ரூபினியை சும்மா விட்டால் அவர்கள் என்ன நண்பர்கள், அதற்கான சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். சாரா அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாள். தொடர்ந்து ஆதியும் அர்ஜுனும் சாராவிடம் பேசி அவள் பாதுகாப்பை உறுதி செய்துக்கொண்டே இருந்தனர். அவர்களின் நட்பு பழைய படி திரும்பியது. ஆதி இரண்டு நாள் முன்பு தான் யூகே சென்றான். இந்த முறை அர்ஜூனே சாராவை அழைத்துக்கொண்டு வந்தான் ஆதியை வழியனுப்ப.
கோவில் மீட்டமைப்பு துரிதமாக நடந்துக்கொண்டிருக்கிறது. கோவிலின் அமைப்பை மாற்றி அமைக்காமல், இதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே போல் கொண்டுவர பல முயற்சி எடுத்தனர். அதில் ஒன்று தான் கைதேர்ந்த சிற்பக்கலை நிபுணர்களை கண்டுபிடித்தது. அவர்களிடம் கேட்ட போது, நவீன தொழில் நுட்பம் வந்த பின் அதற்கே அவர்களும் மாறிவிட்டதாக சொல்ல, அர்ஜுன் அவனின் எண்ணத்தை அவர்களிடம் சொல்லி பாரம்பரிய முறையை கையாள ஒத்துக்கொண்டனர்.
சைட் விசிட் செல்ல அன்று அர்ஜுன் சாராவையும் அழைத்துக்கொண்டு சென்றான். எல்லோரும் வேலையை மும்முரமாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.
கோவில் பழைய காலத்து முறை படியே மாற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. சிற்பங்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல் காட்சியளித்தது. சந்தோசமாக அதனை பார்த்துக்கொண்டிருந்தாள் சாரா. கூடவே அர்ஜுனும் நடந்துக்கொண்டிருக்கும் வேலையை விளக்கிக்கொண்டிருக்க ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அர்ஜுன் டீமில் இருக்கும் பெண் ஆஷா என்கிற மாடர்ன் பெண் அர்ஜுனிடம் வந்தாள். அர்ஜுனும் சாராவிடம்
"ஒரு நிமிஷம் இரு சாரா, நான் பேசிட்டு வர்றேன்" என சொல்லிவிட்டு ஆஷா அருகில் சென்று பேச தொண்டங்கிவிட்டான். அந்த பெண் என்ன சொன்னாளோ அதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொல்லும் அர்ஜுனை பார்க்க கோவமாக வந்தது சாராவுக்கு.
ஆஷாவின் ஆசை பார்வை சாராவின் பார்வையில் இருந்து தப்பவில்லை. இத்தனை வருடமாக ஆதி மற்றும் அர்ஜுன் வாழ்வில் எந்த பெண் இருந்தாலும் கண்டுக்காமல் இருக்கும் சாரா முதல் முறை ஆஷாவை பார்த்து பொறாமை பட்டாள். ஆதியுடன் மாயை உறவில் இருக்கும் போதும் கூட ஏஞ்சலாவை கண்டு பொறாமைகொள்ளவில்லை, என்றும் இல்லாமல் சிரித்து பேசும் அர்ஜுன் மேல் கோவமாக வந்தது.
ஆஷாவிடம் பேசிவிட்டு திரும்ப வந்த அர்ஜுனை தீ பார்வை பார்க்க, அதில் குழம்பிய அர்ஜுன்
"என்ன டி ஆச்சு நல்லா தான இருந்த?"
"சிரிச்சி சிரிச்சு பேசி முடிச்சாச்சா? வேணும்னா இன்னும் கொஞ்சம் நேரம் பேசிட்டுவாயேன்" என கட்டமாக சொன்னாள்.
முகத்தில் அப்பட்டமான பொறாமை தெரிய, அர்ஜுன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். வேணும் என்றே சீண்டிப்பார்க்க எண்ணி
"இதுல என்ன டி இருக்கு, அழகான பொண்ணு வந்து பேசுது வேண்டாம்னா சொல்ல முடியும்" என அவளிடமே திருப்பி கேட்க
கோவமாக பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர, அவளை சமாதானம் செய்த படியே பின்னாடி ஓடினான்.
"ஏய் சாரா சும்மா சொன்னேன் டி, இங்க என்னை பாரு, ஆஷா என்கிட்ட வேலை பாக்குற பொண்ணு அவ்வளவு தான். வேற ஒன்னும் இல்லை" என இன்னும் சில வார்த்தை சொன்ன பிறகே அவனை பார்த்தாள். அப்போதும் தான் கொஞ்சம் சமாதானம் ஆனாள். ஏன் ஆதியிடம் வராத பொறாமை, உரிமை கோவம் அர்ஜுனிடம் வருகிறது என சிந்திக்க தவறினாள்.
அர்ஜுனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது. ரூபினி அவனிடம் பேசும்போது வராத கோவம் ஆஷாவிடம் வர, சாரா அவனிடம் முழுமையாக வர இன்னும் கொஞ்சம் நாளே மீதம் இருப்பது தெரிந்து சந்தோசம் கொண்டான்.
