னிலையில் இருந்தான். அந்த நாய் கதவில் அருகே வந்த போது முதலில் நின்று இருந்தது அபி)
அது ஒரு ஒரு அடியாக முன்னாடி வர இவர்கள் பின்னாடி நடந்தனர். அவர்களை கடிக்கலாம் என்று வாயை திறந்து பாயும் முன் பின்னாடி இருந்து தீப்பந்தம் வைத்து ஒரு அடி அந்த நாய்க்கு விழுந்தது. தீப்பந்தம் நாயின் உடலில் பட்டதும் அது வலியில் கத்தியது. அதன் சத்தம் அந்த அறையில் உள்ள பொருட்களையே அதிற வைத்தது. ஒரு நிமிடம் அதன் கவனம் பின் பக்கம் செல்ல… யாரு என்று பார்த்தால் நவ்யா நின்று இருந்தாள்.
அது அவள் மேல் பாயப்பார்க்க மீண்டும் அதன் முன்னாடி தீப்பந்தத்தை வைத்து ஒரு அடி. யுவன் அந்த நேரத்தை பயன் படுத்தி அந்த கண்ணாடி பெட்டியை எடுத்துவிட்டான். அதனை பூட்டலம் என்று பார்த்தால் அதன் கைப்பிடி இறுக்கமாக இருந்தது.
ஒரு பக்கம் நவ்யாவும் மறுபக்கம் அபி என்று அதனை சமாளித்து கொண்டு இருந்தனர். அது அறையில் உள்ளே அபியை அதிகமாக தாக்க ஆரம்பித்தது. எனவே இடப்பக்கம் வழியாக நகர ஆரம்பித்து விட்டனர். கதவுக்கு அருகில் நவ்யா இருக்க அவள் பக்கம் யுவன் முதலில் வந்து விட்டான். பின்னாடி அபி ஓடி வர அந்த மிருகம் அபியை துறத்த… தப்பித்து வெளியே வர பார்க்கையில் அவன் முதுகில் மூன்று நகங்கள் கொண்டு பரண்டி விட்டது.
சதையை கிழித்துக்கொண்டு நகம் உள்ளே இறங்கியது. அந்நேரம் நவ்யா கையில் உள்ள தீப்பந்தம் வைத்து அதன் கண்ணில் நன்றாக சொருக… அது அசந்த நேரம் அந்த அறையின் கதவை மூடி விட்டனர்.
சூரியன் மறைய தொடங்கி விட்டது. இனிமேல் வரும் நேரம் அந்த மிருகம் பலமாக இருக்கும் எனவே அந்த பியானோ அறையில் வைத்தே அந்த கண்ணாடி பெட்டியை மூட முயற்சி செய்தனர்.
அந்த நாய்.. கதவை போட்டு உலுக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக கதவு முறிவது தெரிந்தது. கதவு உடைந்து கொண்டிருக்க, யுவன் மற்றும் நவ்யா பதட்டத்தில் இருந்தனர். அபி காயமடைந்து இருந்ததால், நவயை அவனை ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டு, யுவனுடன் சேர்ந்து கண்ணாடி பெட்டியை மூட முயற்சி செய்தாள்.
அதன் கை பிடி திருகுவது போல் இருக்க… முன்புக்கு இப்போது கொஞ்சம் தள்ள முடிந்தது. மிருகம் கதவை பாதி நொறுக்கி விட்டது.
யுவன் - நவ்யா, இங்க இருந்து போ. பிளீஸ் நான் பாத்துக்கிறேன். அது எப்போனாலும் வெளிய வரும்.
நவ்யா - யுவா நான் உன் கூட தான் இருப்பேன். நான் என்ன சும்மா உள்ள லவ் பண்றேன்னு சொன்னேன்னு நினைச்சியா. சாகுற வரைக்கும் உன் கூடத்தான்.
அவள் இவ்வளவு தூரம் தன் மேல் காதல் வைப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இவள் காதலில் வாழ்ந்து பார்க்க ஆசை வந்தது. காதலனுக்காக சாவின் விளிம்பில் வரை வந்துவிட்டாள். இவளுடன் இருக்கும் வாழ்க்கை கண்டிப்பாக சொர்க்கமாகத்தான் இருக்கும் அல்லவா?! எனவே இருவரும் சேர்ந்து அந்த கைப்பிடி கொண்டு அந்த கண்ணாடி பெட்டி கதவை மூட…. அந்த மிருகம் நாலுகால் பாய்ச்சலில் இவர்கள் மேல் பாயவும் சரியாக இருந்தது.
யுவன் நவ்யாவை அணைத்துக்கொள்ள… இவர்கள் மேல் பாய வந்த மிருகம் மாயமாக மறைந்து காற்றோடு காற்றாக போனது. நவ்யா யுவனை அணைத்துக்கொண்டு சிரிப்பின் ஊடே அழுதாள். அவர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நண்பன் செய்த தவறை சரி செய்வதே நட்பின் வேலை. அதை இவர்கள் செய்தனர்.
பின் இருவரும் அபி பக்கம் சென்று அவனை கைத்தாங்கலாக நிற்க வைத்தனர். அபிக்கு நினைவு இருந்தது, முதுகில் நன்றாக காயம் பட்டு இருந்தது.
அபி - ஷ்ஷ்ஷ்.. ஆ ஆ ஆ வலிக்குது டா என்றான் வேதனையான குரலில்.
யுவன் - ஒன்னும் இல்ல டா. இப்போவே ஹாஸ்பிட்டல் போகலாம். சீக்கிரம் போயிடலாம். நவ்யா அபியை ஒரு கை பிடி என்றவன் வேகமாக சென்று அந்த அறிய வகை பொருட்கள் அறையின் கதவுக்கு இருக்கும் ஸ்கிரீன் திரும்ப போட்டு விட்டு பியானோ, இன்னும் சில கனமான பொருட்களை நகர்த்தி முன்னே வைத்தான். அவனால் முடிந்த அளவு தடுப்பு வைத்தான்.
மூவருக்கும் காயம் ஏற்ப்பட்டது. இதில் அபிக்கு தான் அந்த மிருகத்தால் ஏற்பட்ட காயம் பெரிது.
அபி, நவ்யா நடக்க ஆரம்பித்துவிட்டனர். நான்காவது மாடியும் மீண்டும் ஏதோ உருளும் சத்தம் கேட்ட… மிரண்டு விட்டனர்.