அதிர்ச்சியுடனே அந்த மோதிரத்தை கையில் எடுத்த சாரா அதனை பார்க்க ஏஞ்சலா அன்று சொன்ன விடையம் தான் நியாபகம் வந்தது 'ஆதி தான் உன்னை இழந்துவிட்டான், நீ இல்லை'. மெல்ல அடியெடுத்து வைத்து ஆதியின் கையில் அந்த மோதிரத்தை கொடுத்து விட்டு, அர்ஜுன் கைகளை வந்து பிடித்துக்கொண்டாள். அவள் மனதில் யாரும் இல்லாமல் இருந்திருந்தால், அவள் இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒரு பெண்ணை பார்த்து கடந்து போவது சுலபமாக இருந்திருக்காது, ஆனால் அவள் மனதில் மொத்தமும் இப்போது அர்ஜுன் இருக்கிறானே, சந்தோஷமாகவே இருந்தாள். மேலும் ஏஞ்சலா சொன்ன வார்த்தை அதில் இருந்து கடந்து போக உதவியாக இருந்தது.
அதனை கையில் வாங்கிய ஆதி, ஏஞ்சலாவை பார்க்க அவளோ கலக்கத்துடன் இருந்தாள். அதனை புரிந்துக்கொண்டவன் மோதிரம் போட்ட பின் கொடுக்கும் இதழ் முத்தம் அதற்கு முன்பே கொடுக்க, மோதிரம் விழுந்தத்தில் இருந்த கனமான சூழல், கிண்டல் கேலி ஆக்கிரமிப்பு செய்தது.
கல்யாணம் செய்யும் முன் ஏஞ்சலா மனதில் இருந்த பாரம் ஆதி செய்த செயலால் நீங்க, அதற்கு பின்னே மோதிரம் போட்டு அவளை மனைவியாக்கிக்கொண்டு விட்டதை தொடர்ந்தான். அந்நேரம் அவர்கள் ஏற்பாடு செய்து வைத்ததை போல் மேலே இருந்து பூக்கள் தூவ, அந்த இடத்தில் சந்தோசம் மட்டுமே நிரம்பி இருந்தது.
அர்ஜூனுக்கும் அனைவரின் முன்பு சாராவிடம் ப்ரோபஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. ஏன் என்றால் ஆதி அதே தப்பை தான் செய்தான். பொதுவாக கூட்டத்தில் நடுவே சர்ப்ரைஸ் ஆகா ப்ரோபஸ் செய்யும் போது, காதலை பெற இருக்கும் நபர் கூட்டத்துக்காகவே காதலை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர். எனவே அர்ஜுன் அந்த எண்ணத்தை கைவிட்டான்.
இரண்டொரு நாள் கழித்து ஆதி, ஏஞ்சலா, அர்ஜுன் மற்றும் சாரா அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அந்நேரம் கல்பனா உள்ளே வந்தாள். கல்பனா நேராக சாரா அருகில் செல்ல, அர்ஜுன் வந்து தடுக்கும் முன்பே சாரா கையில் அன்று அவள் கொடுத்த உடையை கொடுத்தவள் "தேங்க்ஸ்" என சொல்லிவிட்டு ஓடியே விட்டாள். அவளின் மாற்றம் நால்வருக்கும் சந்தோசமே.
அங்கே இருந்த பொழுது அர்ஜுனும், சாராவும் ஊரை நன்றாக சுற்றினர். இந்த முறை பிளைட்டில் அர்ஜுன் சொல்லாமலே அவன் மேல் சாய்ந்துக்கொண்டாள் சாரா.
கண்கள் மூடி சாய்ந்திருந்த அர்ஜுன் அவளின் செய்கையில் சிரித்துக்கொண்டான். சாய்ந்த அவளின் தலையில் மீது முத்தமிட்டவன் நிம்மதியாக தூங்கியும் போனான்.