***
யூகே சென்ற ஆதி இரண்டு நாளாக ஏஞ்சலாவை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான். அவளோ அவன் இத்தனை நாள் பேசாமல் விட்டதுக்கு இந்த வாய்ப்பை பயன் படுத்தி பலி வாங்கிக்கொண்டிருந்தாள். குளிருக்கு இதமாக மூன்றடுக்கு உடை அணிந்துக்கொண்டு கையை பாக்கெட்டில் விட்ட படி அருகில் இருக்கும் ரெஸ்டோபார்(Restobar) நோக்கி ஏஞ்சலா செல்ல ஆதியும் பின்தொடர்ந்து சென்றான். ஏஞ்சலா மட்டுமே உள்ளே சென்று ஒருவர் அமரும் இருக்கை விடுத்து இரண்டு பேர் உட்காரும் டேபிளில் சென்று அமர்ந்தாள். இதனை வெளியில் இருந்து கண்ணாடி தடுப்பு வழியே பார்த்த ஆதி, சிரித்துக்கொண்டு, இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசி சூடு பரப்பி கன்னங்களில் ஒற்றி பின் உள்ளே சென்று ஏஞ்சலா எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் செய்துவிட்டு என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்க, முதலில் பேச்சை ஆரம்பித்தது ஏஞ்சலா தான்
"சாரா எப்படி இருக்கா?" இந்த கேள்வியை சத்தியமாக ஆதி எதிர்பார்க்கவில்லை.
"ஹ்ம்ம், பழையபடி சந்தோசமா இருக்கா" என்றான் தலையை குனிந்துக்கொண்டு, அப்போது தான் நிம்மதியாக இருந்தது, அந்த பெண்ணின் வாழ்க்கையில் தன்னால் எந்த ஒரு பிரச்சனையும் உருவாகவில்லை என்பது தெரிந்த பின். மேலும் ஆதி மேல் இருந்த காதல் அப்படியே தான் இருக்கிறது. சாரா நன்றாக இருக்கிறாள் என தெரிந்த பின் இவர்கள் காதலை பற்றி பேச தொடங்கினாள்
"ஓகே, வேற எதுவும் என்கிட்ட சொல்லனுமா?"
டேபிள் மேல் இருந்த ஏஞ்சலாவின் கையை பிடித்துக்கொண்டவன் "ஆமா சொல்லணும், சாரி. இத்தனை மாசம் பேசாம இருந்ததுக்கு சாரி. எனக்கு நான் பண்ண தப்ப நானே மன்னிக்கிறதுக்கு எனக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்பட்டது. இப்போ தான் என்னோட மனசு நிம்மதியா இருக்கு, அதான் என்னோட ஏஞ்சலை பார்க்க பறந்து வந்துட்டேன். இனிமேல் இந்த கையை விடுறதா இல்லை" என அவள் கைகளை இறுக்கமாக பற்றியவன் பாக்கெட்டில் இருந்து மோதிரம் பெட்டியை எடுத்து அவள் முன் வைத்தான்.
ஏஞ்சலாவின் முகம் சந்தோசத்தில் மிளிர்ந்தது. இதனை எதிர்பார்க்கவில்லை, இன்பஅதிர்ச்சி என்பதை சந்தோசத்தில் கலங்கும் கண்ணீர் சொன்னது. பெட்டியை திறந்து அதில் இருந்து அழகான பிங்க் டைமண்ட் எடுத்து, அவள் கையை பிடித்தவன்
"மே ஐ? (May I?)" என வினாவ
கண்ணீரை துடைத்தவள் 'ஆமா' என்று தலையை அசைக்க
"இ லவ் யு டூ தி மூன் அண்ட் பாக் (I love you to the moon and back)" என்றான் காதலாக. மோதிரம் போட்டு முடித்த பின் அதன் மேலே முத்தமிட, ஏஞ்சலா முகம் வெட்கத்தில் சிவந்தது.
பின் ஏஞ்சலாவின் பெற்றோர்களை சந்தித்து இருவரின் முடிவை பற்றி சொல்ல அவர்களும் சந்தோசமாக அதனை ஏற்றும்கொண்டனர். மேலும் அவனை வெளியில் தங்க விடாமல் அவர்கள் வீட்லே தங்க சொல்ல அவர்களின் குடும்பத்தில் ஒன்றானான் ஆதி. இந்த மாதிரி கலாச்சாரம் அங்கு சகஜம் என்பதால் மட்டுமே அவ்வாறு செய்தனர்.
அதுமட்டுமில்லாது வந்த நாட்களில் ஆதி அவனின் பெற்றோர்களை ஏஞ்சலாவின் பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் பேச வைத்தான். ஆதியின் அம்மா சும்மாவே ஸ்டேட்டஸ் பார்க்கும் ஆள் என்பதால் வெளிநாட்டு பெண் என தெரிந்த உடனே சம்மதம் சொல்லிவிட்டார். ஆதியும், ஏஞ்சலாவும் அங்கு சுற்றாத இடம் இல்லை. வசந்தகாலமாய் நகர்ந்தது அவர்களின் நாட்கள். ஏஞ்சலா வீட்டில் இருந்து சில பல தூரம் இருக்கும் சுற்றுலா தளத்துக்கு ஒரு வாரம் ட்ரிப் எல்லாம் சென்று வந்தனர், தனிமையும், குளிரும் அடுத்த கட்டத்துக்கு அவர்கள் உறவு செல்ல வழிவகுத்தது.
ஏஞ்சலாவின் பெற்றோர்கள் கல்யாணத்துக்கு வலியுறுத்த ஆதியின் பக்கம் இருந்து பச்சை கோடி காட்டப்பட்டது. எனவே யூகேவிலே கல்யாணம் பேசி முடிவு செய்தனர். இதே செய்தி அர்ஜூனுக்கும், சாராவுக்கு ஆதி மற்றும் ஏஞ்சலா வீடியோ கால் மூலம் சொல்ல அவர்களுக்கும் மகிழ்ச்சியே.
***
அர்ஜுன் அவன் சொன்னது போலவே அவனாக சென்று காதலை சொல்ல முயற்சிக்கவில்லை, எங்கே தன்னையும் ஆதியும் காதல் போல் நினைக்க கூடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்தது. எனவே, காதலை உணர்த்தும் முயற்சியில் இருந்தான். சாராவே அவன் காதலை புரிந்துக்கொண்டு அவளாக அவனிடம் வர காத்துக்கொண்டிருக்கிறான்.
