logo

இருளின் ஒளி | Irulin oli | Episode 11

Mars

Administrator
பார்த்த அனைவருக்கும் போன பயம் மீண்டும் வந்தது. ஆளுக்கு ஒரு பக்கம் சென்று ஒளிந்து கொண்டனர்.


யுவன் - அட ச்சீ, வெளிய வாங்க எல்லாரும். அது பூட்டி தான இருக்கு.


அபி - டேய் யுவன் உனக்கு என்ன ஆச்சு டா. ஏன் டா இந்த கருமத்த எடுத்து வந்திருக்க? அங்கேயே போட்டு வந்துட்டனு நினைச்சோம் டா.


ஷிவா - என்ன டா இது? என்ன விளையாடுறியா? எதுக்கு டா எடுத்துட்டு வந்த? அன்னைக்கு நம்ம அனுபவிச்சது போதாதா?


தீப்தி - டேய், இது அந்த பெட்டி இல்லனு சொல்லு டா.. பயமா இருக்கு எனக்கு. இப்போ தான் எல்லாம் நார்மல் ஆகிருக்கு. திரும்ப ஆரம்பிக்காத


நவ்யா - ஏன் யுவா சொல்லவே இல்லை. அங்கேயே ஒரு இடத்தில மறச்சி வைக்கலாம்ல ஏன் இங்க கொண்டு வந்த. இதனால பெரிய பிராப்ளம் வர வாய்ப்பு இருக்கு.


அனைவரும் மாற்றி மாற்றி ரவுண்ட் காட்டி யுவனை வறுத்து எடுத்தனர். எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தான். அபி , ஷிவா ஒரு படி மேலே போய் அவன் மீது பாய்ந்தனர். மூவருக்கும் சின்ன கைகலப்பு ஆக தீப்தி, நவ்யா வந்து பிரித்து விட்டனர்.


யுவன் - நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க எல்லாரும் என்றான் சத்தமாக.



எல்லாரும் அமைதியாக விட்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று பார்த்தனர்.


யுவன் - இதை எடுத்துட்டு வந்தது ரிஸ்க் தான் ஆன இதே பொருள் அங்க விட்டுட்டு வர்றதும் ஆபத்து தான்.



அபி - இதை நீ இப்படியே உன் கூடவே வெச்சிக்க போறியா?


யுவன் - நான் அப்படி சொல்லவே இல்லயே. எனக்கு வேற ஒன்னு தோணுது.


தீப்தி - அப்போ இதை வெச்சி என்ன டா செய்ய போற?


யுவன் அமைதியாக இருக்க… எல்லாரும் கடுப்பாகி விட்டனர்.


ஷிவா - யுவன் சொல்லு டா சீக்கிரம். இப்படியே அமைதியா இருந்த என்ன அர்த்தம் இதை வெச்சு என்ன செய்ய போற? என்று பொறுமை இழந்து கத்தினான்.


யுவன் அனைவரையும் ஒரு நிமிடம் பார்த்தவன்… மெதுவாக


யுவன் - திரும்ப அதை திறக்க போறேன்


அவன் சொன்ன அடுத்த நிமிடம் எல்லோரும் அவனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவன் இந்த பொருளை எங்கேனும் மறைத்து வைக்க நினைக்கிறான் என்று எல்லோரும் எண்ணி இருக்க… இவன் அதை திறக்க போகிறேன் என்று சொல்லுவது அதிர்ச்சியாக இருந்தது.



அபி - நல்லா தான டா இருக்க நீ. உனக்கு தலையில எதுவும் அடிபடலயே. ஏன் டா இப்படி எல்லாம் பேசுற. அங்க நடந்த சம்பவம் நீயும் பார்த்த தான. அது பார்த்த அப்புறம் கூட உனக்கு இப்படி எல்லாம் தோணுதா??


நவ்யா - யுவன் பிளீஸ். திரும்ப இதை எடுத்த இடத்தில வச்சிட்டு வருவோம். பிரச்சனை எல்லாம் சரியா போயிடும். இந்த மாதிரி எல்லாம் பண்ணாத பயமா இருக்கு டா.


அபி - சொல்லு டி அவன் கிட்ட நல்லா. பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்கான்.


யுவன் - என்ன ஆச்சு இப்போ? நீங்க எல்லாரும் மனசாட்சி தொட்டு சொல்லுங்க…. இங்க வந்த அப்புறமும் எங்கயோ உள்ள பெட்டியை நினைச்சி நீ பயப்படவே இல்லனு?? அந்த மிருகம் திரும்ப வரும்னு பயந்து பயந்து தான இருந்தீங்க? சரியா???


அது சரி தான் என்பது போல எல்லோரும் அமைதியாக இருந்தனர்.


யுவன் - ஏன்னு நான் சொல்லட்டுமா? ஏன்னா அந்த மிருகம் இன்னும் சாகல. அது இன்னும் உயிரோடு இருக்கு. அதான் அந்த பயம். அந்த மிருகம் அடச்சி தான் வைக்க பட்டு இருக்கு. அது ஒரு வேலை செத்து போயிருந்தா இந்த பயம் இருந்திருக்காது என்று அவர்கள் பயதுக்கான காரணம் சரியான சொன்னான்.