அடுத்தடுத்து வந்த வாரங்களின் காதலுக்கு நேரம் செலவிட முடியவில்லை. ப்ராஜெக்ட் பக்கமே அவன் நேரம் இழுத்து செல்லப்பட்டது. கிடைக்கும் நேரம் போனில் காதல் செய்தனர். சாரா இப்போது எல்லாம் சந்தோசமாக வலம் வந்தாள். காதல் இப்போது சுகத்தை தந்தது. முன்பெல்லாம் குழப்பத்தில் இருப்பவள் காதல் வந்த பின் ஒரு தெளிவு வந்ததை போல் உணர்ந்தாள். முகத்தில் நிரத்தரமாக இருக்கும் புன்னகை மீண்டது.
பல மாதங்கள் கழித்து,
கோவில் நடுநாயக்கமாக கம்பீரமாக இருக்க, சுற்றி எங்கும் அலகாரங்கள். திரும்பிய இடம் எல்லாம் பக்தர்கள், பூக்களுடன் சேர்ந்த பன்னீர் வாசனை, தீப ஒளிகள் என அந்த இடமே ஆன்மிகம் நிரம்பி இருந்தது. அப்போது தான் கோவிலுக்கு கும்பாபிஷேகம் முடிந்திருந்தது. அர்ஜுன் சொன்ன படியே செய்து காட்டிவிட்டான். அதற்கு அவனுக்கு கிடைத்த புகழ் ஏராளம்.
அர்ஜுனின் கம்பெனி ஆன 'ஸ்டோன் பில்டிங் கன்ஸ்டிரக்ஷன்' தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவனின் கனவான அவர்கள் கம்பெனி இப்போது அவன் வசம். இன்று சாராவும் அவன் கை சேரப்போகிறாள் அதற்காக காத்துக்கொண்டு மணமேடையில் அமர்ந்திருந்தான். அதே கோவிலில் அருகே மேடை அமைத்துவிட்டான் அவன் அன்று சாராவிடம் சொன்னது போலவே.
உறுத்தாத அழகுடன் மணமேடை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள் சாரா. மணக்கோலம் என்றும் பெண்களுக்கு ஒரு தனி அழகு தான். மங்கலநாணங்கள் இசைக்க தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டான். சாரா இவன் வாழ்க்கையில் பல அவதாரம் - தோழி, ரகசிய காதலில், நண்பனின் காதலி, அர்ஜுனின் காதலி ஆனப்பின் இப்போது மனைவி. அர்ஜுன் இவளை அடைய கடந்து வந்த பாதை ஏராளம். சொல்ல முடியாத உணர்ச்சியில் இருந்தான். பொதுவாக கல்யாணம் போது பெண் அழுவாள் ஆனால் இங்கு மாறாக அர்ஜுன் கண்களில் ஒரு துளி கண்ணீர், சந்தோசத்தில்.
கோவிலுக்கு முன்பு வந்து போக இருந்த முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை மீட்டெடுத்த காரணத்துக்காக அர்ஜுன் மற்றும் சாராவுக்கு முன்னோர்கள் ஆசி கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது. பழைய காலத்து கோவில் அழகை திரும்ப கொண்டுவந்துவிட்டான். இதில் பக்தர்கள் மத்தியில் மிகவும் கவர்ந்தது சுவற்றில் இருக்கும் ஓவியமும், சிலைகளும் தான். தற்போது கிடைக்கும் பெயிண்ட் பயன்படுத்தில் வரையாமல், இயற்கையாக கிடைக்கும் வண்ணங்களை கொண்டு தீட்டி இருந்தனர். இந்த மீட்டெடுப்பு பணி யாரென்னும் செய்திருக்கலாம் தான் ஆனால் அதன் தனித்துவமான அம்சம் போகாமல் பாதுகாத்த அர்ஜுன் செய்த செயலே அவனின் புகழுக்கு காரணம்.