இந்த சில வாரங்களின் அர்ஜுனின் மாற்றம் சாரா நன்றாக உணர்ந்தாள். அவளுக்கு தெரியாமல் அவளை பார்ப்பது, இவள் உடனே திரும்பினாள் அதே காதல் பார்வையை மாற்றாது அவள் கண்களோடு கண்கள் கலக்க விட்டு அவளை திணற வைப்பது என சேட்டை செய்துக்கொண்டிருந்தான். அது அவளுக்கு பிடித்து இருந்தது தான் ஆச்சரியமே.
அன்று வார இறுதி நாள் என்பதால் சாரா அவள் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருக்க, அதில் ரொமான்டிக் பாடல் ஒன்று வந்தது. பொதுவாக யாரும் அருகில் இருந்தால் இது மாதிரி காட்சிகள் வரும் போது அவர்களுடன் பார்க்க நேரிட்டால் சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க வேறு சேனல் மாற்றுவது உண்டு. சாராவும் அதே போல் செய்த நாட்களும் உண்டு, ஆனால் இன்று அவள் மட்டுமே இருக்க தைரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அதிக படியான காட்சிகள் வரும் போது எல்லாம் வெட்கம் கொண்டு இருகைகளையும் கொண்டு முகத்தை மூடினாலும் , இருவிரலில் நடுவில் ஓட்டை கண் விட்டு பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவளின் கெட்ட நேரமோ அர்ஜுன் வண்டி சத்தம் பாவம் கவனிக்கவில்லை.
அர்ஜுன் எப்போதும் போல் வீட்டுக்குள் வர, அவன் பார்த்தது முகத்தை மறைத்தும் மறைக்காமலும் டிவி பார்த்துக்கொண்டிருந்த சாரா தான். ஓடியே பாட்டை வைத்தே விஷயத்தை கண்டுபிடித்த அர்ஜுன் 'மாட்டுன டி' என மனதில் சிரித்துக்கொண்டு, பூனை போல் வீட்டுக்குள் வந்தான். அதையும் கவனிக்காமல் பாட்டில் வரும் காட்சிகளில் லயித்திருந்தாள்.
வீட்டில் ஒரு இடத்தி இருந்து பார்த்தால், டிவியில் ஓடும் காட்சியும், திருட்டு சாராவும் நன்றாக தெரிய அதனை புகைப்படமாக எடுத்தான். அங்கே அமர்ந்து அவள் வேறு என்ன செய்கிறாள் என பார்கலானான். மேலும் அவள் மாற்றம் நினைத்தது சந்தோசமாகவும் இருந்தது. இந்த காலத்துக்கு தகுந்த பெண்களின் எந்த குணமும் அவளிடம் இருக்காது, பெரியதாக எதற்கும் ஆசை படாமல் இருப்பாள். ‘இது’ மாதிரி விஷயம் விளையாட்டாக பேச பெண் தோழிகளும் இல்லை இப்போது அந்த கவலை நீங்கியது.
அவளுக்கு வயதுக்கு உரித்தான ஆசைகளும், உணர்வுகளும் இருக்கு என்பதில் நிம்மதியே. பாட்டு முடிந்ததும் முகத்தில் இருந்து கையை எடுத்த சாரா, விளம்பரம் போட்டதால் வேறு சேனல் வைக்க, அந்நேரம் அர்ஜுன் குரல்
"என்ன டி, அதுக்குள்ள பாட்டு முடிஞ்சு. ச்ச" என போலியாக வருத்தப்பட
தூக்கிவாரி போட படார் என்று எழுந்து நின்றாள். முகத்தில் சங்கடம், வெட்கம், சிரிப்பு என மாறி மாறி வர
"நீ...நீ எப்போ உள்ள வந்த" மனதிலோ 'ஐயோ பார்த்துட்டானா, மானமே போச்சு' என்றே தோன்றியது.
"இப்போ தான் வந்தேன்" என சொல்லி ஒரு நொடி சாரா மனம் நிம்மதியடைய, அதற்குள் "அப்படினு சொல்ல எனக்கும் ஆசை தான், ஆனா நான் அப்போவே வந்துட்டேன்" என்றான் சிரிப்பை உள்ளடக்கிய படி.
சாராவோ எங்கோ பார்த்து அவனிடம் இருந்து பார்வையை மாற்ற முயற்சிக்க
"எப்படி எப்படி முகத்தை மறைச்சாலும், இப்படி ரெண்டு விரலுக்கு இடையில உள்ள கேப்புல பாக்குறது" என அவள் கையை வைத்தது போலவே செய்து வேறு காட்ட
"அர்ஜுன்" என்றாள் சிணுங்களாக
அர்ஜுன் சும்மா இருக்காமல் அந்த பாட்டை சத்தமாக பாட, சாரா காலை தரையில் உதைத்துவிட்டு கிட்சன் உள்ளே சென்றுவிட்டாள். அர்ஜுனின் சிரிப்பு சத்தம் அவளை தொடர்ந்தது.
சில நிமிடம் கழித்து கையில் பாத்திரத்துடன் வந்தவள்
"வந்து உட்காரு டா, சாப்பிடலாம்" என்றாள் எதுவும் நடக்காது போல். அவளுக்கு தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்துவிட
"இல்ல டி, நான் ஏற்கெனவே கில்மா பிரியாணி சாப்பிட்டேன்" என சொன்னதும் தான், அவளுக்கு புரை ஏறிவிட்டது.