எல்லோரும் அவரவர் பயத்தை மறைத்து தான் வைத்து இருந்தனர். மனதின் ஓரத்தில் எங்கே மீண்டும் அந்த மிருகம் பலி வாங்க வந்துவிடுமோ என்ற பயம் எல்லா நாளும் இருந்தது உண்மை.


ஷிவா - உண்மை தான் டா. அதுக்கு இப்போ என்ன செய்யலாம்னு இருக்க?


தீப்தி - டேய் திரும்ப அந்த பெட்டியை திறக்க போறேன்னு மட்டும் சொல்லிடாத பிளீஸ்.


யுவன் - அன்னைக்கு அந்த மிருகம் சூரியன் ஒலி பட்டது திரும்ப இருட்டுக்கு உள்ள போயிடுச்சு. எனக்கு என்னமோ அதோட பலவீனம் வெளிச்சம்னு நினைக்கிறேன்.


அபி - அந்த மிருகம் பத்தி இருந்த குறிப்புல கூட இதை எப்படி அழிக்கணும்னு போடவே இல்லை. அப்புறம் எப்படி டா உறுதியாக சொல்ற?


யுவன் - அவங்களுக்கு அதோட பலவீனம் தெரியாம இருந்திருக்கலாம். அதான் அந்த மிருகத்தை அழிக்கிறதை விட்டுட்டு அடைச்சி வச்சி இருந்திருக்கலாம்.


நவ்யா - யுவா, இது எல்லாமே உன்னோட யூகம் தான். நம்ம இதை தூரமா யாரும் போகாத இடமா பார்த்து மறைத்து வைத்துட்டு வந்துரலாம் சரியா?


யுவன் - நான் சொல்லுறது யாருக்குமே புரியல. நம்மல பத்தி மட்டுமே யோசிக்காதீங்க. இந்த பொருள் அடுத்து யாரு கையிலையும் கிடைக்க கூடாதுனு நான் நினைக்கிறேன். அதுக்கு ஒரே வழி இதை அழிக்கிறது தான். இப்போ மதியம் நேரம். வெளிய வச்சி இதை திறக்க போறேன். கண்டிப்பா இது சாகும். எல்லாரும் பார்க்கத்தான் போறீங்க என்றவன் அந்த கண்ணாடி பெட்டியை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்து விட்டான்.


உச்சி வெயில் மண்டையை சூடாக்க எல்லாரும் கண்களை சுறுக்கிக்கொண்டு நடப்பவற்றை பயத்துடன் பார்த்தனர்.




ஒரு முறை எல்லோரையும் பார்த்து விட்டு…யுவன் மெதுவாக அந்த பெட்டியை திருக்க ‘ கிளிக் ‘ என்ற சத்தத்துடன் அந்த பெட்டி திறந்தது. உள்ளே இருந்து கூறிய நகம் கொண்டு கருப்பு நிற கால்கள் வெளியே வந்தது. அந்த மிருகம் தலையை கொண்டு வெளியே எட்டிப்பார்க்க… அவ்வளவு தான்… எல்லோரும் ஆளுக்கு ஒரு திசையில் ஒளிந்து கொண்டு அறைக்கண் கொண்டு பார்த்தனர்.


அதன் உடல் பொசுங்க ஆரம்பித்துவிட்டது வெயில் பட்டதும். கொஞ்சம் கொஞ்சமாக காற்றோடு காற்றாக கலந்து விட்டது. இதனை பார்த்த பின் தான் எல்லோரின் மனதில் இருந்த பயம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது.


எல்லோரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.


ஷிவா - மச்சி, இப்போதான் டா நிம்மதியாக இருக்கு. சூப்பர் டா


அபி - நீ நல்லா இருப்ப டா… போடா என்றான் வடிவேல் பாணியில்.


நவ்யா தீப்தி ஆளுக்கு ஒரு பக்கம் வந்து அணைத்துக்கொண்டனர். எல்லார் முகத்திலும் அப்போது தான் உண்மையான சந்தோசம் காணப்பட்டது. அதுக்கு தான யுவன் இவ்வாறு ரிஸ்க் எடுத்தான். அவனுக்கும் இப்போது தான் நிம்மதியாக இருந்தது.


யுவன் - பயம் எல்லாம் போயிடுச்சுனா…இப்போ சொல்லுங்க யாருக்கும் இந்த அழகாக கண்ணாடி பெட்டி வேணும்?? என்றதும்…

‘ எனக்கு இல்ல ப்பா’ என்று ஆளுக்கு ஒரு பக்கம் தெறித்து ஓடிவிட்டனர். யுவன் சிரிப்பு சத்தம் அவர்களை பின் தொடர்ந்தது.



---------------------------



If you're reading this kind of plot for the first time 😊, leave a 👍 (thumbs up) in the comment section.
 
Top