மணமேடையில் நெருப்பை சுற்றி வரும் போது சாராவுக்கு அண்ணன், தம்பி என யாரும் இல்லாத காரணத்தினால் முகம் சுருங்க, பார்த்துக்கொண்டிருந்த ஆதி அவள் கையை பிடித்துக்கொண்டு சுற்றி வந்தான். அவள் கேட்கும் படி
"சாரா, நான் சம்பர்தாயத்துக்காக தான் இந்த முறையை செய்யிறேன். எப்போதும் நீ எனக்கு பிராண்ட் தான் டி. சும்மா அண்ணா தம்பின்னு சொல்லி நம்ம உறவை மாற்ற நான் விரும்பல" என்றான் சிரிப்போடு. அதனை சகஜமா பார்த்துக்கொண்டிருந்தாள் ஏஞ்சலா. அர்ஜுனும் சாராவும் கொடுத்த புடவையில் அழகா இருந்தாள்.
இதுதான் அவன், என்றும் அவள் அவனுக்கு தோழியே.
அன்றிவு சாரா வெட்கம் கொண்டு அர்ஜுன் அறைக்குள் வர, அவனோ அன்று அவள் திருட்டு தனமாக பார்த்துக்கொண்டிருந்த பாடலை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தான். சாராவுக்கு வந்ததே ஒரு எரிச்சல், வெட்கம் தடம் தெரியாமல் போய் அருகில் உள்ள தலையணை எடுத்து அர்ஜுன் பின்னாடி சென்று மொத்த, சிரித்த படி வாங்கிக்கொண்டான். கொஞ்சம் நேரம் கழித்து அந்த சத்தமும் இல்லாமல் போக... நிசப்தமாக இருந்தது, காரணம் அர்ஜுன் தான்.
நள்ளிரவில் அர்ஜுன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள் சாரா. அலங்காரம் மட்டுமே அழகல்ல, சில நேரங்களின் கலைந்த அலங்காரம் கூட அழகு தான் என்பது போல் இருந்தது சாராவின் தோற்றம்.
"அர்ஜுன்"
"ம்ம்" அவன் கைகளோட அவன் மார்பில் இருந்த சாராவின் கைவிரல்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது.
"நம்ம பண்ணது சரிதானா?"
"கல்யாணம் ஆகிட்டா எல்லாருக்கும் நடக்குறது தான டி"
மார்பின் மேல் இருந்த கையிலே அடி போட்டவள் "அது இல்ல. நம்ம அன்னைக்கு ஆதியோட அப்பாகிட்ட பணம் கொடுத்தோமே அதுதான்"
அவளை தன மேல் நன்றாக இழுத்து போட்டவன், நெற்றி முட்டி "அவங்க கிட்ட இருந்த நன்றி கடன்காக நீ உன்னோட வாழ்கையவே பணயம் வைக்க போய்ட்ட. ஆதி அப்பா உனக்கு பண்ண உதவி வெச்சு உனக்கு நெருக்கடி கொடுத்தது தப்பு. அவர் உனக்கு செய்த பண உதவி நீ திரும்ப பணமாவே கொடுத்துட்ட. இனிமேல் நீ யாருக்காகவும் இறங்கி போக வேண்டிய அவசியமே இல்லை. என்னோட சாரா இப்போ ஒரு சுதந்திரமான பொண்ணு"
கல்யாணம் முன்பு அர்ஜுன் சாராவிடம் வந்து குறிப்பிட்ட தொகையை கேட்க, பதிலுக்கு என்ன என்று கேட்காமல் சாராவும் கொடுக்க.. அந்த பணத்தை இருவரும் சென்று ரவீந்திரனிடம் கொடுத்து வந்தனர். அவர் மறுத்து மன்னிப்பு கேட்டாலும் அர்ஜுன் விடவில்லை. பணத்தை கை மாற்றிய பின்னரே அங்கிருந்து நகர்ந்தான். அர்ஜுன் நினைத்தால் அதே பணத்தை ஒரே நொடியில் அன்றே கொடுத்திருக்க முடியும் ஆனால் சாரா அவள் சம்பாத்தித்த பணத்தை கொடுத்தால் தான் அவளுக்கு மரியாதை என்பதால் இவ்வாறு செய்தான்.