தண்ணீர் கொடுத்து தலையை தட்டிவிட வர, டேபிள் மேல் இருந்த கரண்டியை எடுத்து அடிக்க துரத்தினாள். சிரிப்புடன் அடியையும் வாங்கிக்கொண்டான். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன், ஆதியின் கல்யாண பேச்சை எடுக்க
"ஏஞ்சலா ரொம்ப ஸ்வீட்டா பேசுறா, யூகே ல வெச்சு தான கல்யாணம் சோ எனக்கான டிரஸ் நான் வேண்டாம்னு சொல்லியும் அவளே டிசைன் பண்ணி தர்றேன்னு சொல்லிருக்கா. அதுவும் இல்லாம டிக்கெட்ஸ் கூட போடுறேன்னு சொன்ன, நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்"
"எனக்கு சொல்லிருக்கா டி, அப்புறம்..டிக்கெட்ஸ் பத்தி நீ எதுவும் யோசிக்காத எல்லாமே நானே புக் பண்ணிட்டேன். நீ என்னோட வந்தா மட்டும் போதும்"
பயந்துக்கொண்டே தான் இருந்தாள், டிக்கெட் எப்படி புக் செய்வது, யாருடன் செல்வது, தனியாக போக முடியுமா? என்ற உள்ளுக்குள்ள மருகிக்கொண்டே நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தாள். அர்ஜுன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவன் குடும்பத்தினர் அதற்கு விட மாட்டார்களோ என கவலை இருக்கத்தான் செய்தது. இப்போது அவன் சொன்ன வார்த்தை தண்ணீர் விட்டால் நெருப்பு அணைவது போல் மாயமாக மறைந்தது.
"ஆனா உன்னோட அப்பா, தங்கச்சி எல்லாரும் வருவார்களே? அவங்களுக்கு ஓகே வா?"
"அவங்களுக்கு ஓகே இல்லனாலும் அது எனக்கு பிரச்சனை இல்லை. நான் உன்கூடவே தான் இருப்பேன். புரியுதா?" என கேட்க, அவன் தோளில் சாய்த்துக்கொண்டு சரி என்று தலையை அசைத்தாள்.
எந்த இடத்திலும், யாருக்காகவும் அவளை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
****
ரூபினியை இந்த சில நாட்களாக கண்காணிப்பில் தான் வைத்துக்கொண்டிருந்தான் அர்ஜுன். அவனுக்கு திவாஹர் தொழில் நஷ்டம் ஏற்படுத்த ரொம்ப நாள் ஆகாது, ஆனால் ரூபினி செய்த செயலுக்கு மற்றவர்கள் தண்டிக்க படுவது சரியாக படவில்லை எனவே நன்றாக யோசித்து அவனின் பிளானை செயல் படுத்திக்கொண்டிருந்தான், அதனை ரூபினியே அறியாமல்.
அர்ஜுன் செட் செய்த ஆள் தான் நிதின், அவனை ரூபினியுடன் பணக்காரன் என்ற பெயரோடு பழகவிட, அவளும் அந்த வலையில் வந்து சிக்கினாள், அவன் பணக்காரன் என்ற ஒரே காரணத்துக்காக. ஆனால் அவனோ மாத சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒருவன். இது அர்ஜுனின் பிளான் தான் என்றாலும், நிதின் அவளை ஒருகட்டத்துக்கு மேல் உண்மையாக விரும்ப, இது கல்யாணம் வரை சென்றது. ரூபினியும் அதிகம் பணம் இருக்கும் ஒருவனை திருமணம் செய்ய போகிறோம் என்ற கனவில் மிதக்க, நாடகமாடி ரூபினியை திருமணமும் செய்துக்கொண்டான்.
அவன் சொன்னது பொய்யாக இருக்காமல் ஆனால் விரும்பியது உண்மையே. திவாஹர் பல முறை ரூபினியுடம் நிதினை திருமணம் செய்ய சம்மதமா என கேட்ட பிறகே கல்யாணம் செய்து வைத்தார். ரூபினியோ ஆதி மற்றும் அர்ஜுன் விட அதிகம் பணம் உள்ளவனை கல்யாணம் செய்து விட்டோம் என மிதப்பில் இருக்க, இடியென விழுந்தது முதல் இரவின் நிதின் சொன்ன உண்மை. இப்போது தான் தந்தையிடம் அவனை பிடிக்கவில்லை, விவாகரத்து வேண்டும் என்று சொன்னாள் யோசிக்காமல் தன்னை அவர் மகள் இல்லை என்றே ஊருக்கு அறிவித்துவிடுறார் என்று நன்றாக தெரியும். எனவே அவனையே முறைத்த வாறு இருந்தாள்.
மேலும் இதற்கு எல்லாம் பின் அர்ஜுன் தான் இருக்கிறான் என தெரிந்த பின் இன்னும் கொதி நிலைக்கே சென்றுவிட்டாள். ஆனால் அவள் செய்த செயலுக்கு எதிர்வினையாக அர்ஜுன் அவளுக்கு நிதினை அறிமுக படுத்தி நல்லது தான் செய்துள்ளான் என என்று அறியப்போறாளோ?
அர்ஜுனின் எண்ணம் எல்லாம் அவள் எதற்கு ஆசைப்பட்டாளோ அது கிடைக்கவே கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். அவளோ காதலுக்கு ஆசை படாமல் அளவில்லா பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க, அதற்கு வழி இல்லாமல் செய்துவிட்டான். அவனுக்கு அவளை வாழ்க்கை முழுக்க பலி வாங்க வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை. அவனின் மனதில் எல்லாம் அவனின் சாராவும், அவன் முடிக்கவிருக்கும் ப்ராஜெக்ட் மட்டுமே இருக்கிறது. இதில் ரூபினி என்ற ஒருத்திக்கு அவன் நினைவிலும் கூட இடம் இல்லை என்பதே உண்மை.
நிதினுக்கு அவளை எப்படி என்றாலும் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம் அவனின் உண்மையாக காதல் அந்த வில்லியை மாற்றுமா என்று!
கோவில் மீட்டமைப்பு துரிதமாக நடந்துக்கொண்டிருக்கிறது. கோவிலின் அமைப்பை மாற்றி அமைக்காமல், இதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே போல் கொண்டுவர பல முயற்சி எடுத்தனர். அதில் ஒன்று தான் கைதேர்ந்த சிற்பக்கலை நிபுணர்களை கண்டுபிடித்தது. அவர்களிடம் கேட்ட போது, நவீன தொழில் நுட்பம் வந்த பின் அதற்கே அவர்களும் மாறிவிட்டதாக சொல்ல, அர்ஜுன் அவனின் எண்ணத்தை அவர்களிடம் சொல்லி பாரம்பரிய முறையை கையாள ஒத்துக்கொண்டனர்.
சைட் விசிட் செல்ல அன்று அர்ஜுன் சாராவையும் அழைத்துக்கொண்டு சென்றான். எல்லோரும் வேலையை மும்முரமாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.
கோவில் பழைய காலத்து முறை படியே மாற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. சிற்பங்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல் காட்சியளித்தது. சந்தோசமாக அதனை பார்த்துக்கொண்டிருந்தாள் சாரா. கூடவே அர்ஜுனும் நடந்துக்கொண்டிருக்கும் வேலையை விளக்கிக்கொண்டிருக்க ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அர்ஜுன் டீமில் இருக்கும் பெண் ஆஷா என்கிற மாடர்ன் பெண் அர்ஜுனிடம் வந்தாள். அர்ஜுனும் சாராவிடம்
"ஒரு நிமிஷம் இரு சாரா, நான் பேசிட்டு வர்றேன்" என சொல்லிவிட்டு ஆஷா அருகில் சென்று பேச தொண்டங்கிவிட்டான். அந்த பெண் என்ன சொன்னாளோ அதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொல்லும் அர்ஜுனை பார்க்க கோவமாக வந்தது சாராவுக்கு.
ஆஷாவின் ஆசை பார்வை சாராவின் பார்வையில் இருந்து தப்பவில்லை. இத்தனை வருடமாக ஆதி மற்றும் அர்ஜுன் வாழ்வில் எந்த பெண் இருந்தாலும் கண்டுக்காமல் இருக்கும் சாரா முதல் முறை ஆஷாவை பார்த்து பொறாமை பட்டாள். ஆதியுடன் மாயை உறவில் இருக்கும் போதும் கூட ஏஞ்சலாவை கண்டு பொறாமைகொள்ளவில்லை, என்றும் இல்லாமல் சிரித்து பேசும் அர்ஜுன் மேல் கோவமாக வந்தது.
ஆஷாவிடம் பேசிவிட்டு திரும்ப வந்த அர்ஜுனை தீ பார்வை பார்க்க, அதில் குழம்பிய அர்ஜுன்
"என்ன டி ஆச்சு நல்லா தான இருந்த?"
"சிரிச்சி சிரிச்சு பேசி முடிச்சாச்சா? வேணும்னா இன்னும் கொஞ்சம் நேரம் பேசிட்டுவாயேன்" என கட்டமாக சொன்னாள்.
முகத்தில் அப்பட்டமான பொறாமை தெரிய, அர்ஜுன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். வேணும் என்றே சீண்டிப்பார்க்க எண்ணி
"இதுல என்ன டி இருக்கு, அழகான பொண்ணு வந்து பேசுது வேண்டாம்னா சொல்ல முடியும்" என அவளிடமே திருப்பி கேட்க
கோவமாக பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர, அவளை சமாதானம் செய்த படியே பின்னாடி ஓடினான்.
"ஏய் சாரா சும்மா சொன்னேன் டி, இங்க என்னை பாரு, ஆஷா என்கிட்ட வேலை பாக்குற பொண்ணு அவ்வளவு தான். வேற ஒன்னும் இல்லை" என இன்னும் சில வார்த்தை சொன்ன பிறகே அவனை பார்த்தாள். அப்போதும் தான் கொஞ்சம் சமாதானம் ஆனாள். ஏன் ஆதியிடம் வராத பொறாமை, உரிமை கோவம் அர்ஜுனிடம் வருகிறது என சிந்திக்க தவறினாள்.
அர்ஜுனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது. ரூபினி அவனிடம் பேசும்போது வராத கோவம் ஆஷாவிடம் வர, சாரா அவனிடம் முழுமையாக வர இன்னும் கொஞ்சம் நாளே மீதம் இருப்பது தெரிந்து சந்தோசம் கொண்டான்.
***
யூகே சென்ற ஆதி இரண்டு நாளாக ஏஞ்சலாவை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான். அவளோ அவன் இத்தனை நாள் பேசாமல் விட்டதுக்கு இந்த வாய்ப்பை பயன் படுத்தி பலி வாங்கிக்கொண்டிருந்தாள். குளிருக்கு இதமாக மூன்றடுக்கு உடை அணிந்துக்கொண்டு கையை பாக்கெட்டில் விட்ட படி அருகில் இருக்கும் ரெஸ்டோபார்(Restobar) நோக்கி ஏஞ்சலா செல்ல ஆதியும் பின்தொடர்ந்து சென்றான். ஏஞ்சலா மட்டுமே உள்ளே சென்று ஒருவர் அமரும் இருக்கை விடுத்து இரண்டு பேர் உட்காரும் டேபிளில் சென்று அமர்ந்தாள். இதனை வெளியில் இருந்து கண்ணாடி தடுப்பு வழியே பார்த்த ஆதி, சிரித்துக்கொண்டு, இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசி சூடு பரப்பி கன்னங்களில் ஒற்றி பின் உள்ளே சென்று ஏஞ்சலா எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் செய்துவிட்டு என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்க, முதலில் பேச்சை ஆரம்பித்தது ஏஞ்சலா தான்
"சாரா எப்படி இருக்கா?" இந்த கேள்வியை சத்தியமாக ஆதி எதிர்பார்க்கவில்லை.