சாரா அவனை காதலாக பார்க்க, அதனை பார்த்த அர்ஜுன் "என்ன டி பார்வை, தூங்கு.. எனக்கு தூக்கம் வருது" என பாசாங்கு செய்து கண்களை மூட... சாராவோ அன்று அவள் டிவியில் பார்த்த பாடலை பட... அர்ஜுன் அதிர்ச்சியில் கண்களை திறக்க அடுத்து நடந்த நிகழ்வுக்கு இருவரும் பொறுப்பு.
______________________
அதனை கையில் வாங்கிய ஆதி, ஏஞ்சலாவை பார்க்க அவளோ கலக்கத்துடன் இருந்தாள். அதனை புரிந்துக்கொண்டவன் மோதிரம் போட்ட பின் கொடுக்கும் இதழ் முத்தம் அதற்கு முன்பே கொடுக்க, மோதிரம் விழுந்தத்தில் இருந்த கனமான சூழல், கிண்டல் கேலி ஆக்கிரமிப்பு செய்தது.
கல்யாணம் செய்யும் முன் ஏஞ்சலா மனதில் இருந்த பாரம் ஆதி செய்த செயலால் நீங்க, அதற்கு பின்னே மோதிரம் போட்டு அவளை மனைவியாக்கிக்கொண்டு விட்டதை தொடர்ந்தான். அந்நேரம் அவர்கள் ஏற்பாடு செய்து வைத்ததை போல் மேலே இருந்து பூக்கள் தூவ, அந்த இடத்தில் சந்தோசம் மட்டுமே நிரம்பி இருந்தது.
அர்ஜூனுக்கும் அனைவரின் முன்பு சாராவிடம் ப்ரோபஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. ஏன் என்றால் ஆதி அதே தப்பை தான் செய்தான். பொதுவாக கூட்டத்தில் நடுவே சர்ப்ரைஸ் ஆகா ப்ரோபஸ் செய்யும் போது, காதலை பெற இருக்கும் நபர் கூட்டத்துக்காகவே காதலை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர். எனவே அர்ஜுன் அந்த எண்ணத்தை கைவிட்டான்.
இரண்டொரு நாள் கழித்து ஆதி, ஏஞ்சலா, அர்ஜுன் மற்றும் சாரா அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அந்நேரம் கல்பனா உள்ளே வந்தாள். கல்பனா நேராக சாரா அருகில் செல்ல, அர்ஜுன் வந்து தடுக்கும் முன்பே சாரா கையில் அன்று அவள் கொடுத்த உடையை கொடுத்தவள் "தேங்க்ஸ்" என சொல்லிவிட்டு ஓடியே விட்டாள். அவளின் மாற்றம் நால்வருக்கும் சந்தோசமே.
அங்கே இருந்த பொழுது அர்ஜுனும், சாராவும் ஊரை நன்றாக சுற்றினர். இந்த முறை பிளைட்டில் அர்ஜுன் சொல்லாமலே அவன் மேல் சாய்ந்துக்கொண்டாள் சாரா.
கண்கள் மூடி சாய்ந்திருந்த அர்ஜுன் அவளின் செய்கையில் சிரித்துக்கொண்டான். சாய்ந்த அவளின் தலையில் மீது முத்தமிட்டவன் நிம்மதியாக தூங்கியும் போனான்.
அடுத்தடுத்து வந்த வாரங்களின் காதலுக்கு நேரம் செலவிட முடியவில்லை. ப்ராஜெக்ட் பக்கமே அவன் நேரம் இழுத்து செல்லப்பட்டது. கிடைக்கும் நேரம் போனில் காதல் செய்தனர். சாரா இப்போது எல்லாம் சந்தோசமாக வலம் வந்தாள். காதல் இப்போது சுகத்தை தந்தது. முன்பெல்லாம் குழப்பத்தில் இருப்பவள் காதல் வந்த பின் ஒரு தெளிவு வந்ததை போல் உணர்ந்தாள். முகத்தில் நிரத்தரமாக இருக்கும் புன்னகை மீண்டது.