"ஹ்ம்ம், பழையபடி சந்தோசமா இருக்கா" என்றான் தலையை குனிந்துக்கொண்டு, அப்போது தான் நிம்மதியாக இருந்தது, அந்த பெண்ணின் வாழ்க்கையில் தன்னால் எந்த ஒரு பிரச்சனையும் உருவாகவில்லை என்பது தெரிந்த பின். மேலும் ஆதி மேல் இருந்த காதல் அப்படியே தான் இருக்கிறது. சாரா நன்றாக இருக்கிறாள் என தெரிந்த பின் இவர்கள் காதலை பற்றி பேச தொடங்கினாள்
"ஓகே, வேற எதுவும் என்கிட்ட சொல்லனுமா?"
டேபிள் மேல் இருந்த ஏஞ்சலாவின் கையை பிடித்துக்கொண்டவன் "ஆமா சொல்லணும், சாரி. இத்தனை மாசம் பேசாம இருந்ததுக்கு சாரி. எனக்கு நான் பண்ண தப்ப நானே மன்னிக்கிறதுக்கு எனக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்பட்டது. இப்போ தான் என்னோட மனசு நிம்மதியா இருக்கு, அதான் என்னோட ஏஞ்சலை பார்க்க பறந்து வந்துட்டேன். இனிமேல் இந்த கையை விடுறதா இல்லை" என அவள் கைகளை இறுக்கமாக பற்றியவன் பாக்கெட்டில் இருந்து மோதிரம் பெட்டியை எடுத்து அவள் முன் வைத்தான்.
ஏஞ்சலாவின் முகம் சந்தோசத்தில் மிளிர்ந்தது. இதனை எதிர்பார்க்கவில்லை, இன்பஅதிர்ச்சி என்பதை சந்தோசத்தில் கலங்கும் கண்ணீர் சொன்னது. பெட்டியை திறந்து அதில் இருந்து அழகான பிங்க் டைமண்ட் எடுத்து, அவள் கையை பிடித்தவன்
"மே ஐ? (May I?)" என வினாவ
கண்ணீரை துடைத்தவள் 'ஆமா' என்று தலையை அசைக்க
"இ லவ் யு டூ தி மூன் அண்ட் பாக் (I love you to the moon and back)" என்றான் காதலாக. மோதிரம் போட்டு முடித்த பின் அதன் மேலே முத்தமிட, ஏஞ்சலா முகம் வெட்கத்தில் சிவந்தது.
பின் ஏஞ்சலாவின் பெற்றோர்களை சந்தித்து இருவரின் முடிவை பற்றி சொல்ல அவர்களும் சந்தோசமாக அதனை ஏற்றும்கொண்டனர். மேலும் அவனை வெளியில் தங்க விடாமல் அவர்கள் வீட்லே தங்க சொல்ல அவர்களின் குடும்பத்தில் ஒன்றானான் ஆதி. இந்த மாதிரி கலாச்சாரம் அங்கு சகஜம் என்பதால் மட்டுமே அவ்வாறு செய்தனர்.
அதுமட்டுமில்லாது வந்த நாட்களில் ஆதி அவனின் பெற்றோர்களை ஏஞ்சலாவின் பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் பேச வைத்தான். ஆதியின் அம்மா சும்மாவே ஸ்டேட்டஸ் பார்க்கும் ஆள் என்பதால் வெளிநாட்டு பெண் என தெரிந்த உடனே சம்மதம் சொல்லிவிட்டார். ஆதியும், ஏஞ்சலாவும் அங்கு சுற்றாத இடம் இல்லை. வசந்தகாலமாய் நகர்ந்தது அவர்களின் நாட்கள். ஏஞ்சலா வீட்டில் இருந்து சில பல தூரம் இருக்கும் சுற்றுலா தளத்துக்கு ஒரு வாரம் ட்ரிப் எல்லாம் சென்று வந்தனர், தனிமையும், குளிரும் அடுத்த கட்டத்துக்கு அவர்கள் உறவு செல்ல வழிவகுத்தது.
ஏஞ்சலாவின் பெற்றோர்கள் கல்யாணத்துக்கு வலியுறுத்த ஆதியின் பக்கம் இருந்து பச்சை கோடி காட்டப்பட்டது. எனவே யூகேவிலே கல்யாணம் பேசி முடிவு செய்தனர். இதே செய்தி அர்ஜூனுக்கும், சாராவுக்கு ஆதி மற்றும் ஏஞ்சலா வீடியோ கால் மூலம் சொல்ல அவர்களுக்கும் மகிழ்ச்சியே.
***
அர்ஜுன் அவன் சொன்னது போலவே அவனாக சென்று காதலை சொல்ல முயற்சிக்கவில்லை, எங்கே தன்னையும் ஆதியும் காதல் போல் நினைக்க கூடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்தது. எனவே, காதலை உணர்த்தும் முயற்சியில் இருந்தான். சாராவே அவன் காதலை புரிந்துக்கொண்டு அவளாக அவனிடம் வர காத்துக்கொண்டிருக்கிறான்.