பல மாதங்கள் கழித்து,
கோவில் நடுநாயக்கமாக கம்பீரமாக இருக்க, சுற்றி எங்கும் அலகாரங்கள். திரும்பிய இடம் எல்லாம் பக்தர்கள், பூக்களுடன் சேர்ந்த பன்னீர் வாசனை, தீப ஒளிகள் என அந்த இடமே ஆன்மிகம் நிரம்பி இருந்தது. அப்போது தான் கோவிலுக்கு கும்பாபிஷேகம் முடிந்திருந்தது. அர்ஜுன் சொன்ன படியே செய்து காட்டிவிட்டான். அதற்கு அவனுக்கு கிடைத்த புகழ் ஏராளம்.
அர்ஜுனின் கம்பெனி ஆன 'ஸ்டோன் பில்டிங் கன்ஸ்டிரக்ஷன்' தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவனின் கனவான அவர்கள் கம்பெனி இப்போது அவன் வசம். இன்று சாராவும் அவன் கை சேரப்போகிறாள் அதற்காக காத்துக்கொண்டு மணமேடையில் அமர்ந்திருந்தான். அதே கோவிலில் அருகே மேடை அமைத்துவிட்டான் அவன் அன்று சாராவிடம் சொன்னது போலவே.
உறுத்தாத அழகுடன் மணமேடை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள் சாரா. மணக்கோலம் என்றும் பெண்களுக்கு ஒரு தனி அழகு தான். மங்கலநாணங்கள் இசைக்க தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டான். சாரா இவன் வாழ்க்கையில் பல அவதாரம் - தோழி, ரகசிய காதலில், நண்பனின் காதலி, அர்ஜுனின் காதலி ஆனப்பின் இப்போது மனைவி. அர்ஜுன் இவளை அடைய கடந்து வந்த பாதை ஏராளம். சொல்ல முடியாத உணர்ச்சியில் இருந்தான். பொதுவாக கல்யாணம் போது பெண் அழுவாள் ஆனால் இங்கு மாறாக அர்ஜுன் கண்களில் ஒரு துளி கண்ணீர், சந்தோசத்தில்.
கோவிலுக்கு முன்பு வந்து போக இருந்த முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை மீட்டெடுத்த காரணத்துக்காக அர்ஜுன் மற்றும் சாராவுக்கு முன்னோர்கள் ஆசி கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது. பழைய காலத்து கோவில் அழகை திரும்ப கொண்டுவந்துவிட்டான். இதில் பக்தர்கள் மத்தியில் மிகவும் கவர்ந்தது சுவற்றில் இருக்கும் ஓவியமும், சிலைகளும் தான். தற்போது கிடைக்கும் பெயிண்ட் பயன்படுத்தில் வரையாமல், இயற்கையாக கிடைக்கும் வண்ணங்களை கொண்டு தீட்டி இருந்தனர். இந்த மீட்டெடுப்பு பணி யாரென்னும் செய்திருக்கலாம் தான் ஆனால் அதன் தனித்துவமான அம்சம் போகாமல் பாதுகாத்த அர்ஜுன் செய்த செயலே அவனின் புகழுக்கு காரணம்.
மணமேடையில் நெருப்பை சுற்றி வரும் போது சாராவுக்கு அண்ணன், தம்பி என யாரும் இல்லாத காரணத்தினால் முகம் சுருங்க, பார்த்துக்கொண்டிருந்த ஆதி அவள் கையை பிடித்துக்கொண்டு சுற்றி வந்தான். அவள் கேட்கும் படி
"சாரா, நான் சம்பர்தாயத்துக்காக தான் இந்த முறையை செய்யிறேன். எப்போதும் நீ எனக்கு பிராண்ட் தான் டி. சும்மா அண்ணா தம்பின்னு சொல்லி நம்ம உறவை மாற்ற நான் விரும்பல" என்றான் சிரிப்போடு. அதனை சகஜமா பார்த்துக்கொண்டிருந்தாள் ஏஞ்சலா. அர்ஜுனும் சாராவும் கொடுத்த புடவையில் அழகா இருந்தாள்.