இந்த சில வாரங்களின் அர்ஜுனின் மாற்றம் சாரா நன்றாக உணர்ந்தாள். அவளுக்கு தெரியாமல் அவளை பார்ப்பது, இவள் உடனே திரும்பினாள் அதே காதல் பார்வையை மாற்றாது அவள் கண்களோடு கண்கள் கலக்க விட்டு அவளை திணற வைப்பது என சேட்டை செய்துக்கொண்டிருந்தான். அது அவளுக்கு பிடித்து இருந்தது தான் ஆச்சரியமே.
அன்று வார இறுதி நாள் என்பதால் சாரா அவள் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருக்க, அதில் ரொமான்டிக் பாடல் ஒன்று வந்தது. பொதுவாக யாரும் அருகில் இருந்தால் இது மாதிரி காட்சிகள் வரும் போது அவர்களுடன் பார்க்க நேரிட்டால் சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க வேறு சேனல் மாற்றுவது உண்டு. சாராவும் அதே போல் செய்த நாட்களும் உண்டு, ஆனால் இன்று அவள் மட்டுமே இருக்க தைரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அதிக படியான காட்சிகள் வரும் போது எல்லாம் வெட்கம் கொண்டு இருகைகளையும் கொண்டு முகத்தை மூடினாலும் , இருவிரலில் நடுவில் ஓட்டை கண் விட்டு பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவளின் கெட்ட நேரமோ அர்ஜுன் வண்டி சத்தம் பாவம் கவனிக்கவில்லை.
அர்ஜுன் எப்போதும் போல் வீட்டுக்குள் வர, அவன் பார்த்தது முகத்தை மறைத்தும் மறைக்காமலும் டிவி பார்த்துக்கொண்டிருந்த சாரா தான். ஓடியே பாட்டை வைத்தே விஷயத்தை கண்டுபிடித்த அர்ஜுன் 'மாட்டுன டி' என மனதில் சிரித்துக்கொண்டு, பூனை போல் வீட்டுக்குள் வந்தான். அதையும் கவனிக்காமல் பாட்டில் வரும் காட்சிகளில் லயித்திருந்தாள்.
வீட்டில் ஒரு இடத்தி இருந்து பார்த்தால், டிவியில் ஓடும் காட்சியும், திருட்டு சாராவும் நன்றாக தெரிய அதனை புகைப்படமாக எடுத்தான். அங்கே அமர்ந்து அவள் வேறு என்ன செய்கிறாள் என பார்கலானான். மேலும் அவள் மாற்றம் நினைத்தது சந்தோசமாகவும் இருந்தது. இந்த காலத்துக்கு தகுந்த பெண்களின் எந்த குணமும் அவளிடம் இருக்காது, பெரியதாக எதற்கும் ஆசை படாமல் இருப்பாள். ‘இது’ மாதிரி விஷயம் விளையாட்டாக பேச பெண் தோழிகளும் இல்லை இப்போது அந்த கவலை நீங்கியது.
அவளுக்கு வயதுக்கு உரித்தான ஆசைகளும், உணர்வுகளும் இருக்கு என்பதில் நிம்மதியே. பாட்டு முடிந்ததும் முகத்தில் இருந்து கையை எடுத்த சாரா, விளம்பரம் போட்டதால் வேறு சேனல் வைக்க, அந்நேரம் அர்ஜுன் குரல்
"என்ன டி, அதுக்குள்ள பாட்டு முடிஞ்சு. ச்ச" என போலியாக வருத்தப்பட
தூக்கிவாரி போட படார் என்று எழுந்து நின்றாள். முகத்தில் சங்கடம், வெட்கம், சிரிப்பு என மாறி மாறி வர
"நீ...நீ எப்போ உள்ள வந்த" மனதிலோ 'ஐயோ பார்த்துட்டானா, மானமே போச்சு' என்றே தோன்றியது.
"இப்போ தான் வந்தேன்" என சொல்லி ஒரு நொடி சாரா மனம் நிம்மதியடைய, அதற்குள் "அப்படினு சொல்ல எனக்கும் ஆசை தான், ஆனா நான் அப்போவே வந்துட்டேன்" என்றான் சிரிப்பை உள்ளடக்கிய படி.
சாராவோ எங்கோ பார்த்து அவனிடம் இருந்து பார்வையை மாற்ற முயற்சிக்க
"எப்படி எப்படி முகத்தை மறைச்சாலும், இப்படி ரெண்டு விரலுக்கு இடையில உள்ள கேப்புல பாக்குறது" என அவள் கையை வைத்தது போலவே செய்து வேறு காட்ட
"அர்ஜுன்" என்றாள் சிணுங்களாக
அர்ஜுன் சும்மா இருக்காமல் அந்த பாட்டை சத்தமாக பாட, சாரா காலை தரையில் உதைத்துவிட்டு கிட்சன் உள்ளே சென்றுவிட்டாள். அர்ஜுனின் சிரிப்பு சத்தம் அவளை தொடர்ந்தது.
சில நிமிடம் கழித்து கையில் பாத்திரத்துடன் வந்தவள்
"வந்து உட்காரு டா, சாப்பிடலாம்" என்றாள் எதுவும் நடக்காது போல். அவளுக்கு தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்துவிட
"இல்ல டி, நான் ஏற்கெனவே கில்மா பிரியாணி சாப்பிட்டேன்" என சொன்னதும் தான், அவளுக்கு புரை ஏறிவிட்டது.