இதுதான் அவன், என்றும் அவள் அவனுக்கு தோழியே.
அன்றிவு சாரா வெட்கம் கொண்டு அர்ஜுன் அறைக்குள் வர, அவனோ அன்று அவள் திருட்டு தனமாக பார்த்துக்கொண்டிருந்த பாடலை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தான். சாராவுக்கு வந்ததே ஒரு எரிச்சல், வெட்கம் தடம் தெரியாமல் போய் அருகில் உள்ள தலையணை எடுத்து அர்ஜுன் பின்னாடி சென்று மொத்த, சிரித்த படி வாங்கிக்கொண்டான். கொஞ்சம் நேரம் கழித்து அந்த சத்தமும் இல்லாமல் போக... நிசப்தமாக இருந்தது, காரணம் அர்ஜுன் தான்.
நள்ளிரவில் அர்ஜுன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள் சாரா. அலங்காரம் மட்டுமே அழகல்ல, சில நேரங்களின் கலைந்த அலங்காரம் கூட அழகு தான் என்பது போல் இருந்தது சாராவின் தோற்றம்.
"அர்ஜுன்"
"ம்ம்" அவன் கைகளோட அவன் மார்பில் இருந்த சாராவின் கைவிரல்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது.
"நம்ம பண்ணது சரிதானா?"
"கல்யாணம் ஆகிட்டா எல்லாருக்கும் நடக்குறது தான டி"
மார்பின் மேல் இருந்த கையிலே அடி போட்டவள் "அது இல்ல. நம்ம அன்னைக்கு ஆதியோட அப்பாகிட்ட பணம் கொடுத்தோமே அதுதான்"
அவளை தன மேல் நன்றாக இழுத்து போட்டவன், நெற்றி முட்டி "அவங்க கிட்ட இருந்த நன்றி கடன்காக நீ உன்னோட வாழ்கையவே பணயம் வைக்க போய்ட்ட. ஆதி அப்பா உனக்கு பண்ண உதவி வெச்சு உனக்கு நெருக்கடி கொடுத்தது தப்பு. அவர் உனக்கு செய்த பண உதவி நீ திரும்ப பணமாவே கொடுத்துட்ட. இனிமேல் நீ யாருக்காகவும் இறங்கி போக வேண்டிய அவசியமே இல்லை. என்னோட சாரா இப்போ ஒரு சுதந்திரமான பொண்ணு"
கல்யாணம் முன்பு அர்ஜுன் சாராவிடம் வந்து குறிப்பிட்ட தொகையை கேட்க, பதிலுக்கு என்ன என்று கேட்காமல் சாராவும் கொடுக்க.. அந்த பணத்தை இருவரும் சென்று ரவீந்திரனிடம் கொடுத்து வந்தனர். அவர் மறுத்து மன்னிப்பு கேட்டாலும் அர்ஜுன் விடவில்லை. பணத்தை கை மாற்றிய பின்னரே அங்கிருந்து நகர்ந்தான். அர்ஜுன் நினைத்தால் அதே பணத்தை ஒரே நொடியில் அன்றே கொடுத்திருக்க முடியும் ஆனால் சாரா அவள் சம்பாத்தித்த பணத்தை கொடுத்தால் தான் அவளுக்கு மரியாதை என்பதால் இவ்வாறு செய்தான்.
சாரா அவனை காதலாக பார்க்க, அதனை பார்த்த அர்ஜுன் "என்ன டி பார்வை, தூங்கு.. எனக்கு தூக்கம் வருது" என பாசாங்கு செய்து கண்களை மூட... சாராவோ அன்று அவள் டிவியில் பார்த்த பாடலை பட... அர்ஜுன் அதிர்ச்சியில் கண்களை திறக்க அடுத்து நடந்த நிகழ்வுக்கு இருவரும் பொறுப்பு.
______________________