தண்ணீர் கொடுத்து தலையை தட்டிவிட வர, டேபிள் மேல் இருந்த கரண்டியை எடுத்து அடிக்க துரத்தினாள். சிரிப்புடன் அடியையும் வாங்கிக்கொண்டான். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன், ஆதியின் கல்யாண பேச்சை எடுக்க
"ஏஞ்சலா ரொம்ப ஸ்வீட்டா பேசுறா, யூகே ல வெச்சு தான கல்யாணம் சோ எனக்கான டிரஸ் நான் வேண்டாம்னு சொல்லியும் அவளே டிசைன் பண்ணி தர்றேன்னு சொல்லிருக்கா. அதுவும் இல்லாம டிக்கெட்ஸ் கூட போடுறேன்னு சொன்ன, நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்"
"எனக்கு சொல்லிருக்கா டி, அப்புறம்..டிக்கெட்ஸ் பத்தி நீ எதுவும் யோசிக்காத எல்லாமே நானே புக் பண்ணிட்டேன். நீ என்னோட வந்தா மட்டும் போதும்"
பயந்துக்கொண்டே தான் இருந்தாள், டிக்கெட் எப்படி புக் செய்வது, யாருடன் செல்வது, தனியாக போக முடியுமா? என்ற உள்ளுக்குள்ள மருகிக்கொண்டே நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தாள். அர்ஜுன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவன் குடும்பத்தினர் அதற்கு விட மாட்டார்களோ என கவலை இருக்கத்தான் செய்தது. இப்போது அவன் சொன்ன வார்த்தை தண்ணீர் விட்டால் நெருப்பு அணைவது போல் மாயமாக மறைந்தது.
"ஆனா உன்னோட அப்பா, தங்கச்சி எல்லாரும் வருவார்களே? அவங்களுக்கு ஓகே வா?"
"அவங்களுக்கு ஓகே இல்லனாலும் அது எனக்கு பிரச்சனை இல்லை. நான் உன்கூடவே தான் இருப்பேன். புரியுதா?" என கேட்க, அவன் தோளில் சாய்த்துக்கொண்டு சரி என்று தலையை அசைத்தாள்.
எந்த இடத்திலும், யாருக்காகவும் அவளை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
****
ரூபினியை இந்த சில நாட்களாக கண்காணிப்பில் தான் வைத்துக்கொண்டிருந்தான் அர்ஜுன். அவனுக்கு திவாஹர் தொழில் நஷ்டம் ஏற்படுத்த ரொம்ப நாள் ஆகாது, ஆனால் ரூபினி செய்த செயலுக்கு மற்றவர்கள் தண்டிக்க படுவது சரியாக படவில்லை எனவே நன்றாக யோசித்து அவனின் பிளானை செயல் படுத்திக்கொண்டிருந்தான், அதனை ரூபினியே அறியாமல்.
அர்ஜுன் செட் செய்த ஆள் தான் நிதின், அவனை ரூபினியுடன் பணக்காரன் என்ற பெயரோடு பழகவிட, அவளும் அந்த வலையில் வந்து சிக்கினாள், அவன் பணக்காரன் என்ற ஒரே காரணத்துக்காக. ஆனால் அவனோ மாத சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒருவன். இது அர்ஜுனின் பிளான் தான் என்றாலும், நிதின் அவளை ஒருகட்டத்துக்கு மேல் உண்மையாக விரும்ப, இது கல்யாணம் வரை சென்றது. ரூபினியும் அதிகம் பணம் இருக்கும் ஒருவனை திருமணம் செய்ய போகிறோம் என்ற கனவில் மிதக்க, நாடகமாடி ரூபினியை திருமணமும் செய்துக்கொண்டான்.
அவன் சொன்னது பொய்யாக இருக்காமல் ஆனால் விரும்பியது உண்மையே. திவாஹர் பல முறை ரூபினியுடம் நிதினை திருமணம் செய்ய சம்மதமா என கேட்ட பிறகே கல்யாணம் செய்து வைத்தார். ரூபினியோ ஆதி மற்றும் அர்ஜுன் விட அதிகம் பணம் உள்ளவனை கல்யாணம் செய்து விட்டோம் என மிதப்பில் இருக்க, இடியென விழுந்தது முதல் இரவின் நிதின் சொன்ன உண்மை. இப்போது தான் தந்தையிடம் அவனை பிடிக்கவில்லை, விவாகரத்து வேண்டும் என்று சொன்னாள் யோசிக்காமல் தன்னை அவர் மகள் இல்லை என்றே ஊருக்கு அறிவித்துவிடுறார் என்று நன்றாக தெரியும். எனவே அவனையே முறைத்த வாறு இருந்தாள்.
மேலும் இதற்கு எல்லாம் பின் அர்ஜுன் தான் இருக்கிறான் என தெரிந்த பின் இன்னும் கொதி நிலைக்கே சென்றுவிட்டாள். ஆனால் அவள் செய்த செயலுக்கு எதிர்வினையாக அர்ஜுன் அவளுக்கு நிதினை அறிமுக படுத்தி நல்லது தான் செய்துள்ளான் என என்று அறியப்போறாளோ?
அர்ஜுனின் எண்ணம் எல்லாம் அவள் எதற்கு ஆசைப்பட்டாளோ அது கிடைக்கவே கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். அவளோ காதலுக்கு ஆசை படாமல் அளவில்லா பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க, அதற்கு வழி இல்லாமல் செய்துவிட்டான். அவனுக்கு அவளை வாழ்க்கை முழுக்க பலி வாங்க வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை. அவனின் மனதில் எல்லாம் அவனின் சாராவும், அவன் முடிக்கவிருக்கும் ப்ராஜெக்ட் மட்டுமே இருக்கிறது. இதில் ரூபினி என்ற ஒருத்திக்கு அவன் நினைவிலும் கூட இடம் இல்லை என்பதே உண்மை.
நிதினுக்கு அவளை எப்படி என்றாலும் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம் அவனின் உண்மையாக காதல் அந்த வில்லியை மாற்றுமா என்று!